Social Icons

அன்புள்ள ராட்சசி - 16


 




அத்தியாயம் 27

இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!

வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!

உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!

வீட்டுக்கு வெளியே.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த காவல்த்துறை வாகனத்தின் மீது சாய்ந்திருந்தனர்.. அவர்களை சுற்றிலும் ஒரு மெலிதான புகை மூட்டம்.. அவர்களுடைய ஒரு கையில் பாதி காலியான டீ க்ளாஸ்.. இன்னொரு கையில் பாதி கரைந்திருந்த சிகரெட்..!! ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகம் ஒருமாதிரி இறுகிப் போயிருக்க.. அசோக்கின் முகமோ ஒருவித கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..!! அவனது பாக்கெட்டில் கிடந்த பென்டன்ட் தொடையை உறுத்த.. பலவித குழப்ப எண்ணங்கள் அவனது மூளையை உறுத்திக் கொண்டிருந்தன..!!

'மீரா ஒரு குற்றவாளி.. கொலைக்குற்றம் செய்திருக்கிறாள்.. அவள் செய்த குற்றத்துக்கு சட்டப்படி தண்டனை உண்டு..!! அப்படியிருக்கையில்.. அவளுடன் உனது வாழ்க்கையை பங்குபோட்டுக் கொள்ள நினைப்பது அறிவுள்ள செயலா..?' என்று.. அவனது புத்தி கிடந்து பதறியது..!! அதையெல்லாம் அவனுடைய காதல்மனம் அப்படியே புறந்தள்ளியது..!!

'குற்றம் செய்த எல்லோரும் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டுமா..? நம்நாட்டு அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் இதைக்கேட்டால்.. விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்களா..? பணமும், பதவியும் படைத்தவர்கள் எல்லாம் சட்டத்தை ஏய்த்து சந்தோஷமாக திரிகையில்.. பாவப்பட்ட என் மீரா மட்டும் எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.. அதுவும் இரு கொடியவர்களை கொன்று முடித்ததற்காக..? அவசியமே இல்லை..!! அவள் சிக்குவது என்னிடமாக இருக்கவேண்டுமே ஒழிய.. போலீஸின் வசம் அல்ல..!! அவள் வாழ வேண்டியது என் மனச்சிறையில்தானே ஒழிய.. மத்திய சிறையில் அல்ல..!!' என்பது மாதிரி இருந்தது அவனது இதயத்தில் எழுந்த எண்ணம்..!!

காதலியை கண்டுபிடிக்கிற காரியத்துக்கு.. காவல்துறையை ஒரு கருவியாகத்தான் இத்தனை நாள் அசோக் கருதியிருந்தான்.. இனி அப்படி கருதுவதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்தது..!! சற்று ஒதுங்கியிருப்பதுதான் நல்லது.. இனி மீராவைப்பற்றி போலீஸிடம் என்ன பேசினாலும்.. அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும் என்று தோன்றியது..!! ஏற்கனவே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் பேசிய சில விஷயங்களே.. மீராவுக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடியவைகளாக இருந்தன..!!

"கைல ஒரு ப்ரேஸ்லட் போட்ருப்பா ஸார்.. அதுல ஹார்ட் ஷேப்ல ஒரு கோல்ட் பென்டன்ட் தொங்கும்..!!"

மீராவின் அங்க அடையாளங்களை பற்றி ஸ்ரீனிவாச பிரசாத்திடம் முன்பு சொன்னபோது.. அந்த பதக்கத்தைப் பற்றியும் அசோக் குறிப்பிட்டிருந்தான்..!! அசோக்கின் கண்ணில்பட்ட அந்த பதக்கம் மட்டும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பார்வையில் சிக்கியிருந்தால்.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது மாதிரி காவல்த்துறையின் வேலை மிக எளிதாக முடிந்து போயிருக்கும்..!! அந்த பதக்கம் தனது கண்ணில் பட்டதற்காக, அசோக் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்..!! காவல்த்துறையின் பிடியில் இருந்து மீராவை காப்பாற்றிவிட்டது போன்றொரு திருப்தி அவனுக்குள்..!!

அதேநேரம்.. போலீஸின் உதவியில்லாமல் மீராவை எப்படி தேடிக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற கேள்வியும்.. அவன் மனதில் எழாமல் இல்லை..!! ஒருசில யோசனைகள் அவன் மூளையில் உதித்தாலும்.. அவை யாவுமே வலுவான யோசனைகளாய் அவனுக்கு படவில்லை..!! இருந்தபோதிலும்.. எத்தனை கஷ்டப்பட நேர்ந்திட்டாலும்.. இனி போலீஸின் உதவியை மட்டும் நாடக்கூடாது என்று மட்டும், மனதுக்குள் ஒரு உறுதியான முடிவெடுத்துக் கொண்டான்..!!

'நானே தனியா அவளை தேடிக் கண்டுபுடிக்கணும்.. போலீஸ்ட்ட மட்டும் அவ பிடிபட்டுட கூடாது..!!'

"ஹ்ம்ம்.. அதுலாம் அவளை புடிச்சுடலாம்.. எங்க எஸ்கேப் ஆயிட போறா..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் திடீரென அவ்வாறு சொன்னதும்.. அசோக் சற்றே பதறிப்போய் அவரை திரும்பிப் பார்த்தான்.. அவன் முகத்தில் ஒருவித திகைப்பு..!! ஸ்ரீனிவாச பிரசாத்தோ.. ஒரு மெலிதான புன்முறுவலுடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்..!!

"எ..என்ன ஸார் சொல்றீங்க..??" அசோக்கின் குரல் தடுமாற்றமாக ஒலித்தது.

"இல்லடா.. அந்த விஜயசாரதிட்ட இருந்து, உன் ஆள் பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைக்கும்னு நெனச்சோம்.. அவன் என்னடான்னா இங்க செத்துப்போய் கெடக்குறான்..!! அவளை கண்டுபிடிக்க இருந்த ஒரே சான்ஸும், இப்படி ஆயிருச்சேன்னு நெனச்சு நீ வொர்ரி பண்ணிக்காத.. கூடிய சீக்கிரம் எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னேன்.. புரியுதா..??"

அசோக்கின் தடுமாற்றத்தை கவனியாமல், ஸ்ரீனிவாச பிரசாத் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சொன்னார். அவர் அவ்வாறு சொன்னதும்தான், அவ்வளவு நேரம் நின்று போயிருந்த அசோக்கின் மூச்சு இப்போது நிம்மதியாக வெளிப்பட்டது.

"ம்ம்.. பு..புரியுது ஸார்..!!" என்றான் உலர்ந்த குரலில். ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது அசோக்கின் தடுமாற்றத்தை கண்டுகொண்டார்.

"எ..என்னடா ஆச்சு.. கண்டுபிடிச்சுடலாம் சொல்றேன்.. உன் மூஞ்சில ஒரு எக்ஸ்ப்ரஸனே காணோமே..??"

"ஒ..ஒன்னும்.. ஒன்னுல்ல ஸார்..!!" என்ன பதில் சொல்வதென்று திணறிய அசோக்கிற்கு,

"ஹ்ம்ம்.. ரத்தத்தை பார்த்த ஷாக் இன்னும் போகலையா..??" ஸ்ரீனிவாச பிரசாத்தே உதவி செய்தார்.

"ஆ..ஆமாம்..!!"

"ஹ்ஹ.. இட்ஸ் ஓகே.. நைட் தூங்கி எந்திரிச்சா, காலைல எல்லாம் சரியா போயிடும்..!! உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான்..!! எனக்கு இதுலாம் பழகிப் போச்சு..!!"

ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அமர்த்தலாக சொன்னதும்.. அசோக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்..!! புகை உள்ளிழுத்து குபுகுபுவென வெளியிட்டவாறே.. எதையோ தீவிரமாக யோசித்தான்..!! பிறகு மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஆழம் பார்ப்பது மாதிரி.. மெல்லிய குரலில் அந்த கேள்வியை கேட்டான்..!!

"யா..யாரு இதை பண்ணிருப்பாங்க ஸார்..??"

"எதை..??"

"இ..இந்தக் கொலையை..!!" அசோக் அந்த மாதிரி தயக்கமாக சொன்னதும், ஸ்ரீனிவாச பிரசாத் பட்டென சிரித்துவிட்டார்.

"ஹாஹா..!! டேய்.. என்னை என்ன மந்திரவாதின்னு நெனச்சுட்டியா.. இங்க்-க வெத்தலைல தடவி பட்டுன்னு சொல்றதுக்கு..?? எல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்..!! ஹ்ம்ம்.. அதுவும்கூட இப்போ என் வேலை கெடையாது.. எல்லாம் ரெட்ஹில்ஸ் போலீஸ் பாத்துப்பாங்க.. கொலை செஞ்சது யாருன்னு அவங்க கண்டுபிடிப்பாங்க..!!"

"தெ..தெரியும் ஸார்.. சும்மா கேட்டேன்..!!"

மெலிதான புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அமைதியானான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் எதையோ நினைத்துக்கொண்டு புருவத்தை நெறித்தார். ஒரு திடீர் யோசனை தோன்றியவராய் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.

"அ..அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..??"

"என்ன ஸார்..??"

"உன் ஆள் பத்தி ரெட்ஹில்ஸ் போலீஸ்ட்ட சொல்லலாமா..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கும்போதே, அசோக்கின் உடலில் சுரீர் என்றொரு மின்சாரம் பாய்ந்தது.

"மீ..மீரா பத்தியா..??"

"ம்ம்..!!"

"எ..என்ன சொல்லலாம்னு சொல்றீங்க..??"

"அதான்டா.. இந்த விஜயசாரதி உன் ஆளை லவ் பண்ற மாதிரி நடிச்சது.. அவளை அனுபவிச்சுட்டு அப்புறம் ஏமாத்தினது.. அதனால ஆம்பளைங்கன்னாலே உன் ஆளுக்கு ஒரு வெறுப்பு இருந்தது.." ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக்கொண்டு போக, அசோக் இடையில் புகுந்து அவரை தடுத்தான்.

"ஹையோ ஸார்.. அ..அதுலாம் ஜஸ்ட் என்னோட அஸம்ப்ஷன்தான..?? உ..உண்மையா இருக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..??"

"ஆமான்டா.. உன்னோட அஸம்ப்ஷன்தான்..!! அதைத்தான் இவங்கட்ட சொல்லலாம்னு சொல்றேன்..!!"

"அதை எதுக்கு இவங்கட்ட..??"

"புரியலையா..?? இந்த கொலையை பண்றதுக்கு உன் ஆளுக்கு ஸ்ட்ராங் மோட்டிவ் இருக்குன்னு இவங்கட்ட சொல்லலாம்.. ஐ மீன்.. அவங்க நம்புற மாதிரி பொய் சொல்லலாம்..!!"

"அ..அதனால என்ன யூஸ்..??"

"ரெட்டை கொலைடா..!! அதுல ஒருத்தன், சென்னைலயே முக்கியமான பிக் ஷாட்டோட பையன்..!! இன்வெஸ்டிகேஷன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கும்..!! உன் ஆளுக்கு மோட்டிவ் இருக்குன்னு மட்டும் இவங்க நம்பிட்டாங்கன்னு வச்சுக்கோ.. சும்மா விடமாட்டாங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடுவாங்க..!!"

"ஓ..!!"

"அவளை கண்டுபிடிச்சுடுறாங்கன்னு வச்சுக்கோ.. அப்புறம் அவகிட்ட என்கொய்ரி பண்றப்போ.. அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு இவங்களுக்கே தெரிஞ்சிடும்.. விட்டுடுவாங்க..!! அப்புறம் என்ன.. இவங்க மூலமா உனக்கு உன் ஆளு கெடைச்சுடுவா.. எல்லாம் சுபம்..!! சிம்பிளா சொல்லப்போனா.. இந்த மர்டர் சம்பந்தமான இன்வெஸ்டிகேஷனை.. உன் ஆளை தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. இப்போ புரியுதா..??"

"புரியுது ஸார்.. ஆ..ஆனா.."

"என்ன ஆனா..??"

"அ..அந்த மாதிரி பண்ணுனா.. மீரா பத்தின விஷயம் ந்யூஸ்பேப்பர்ல-லாம் வரும்ல..??" அசோக் கேட்க, ஸ்ரீனிவாச பிரசாத் நெற்றியை சுருக்கினார்.

"ஆ..ஆமாம்..!!"

"எ..எல்லாம் என்னோட அஸம்ப்ஷன்தான்.. இருந்தாலும்.. ஒ..ஒருவேளை.. ஒருவேளை அது உண்மையா இருந்தா.. அவ வாழ்க்கைல நடந்த அந்த அசிங்கம்.. அப்புறம் ஊருக்கே தெரிஞ்சு போயிடும்.. இல்ல..??"

"ம்ம்..!!" அசோக் எங்கே வருகிறான் என்று ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு இப்போது தெளிவாக புரிந்தது.

"வேணாம் ஸார்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல..!!"

"இ..இல்லடா.. கொஞ்சம் யோசி.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு.."

"அவளை கண்டுபிடிக்கிறது எனக்கு முக்கியந்தான் ஸார்.. ஆனா அதை விட.. அவளுக்கு எந்த களங்கமும் வராம பாத்துக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம்..!! அவளை என் உயிரைவிட அதிகமா நேசிக்கிறேன்.. என்மூலமா அவளுக்கு ஒரு கெடுதல் நடந்துச்சுனா.. சத்தியமா அதை என்னால தாங்கிக்கவே முடியாது ஸார்..!! அவ எனக்கு கெடைக்காட்டா கூட பரவால.. இந்த மாதிரி ஊருக்கே அந்த விஷயம் தெரிஞ்சு, அவ அசிங்கப்பட கூடாது..!! ப்ளீஸ் ஸார்.. தயவு செஞ்சு மீரா பத்தி எந்த விஷயமும் இவங்கட்ட சொல்லிராதிங்க.. நான் சொன்னதெல்லாம் உங்க மனசோடவே இருக்கட்டும்.. ப்ளீஸ் ஸார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்..!!"

அழுதுவிடுகிற குரலில் படபடவென அசோக் கெஞ்சலாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் அவனையே திகைப்பாக பார்த்தார். அந்தப்பார்வையில் 'ஏமாற்றி சென்றவள் மீதுதான் இவனுக்கு எத்தனை காதல்..?' என்பது மாதிரியான பிரமிப்பும் கலந்திருந்தது. முழுதும் கரைந்துபோன சிகரெட் இப்போது அவருடைய விரலை சுட, கையை உதறி அதனை விசிறினார். தலையை மெலிதாக உலுக்கிக்கொண்டவர், வேறுபக்கமாக பார்வையை வீசினார். தூரத்தில் கேட்டுக்கருகே தெரிந்த மனித கும்பலை வெறித்தவாறே, எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.




அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!

'மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!'

மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..

"என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??"

அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,

"ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!" என்றார் மெலிதான புன்னகையுடன்.

"அதனால என்ன ஸார்.. பரவால..!!" சொன்ன மலரவன் அவரை நெருங்கி,

"Can I borrow a cigarette..??" என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.

உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!

"வெப்பன் கெடைச்சதா ஸார்..??" கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.

"எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!" பதில் சொன்னார் மலரவன்.

"ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??"

"பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் 'ம்ம்.. ம்ம்..'ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்... அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்.."

"என்ன..??"

"உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!!"

"ஷ்யூர்.. அதனால என்ன.. குடுத்திடலாம்..!!"

"தேங்க்ஸ்..!! இப்போ வேணாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.. சரியா..?? ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. உங்களை இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.."

"கேளுங்க..!!"

"நீ..நீங்க எப்படி.. இ..இந்த நேரத்துக்கு.. கரெக்டா இங்க..??"

நெற்றியை சுருக்கியவாறு மலரவன் அந்தமாதிரி கேட்க.. அத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அசோக்கின் மனதுக்குள்.. இப்போது திடீரென ஒரு கலக்கம்..!! படக்கென பக்கவாட்டில் திரும்பி ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஏறிட்டான்.. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று.. பதற்றம் அப்பிய முகத்துடன் அவரையே பார்த்தான்..!! அவரும் தனது முகத்தை திருப்பி, அசோக்கை ஒரு சலனமற்ற பார்வை பார்த்தார்.. பிறகு மலரவனிடம் திரும்பி..

"நாங்க.. ஒரு ஃப்ராட் பொண்ணை ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கோம் ஸார்..!!" என்றார்.

"ஓகே..!!"

"அந்தப்பொண்ணு யூஸ் பண்ணின மொபைல் நம்பர்.. இந்த விஜயசாரதியோட பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருந்தது.. அது சம்பந்தமா விசாரிக்கத்தான் வந்தோம்..!!"

"ஓ..!! ம்ம்... அப்போ அந்தப்பொண்ணுக்கும் இந்த பையனுக்கும்..??" மலரவன் கேள்வியாக பார்க்க,

"இல்ல.. எந்த சம்பந்தமும் இல்ல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொன்னார். சொன்னவர் கோர்வையாக மேலும் தொடர்ந்தார்.

"ரெண்டு வாரம் முன்னாடியே.. விஜயசாரதி கூட நான் ஃபோன்ல பேசினேன்.. அப்போவே தெளிவா சொல்லிட்டான்.. இவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு..!! ஆக்சுவலா.. இவன் யூ.எஸ் போறதுக்கு முன்னாடியே.. இவனோட செல்ஃபோனை எங்கயோ தொலைச்சிருக்கான்.. அது அந்தப்பொண்ணு கைல சிக்கிருக்கு.. அவ அதே நம்பரை அவளோட ஃப்ராட் வேலைக்கு யூஸ் பண்ணிருக்கா.. தேட்ஸ் ஆல்..!!"

"ஹ்ஹ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்.. அப்படி என்ன ஃப்ராட் பண்ணினா அந்தப்பொண்ணு..??"

"பேங்க்ல லோன் வாங்கி தர்றதா சொல்லி.. ஒரு நாலஞ்சு பேர்ட்ட, பத்து லட்ச ரூபாக்கு மேல ஆட்டையை போட்டுட்டு.. ஆள் எஸ்கேப் ஆகிட்டா..!! ஒருமாசமா அலையுறோம்.. அவளை ட்ரேஸ் பண்ணவே முடியல..!!"

"ம்ம்ம்... செம கேடியா இருப்பா போல..??"

"சந்தேகமே வேணாம் ஸார்.. பயங்கர கேடி..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி,

"என்ன அசோக்.. சரிதான..??" என்று சற்றே கிண்டலான குரலில் கேட்டார்.

"ஆ..ஆமாம்..!!" அசோக் தடுமாற்றமாக சொன்னான்.

"ஹ்ம்ம்.. So.. What's your next move..??" மலரவன் அவ்வாறு கேட்க,

"Next move-னா..?? புரியல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் புரிந்தும் புரியாதவர் போல திரும்ப கேட்டார்.

"இல்ல.. இ..இப்போ இந்த விஜயசாரதியும் இல்ல.. அந்தப்பொண்ணை எப்படி கண்டு பிடிக்கப் போறீங்கன்னு கேட்டேன்..!!"

"ஹாஹா.. அது என் தலைவலி ஸார்.. உங்களுக்கு எதுக்கு..??"

அந்த விஷயத்தை பற்றி, அதற்கு மேலும் பேச தனக்கு விருப்பம் இல்லை என்பதை.. ஒரு சிரிப்புடன் ஸ்ரீனிவாச பிரசாத் நாசுக்காக சொன்னார்..!! மலரவனுக்கும் அது புரியாமல் இல்லை.. பதிலுக்கு புன்னகைத்தவர்..

"ஹாஹா.. ஆமாமாம்.. உங்க தலைவலி எனக்கெதுக்கு..?? எனக்குத்தான் ஏற்கனவே ரெட்டைத்தலைவலி வந்துடுச்சே.. அதைப்போய் என்னன்னு பாக்குறேன்..!!"

என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு.. சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு.. அங்கிருந்து நகன்றார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி.. 'என்னடா.. திருப்தியா..?' என்பது போன்ற பார்வையுடன் புன்னகைத்தார்..!! அசோக்கும்.. அவர் மலரவனிடம் பேசிய விதத்தில் விளைந்திருந்த ஒருவகை நிம்மதியுடன்..

"தேங்க்ஸ் ஸார்..!!" என்றான் மெலிதாக.

அத்தியாயம் 28

அசோக்கிற்கு வந்திருந்த அந்த நிம்மதி.. அதேசமயம் தனது படுக்கையறை மெத்தையில் வீழ்ந்து கிடந்த மீராவிடம்.. துளியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!! உள்ளம் முழுக்க அழுத்தத்துடன் வீடு நுழைந்தவளுக்கு.. உடைகளை மாற்றிக் கொள்கிற எண்ணம் கூட வரவில்லை..!! மூளைக்குள் குடைச்சலுடன் படுக்கையில் சரிந்தவள்.. முதுகு குலுங்க விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தாள்..!! அவளுடைய கண்களில் இருந்து வழிந்த நீர்த்துளிகள்.. கைக்குள் அகப்பட்டிருந்த அசோக்கின் புகைப்படத்தில் பட்டு தெறித்தன..!! அழுகையினூடே.. அவ்வப்போது அந்த புகைப்படத்துக்கு.. தனது சிவந்த உதடுகளால் முத்தங்களும் வைத்தாள்..!!

விஜயசாரதியின் விருந்தினர் மாளிகையில் வைத்து.. அசோக்கை காணநேரிடும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. அதுவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்..!! செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவளுக்கு.. தூரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருடன் நடந்துவந்த அவளது காதலன் காணக்கிடைத்தான்..!! ஒருகணம் என்ன செய்வதென்றே அவளுக்கு எதுவும் புரியவில்லை.. நீண்ட நாட்களுக்கப்புறம் பார்ப்பதற்கு வாய்த்த அந்த ஆசைமுகம்.. அவனுக்கு இணையாக நடந்து வந்த அந்த காவல்துறை அதிகாரி.. குருதியிலே குளித்து முடித்த மாதிரி வீட்டுக்குள்ளே இரட்டைப் பிணங்கள்..!!

தடுமாறினாள்.. மூளை சிந்திக்க மறுத்து சிக்கிக்கொண்டது.. கால்கள் நகர மறுத்து பிண்ணிக்கொண்டன..!! எப்படியோ ஒருவழியாக சமாளித்து சுதாரித்துக் கொண்டாள்.. அவசரமாய் யோசித்து ஒரு முடிவெடுத்தவள்.. அப்படியே பின்னால் நகர்ந்து வீட்டின் பின்புறம் ஓடினாள்..!!

அந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் சிக்காமல் தப்பித்து.. கல்லிலும் முள்ளிலும் கால்கள் வதையுற ஓடிக்களைத்து.. சீற்றமாக எதிரே வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தி.. 'சிந்தாதிரிப்பேட்டை போகணும்' என்றபடி ஏறியமர்ந்தபோதுதான்.. கையிலிருந்த அந்த செல்ஃபோன் சப்தம் எழுப்பியது..!! பதற்றத்துடனேதான் செல்ஃபோன் டிஸ்ப்ளேயில் பார்வையை வீசினாள்.. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு பனிச்சிதறல்..!!

எத்தனை நாட்கள் அந்த எண்களின் வரிசையை ஏக்கமாக பார்த்திருப்பாள்.. எவ்வளவு ஆசையாக அந்த எண்களை அவளது கட்டை விரல் டயல் செய்யும்..?? கண்ணில் விழுந்ததுமே காதலனின் தொடர்பு எண்கள் என்று பளிச்சென அவளுக்கு தெரிந்து போனது..!! பேசலாமா வேண்டாமா என மிகுந்த மனப் போராட்டத்துக்கு பிறகுதான்.. காலை பிக்கப் செய்து அவனுடன் பேசினாள்..!!

நேரில் அசோக்கின் முகத்தை பார்த்ததிலும், ஃபோனில் அவனது குரலை கேட்டதிலும்.. சிறிது நாட்களாக இறுகிப் போயிருந்த மீராவின் இதயம்.. இப்போது மீண்டும் இளக்கம் கொடுக்க ஆரம்பித்திருந்தது..!! அவளும்.. காதலுக்கும் கழிவிரக்கத்துக்கும் இடையில் சிக்குண்டு.. சிதையுற ஆரம்பித்திருந்தாள்..!!

'மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!'

அசோக் சற்றுமுன் ஃபோனில் தவிப்புடன் கதறியது.. இப்போது மீராவின் காதுக்குள் மீண்டும் ஒலிக்க.. அவளது அழுகை ஒலியின் டெசிபல் மேலும் அதிகமாகவே செய்தது..!! அழுதவாறே 'ஸாரிடா அசோக்' என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.. புகைப்படத்தில் படிந்திருந்த கண்ணீர் துளிகளை, கட்டைவிரலால் துடைத்தெடுத்தாள்..!!

'நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்கும்..!!'

அவளுக்குள் மீண்டும் அசோக்கின் குரல்..!! உடனே.. 'அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்து விடமாட்டோமா..??' என்றொரு ஏக்கமான உணர்வு.. மீராவின் மனதுக்குள் பரவியது..!! வேதனையில் பொசுங்கிக் கொண்டிருந்த அவளது இதயத்தை.. மெல்லிய மயிலிறகால் வருடிச் சென்றது அந்த உணர்வு..!!

'உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!!'

'என்மீதுதான் அவனுக்கு எத்தனை அப்பழுக்கற்ற காதல்..?? விலகிச் சென்றாலும் விட மறுக்கிறானே..?? களங்கம் பொருட்டல்ல கலந்திடலாம் வா என்றழைக்கிறானே..?? கலந்திடலாமா.. காற்றென இப்போதே கிளம்பி சென்று, காதலனின் நெஞ்சில் சாய்ந்து கவலைதீர அழலாமா..??'

ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொள்வது மாதிரி.. அவள் மனதுக்குள் ஒரு கற்பனை ஓட.. அந்த நொடியில்.. அவளுடைய மனதை இறுக்கிக்கொண்டிருந்த அழுத்தம் மொத்தமும்.. இலவம்பஞ்சென மாறிச்சிதறி அவளை விட்டகன்று.. அவளுக்கும் அப்படியே காற்றில் பறப்பது போலொரு இலகுவான உணர்வு..!! ஆனால் அடுத்த நொடியே.. அந்த மாதிரி நினைத்ததற்காக தன்னைத்தானே அவள் கடிந்து கொண்டாள்..!!

'ச்ச்சே.. ஏனடி பைத்தியம் இப்படி எல்லாம் மனதை அலைபாய விடுகிறாய்..?? 'உடலை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டவள் என்கிற உண்மையறிந்தும்.. உன்னுடனே வாழ்வினை பகிர்ந்துகொள்வதில் அவன் உறுதியாக இருக்கிறான்..' என்பதினால் உருவாகிட்ட உவகையோ..?? அவனுக்குத்தான் உன்மீது பித்து என்றால்.. உனக்கெங்கே போயிற்று புத்தி..?? அவனுடைய காதல் அழுத்தமானதுதான்.. ஆனால் அத்தகைய காதலுக்கு நீ பொருத்தமானவளா..?? யோசி..!!!!'

என்பது மாதிரி ஒரு எண்ணம் இப்போது அவளுக்குள் தோன்ற.. மீண்டும் கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்..!! அவளது உதடுகள் துடிக்க.. மூக்கு விசும்பிக் கொண்டது..!!

'வேண்டாத நினைப்பெல்லாம் வெட்டி எறிந்துவிடு.. எடுத்த முடிவில் எப்போதும் உறுதியாக இரு..!! அவனுக்கு நீ வேண்டாம்.. அவனுடைய நல்ல மனதிற்கு தகுதியான ஒருத்தியுடன்தான், அவனது இல்வாழ்க்கை அமைந்திட வேண்டும்.. அதை என்றும் மனதில் நிறுத்திக்கொள்..!!'

திரும்ப திரும்ப அந்த மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருநிலையில் நிறுத்தி வைக்க முயன்றாள்..!! ஆனால்.. அந்த முயற்சியில் அவளால் வெற்றி பெற முடியவில்லை..!! புள்ளிமானாய் துள்ளியோடிய மனதை கட்டிப்போட.. காய்ந்தகொடியாய் துவண்டிருந்த மீராவால் சற்றும் முடியவில்லை..!!

'கற்பென்பது உடல்ரீதியானதா.. மனரீதியானதா..??' - மனதின் ஓரத்தில் ஒரு பட்டிமன்றம்.

'அவன் மீது உனக்கு அளவிலா காதல் உள்ளது.. அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாவதற்கு, அந்தக்காதலை தவிர வேறென்ன தகுதி வேண்டிக் கிடக்கிறது..??' - நறுக்கென்று கேள்வி கேட்டது நல்ல மனதொன்று.

'உண்மையை சொல்லி காதலைப் பெற்றவர்களுக்குத்தான் அதெல்லாம் பொருந்தும்..!! அவனது கண்மூடித்தனமான காதலை உனக்கு சாதகமாய் உபயோகித்துக்கொள்ள.. இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறாயே.. வெக்கமாயில்லை உனக்கு..??' - பரிகாசம் செய்து பார்த்து ரசித்தது இன்னொரு மனது.

'இன்னும் ஐந்தே நாட்கள்தான்.. அப்புறம் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை..!! அதுவரை பொறுமையாக இரு.. தெளிவாக சிந்தி.. குழப்பத்திற்கு இடம் தராதே..!!' - தெளிவாகவே குழப்பியது அடுத்தொரு மனது.

அப்படியும் இப்படியுமாய் அல்லாடிய எண்ணங்கள்.. பிறகு வேறொரு நினைவு வந்ததும், ஒரு நிதான நிலையை அடைந்தது..!! சற்றுமுன் அசோக்கிடம் ஃபோனில் பேசிய கடைசி வார்த்தைகளின் நினைவுதான் அது..!!

'சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!!'

அந்த நினைவு வந்த பிறகு.. அவள் சிந்திய வார்த்தைகளை அவளே சற்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த பிறகு.. அத்தனை நேரம் குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த மனதில் ஒருவித நிம்மதி பரவுவதை அவளால் உணர முடிந்தது..!! அவள் இருந்த நிலைமையில் அந்த முடிவுதான் சரியென அவளுக்கு தோன்றியது.. அசோக்கை போலவே அவளும் காதலின் மீது பாரத்தை போட முடிவு செய்தாள்..!!

'பார்க்கலாம்.. நானாக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.. அப்படியே எடுத்தாலும், அது அவனை விட்டு விலகிப் போகிற முயற்சியாகவே இருக்கும்..!! உண்மையிலேயே எங்கள் காதலுக்கு சக்தி இருந்தால்.. எனது முயற்சியையும் மீறி, அந்த காதல் அவனுடன் என்னை சேர்த்து வைக்கட்டும்..!! இன்னும் ஐந்து நாட்கள்.. ஐந்தே ஐந்து நாட்கள்.. அதன்பிறகு அவனை விட்டு நான் வெகுதூரம் சென்று விடுவேன்.. அப்புறம் அவன் என்னை தேடிக்கண்டுபிடிப்பது நடவாத காரியம்..!! எங்களுடைய காதல் உண்மையானதாக இருந்தால்.. அந்தக் காதலுக்கென்று ஒரு வலிமை இருந்தால்.. நானும் அவனும்தான் கரம் கோர்க்கவேண்டும் என்பது விதியாக இருந்தால்.. இன்னும் ஐந்து நாட்களுக்குள், எனது இருப்பிடம் அறிந்து அவனே என் எதிர் வந்து நிற்கட்டும்.. அவனும் நானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளுமாறு ஆகட்டும்..!! பார்க்கலாம்.. எங்கள் காதலுக்கு எத்தனை ஆற்றல் உள்ளதென்று..!!'

அலைபாய்ந்த மனது இப்போது அமைதியாகிப் போய்விட.. அத்தனை நேரம் உறக்கம் இல்லாமல் உருகிக் கொண்டிருந்த கண்களும், மெல்ல மெல்ல மூடிக் கொண்டன..!! எப்போது உறங்க ஆரம்பித்தோம் என்ற உணர்வே இல்லாமல்.. மீரா நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்து போனாள்..!!

இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால்.. காலையிலும் அவள் எழுந்து கொள்ள தாமதமானது..!! சுள்ளென்று கன்னத்தில் வெயில் அடித்த போதிலும்.. சுரணையற்று சுருண்டு கிடந்தாள்..!! கடிகாரத்தின் சின்ன முள் ஒன்பதை தொட்ட சமயத்திலும்.. கடைவாயில் நீரொழுக தலையணை நனைத்து கிடந்தாள்..!!

பிறகு.. அவளுக்கு அருகே குப்புற கிடந்த செல்ஃபோன்.. 'விர்ர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்ர்...' என்று பதறி துடித்ததும்.. உடலும், தலையும் சிலிர்த்துக்கொண்டு உறக்கம் கலைந்தாள்..!! இமைகளை பிரித்து ஓரிரு வினாடிகள் மலங்க மலங்க விழித்தவள்.. அப்புறம் குப்புறக் கிடந்தவாறே துள்ளிய அந்த செல்ஃபோனை கையில் எடுத்தாள்..!! புதியதொரு எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பு அது..!! ஓரிரு வினாடிகள் குழம்பியவள்.. பிறகு கால் பிக்கப் செய்து.. தூக்கம் நிறைந்த குரலிலேயே சொன்னாள்..!!

"ஹ்..ஹலோ..!!"

"மேடம்.. நான் ஹீசுலியா ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன்..!!"

"ம்ம்.. சொல்லுங்க..!!"

"உங்க ஃப்ளைட் டிக்கெட்ஸ் ரெடி..!! அட்ரஸ் சொன்னிங்கன்னா.. வந்து டெலிவர் பண்ணிடுவோம்..!!"

கரகர குரலில் கேட்டவனுக்கு.. மீரா தனது வீட்டின் முகவரியை சொன்னாள்..!! எப்போ டெலிவர் பண்ணுவிங்க என்று இவள் கேட்க.. இன்னைக்கு ஈவினிங்கே என்று அந்த கரகர குரல் சொல்ல.. தேங்க்ஸ் என்று திருப்தியானாள்..!! காலை கட் செய்து.. செல்ஃபோனை மெத்தையின் ஓரமாய் தூக்கி போட்டாள்..!!

அவளுடைய முகம் உறங்கி வழிந்தாலும், மனம் இப்போது மிக தெளிவாக இருந்தது.. நேற்று இரவு இறுதியாய் எடுத்த முடிவினால் வந்திருந்த தெளிவு அது..!! இரவு மார்போடு அணைத்தபடி படுத்திருந்த அசோக்கின் புகைப்படத்தை இப்போது கையில் எடுத்தாள்.. காதலாக ஒரு பார்வை பார்த்தாள்.. இதமாக ஒரு புன்னகையை சிந்தினாள்.. ஈரமாக ஒரு முத்தம் வைத்தாள்..!! அருகிலிருந்த டேபிளில் புகைப்படத்தை வைத்துவிட்டு.. படுக்கையில் இருந்து எழுந்தாள்..!!

பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள்.. ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டாள்.. வாய்க்குள் ப்ரஷுடன் வாசலுக்கு வந்தாள்.. கீழே கிடந்த தினமலரை கையில் எடுத்தாள்..!! முதல் பக்கத்திலேயே.. கீழ்ப்புற கால்வாசி பரப்பை அடைத்திருந்தது அந்த செய்தி.. ரெட்ஹில்ஸ் ரெட்டைக்கொலை செய்தி..!! ந்யூஸ் பேப்பரை விரித்து வைத்து.. ஒரு கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து பல் துலக்கிக்கொண்டே.. அந்த செய்தியின் ஒவ்வொரு எழுத்தையும் மிக கவனமாக வாசித்தாள்..!!

பல் துலக்கி முடித்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய், சமயலறைக்கு சென்று.. அந்த பிளாஸ்டிக் கேனை கையில் எடுத்தாள்.. அப்படியே அந்த பெரிய சைஸ் சமையலறை தீப்பெட்டியையும்..!! படுக்கையறைக்கு வந்து விஜயசாரதியின் செல்ஃபோனை கையகப்படுத்தினாள்.. வீட்டுக்கு பின்புறம் சென்றாள்.. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்து, யாரும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டாள்..!! செல்ஃபோனை கீழே விசிறி.. கேனில் இருந்த திரவ எரிபொருளை அதன் மீது ஊற்றி.. தீக்குச்சி கிழித்து விட்டெறிய.. குப்பென்று பற்றிக்கொண்டது நெருப்பு..!!

கொழுந்து விட்டெரிகிற தீஜுவாலையை பார்த்தவாறே சிறிது நேரம் சலனமில்லாமல் நின்றிருந்தாள்.. பிறகு சாம்பல் மிச்சத்தை அள்ளிக்கொண்டு மீண்டும் பாத்ரூம் சென்றாள்.. டாய்லட் சின்க்குக்குள் கொட்டி தண்ணீர் திறந்துவிட்டாள்..!! நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டாள்..!!

அப்படியே ஷவருக்கு அடியில் சென்று நின்று.. ஜில்லென்று சிதறிய நீரில் நனைந்தாள்.. குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டாள்..!! வேறு உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றாள்.. சீப்பு எடுத்து கேசம் வாரியபோதுதான் அதை கவனித்தாள்.. ப்ரேஸ்லட்டில் தொங்குகிற பென்டன்டை காணவில்லை..!!!!




'ப்ச்' என்று ஒரு சலிப்பை உதிர்த்தாள்.. 'எங்கே விழுந்திருக்கும்..' என்று நெற்றியை கீறினாள்.. 'ஒருவேளை அங்கே..??' என்பது மாதிரி ஒரு எண்ணம் தோன்றவும் உடல் சிலிர்த்துக் கொண்டது..!! 'சேச்சே.. அப்டிலாம் இருக்காது.. வேற எங்கயாவது விழுந்திருக்கும்..' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்..!!

படுக்கையறையில் தேடிப் பார்க்கலாம் என்று அவள் திரும்பிய போதுதான்.. திடீரென..

“கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்...!!!!”

என்று காலிங்பெல் சப்தம் எழுப்பியது..!! அந்த சப்தத்தை கேட்டதுமே, மீரா அப்படியே ப்ரேக் போட்ட மாதிரி டக்கென்று நின்றாள்.. கண்களில் மெலிதான ஒரு மிரட்சியுடன் திரும்பி, வாசற்கதவை வெறித்தாள்..!! அவளுடைய உடலில் ஒருவித பதற்றம் ஊற்றெடுக்க.. உதடுகள் சன்னமான குரலில் முணுமுணுத்தன..!!

"போலீஸ்..!!!!"

மீராவின் பென்டன்டை கைப்பற்றியதிலும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தை பேச விடாமல் தடுத்ததிலும்.. அசோக் மிகுந்த திருப்தியுற்றிருந்தான்..!! போலீசின் கவனத்தை மீராவின் பக்கம் இருந்து திருப்பியாயிற்று.. அவர்கள் அவளை நெருங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தான்..!! அவன் செய்த விஷயங்கள் மீராவுக்கு மிகவும் சாதகமான விஷயங்களாக அமைந்த போதிலும்.. போலீஸ் மீராவை நெருங்குவதை தவிர்க்கும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை..!!

அந்தவகையில் அசோக்கை விட மீரா மிகவும் கூர்மையாக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! விஜயசாரதியை பார்ப்பதற்கு கிளம்பும்போது, சமையலறை சென்று அந்த கத்தியை எடுத்து தனது கைப்பைக்குள் திணித்தாளே.. அந்த நொடியே.. அடுத்தநாள் தன் வீட்டு வாசலில் வந்து போலீஸ் நிற்கும் என்பதை தெளிவாக அறிந்தே வைத்திருந்தாள்..!! அதனால்தான்.. இப்போது கதவை திறந்ததும்.. எதிர்ப்பட்ட இரண்டு காக்கி உடுப்புகளை பார்த்து.. அவளால்..

"எஸ்..!!" என்று இயல்பாக சொல்ல முடிந்தது..!!

கான்ஸ்டபிள்கள் இருவர் மீராவின் வீட்டை அணுகியிருந்த அதே சமயத்தில்.. அசோக் ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில்தான் இருந்தான்.. அவனுடன் ஸ்ரீனிவாச பிரசாத்தும் இருந்தார்..!! இருவரும் சேர்ந்து.. முதல்நாள் நடந்த சம்பவத்தினைப் பற்றி.. ஒரு ஃபார்மல் ஸ்டேட்மன்ட் எழுதி தர வேண்டி இருந்தது..!! அப்புறம்.. முதல்நாள் மலரவன் கேட்டுக்கொண்ட மாதிரி.. இருவரது கைரேகை பிரதிகளையும் ரெட்ஹில்ஸ் போலீஸ் வசம் ஒப்படைத்தனர்..!! மலரவன் மேலும் சில கேள்விகளுடன் தயாராக இருந்தார்.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை திருப்தி செய்தனர்..!!

"​​விஜய சாரதியோட செல்ஃபோன் இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்நம்பர் வச்சு.. அவருக்கு நேத்து வந்த கால்லாம் ​ட்ரேஸ் ​பண்ணினோம்..​ ​லாஸ்டா உங்க நம்பர்ல இருந்துதான் அந்த நம்பருக்கு கால் போயிருக்கு.. ஐ மீன்.. கொலை நடந்த கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்..!!” மலரவன் சொல்லிவிட்டு அசோக்கை கூர்மையாக பார்த்தார்.

"ஓ..!!" அசோக் திகைப்பது போல நடித்தான். அவசரமாய் தன் செல்ஃபோன் எடுத்து பார்த்தான்.

“அந்த காலை யாரோ அட்டண்ட் பண்ணிருக்காங்க.. ஒருநிமிஷம் வரை அந்த​ கால் போயிருக்கு..!!"​

"தெ..தெரியல ஸார்..!! என் மொபைல பேன்ட் பாக்கெட்ல வச்சிருந்தேன்.. தானா டயல் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. நிச்சயமா நானா பண்ணல..!!"

"கொலை பண்ணினவங்கதான் செல்ஃபோனை எடுத்துட்டு போயிருக்கனும்.. அவங்கதான் அந்த காலையும் அட்டன்ட் பண்ணிருக்கணும்..!!"

"இருக்கலாம் ஸார்..!! நான் ஆக்சிடண்டா டயல் பண்ணின மாதிரி.. அவங்களும் ஆக்சிடண்டா கால் பிக்கப் பண்ணிருக்கலாம்..!! தெரியல ஸார்.. ஐம் நாட் ஷ்யூர்..!!"

அசோக்கின் சமாளிப்பை நம்புவதை தவிர மலரவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. ​ அசோக்கிற்கு பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று அவர் உறுதியாக நம்பியதால்.. அவன் சொன்ன அந்த ஆக்சிடன்ட் டயல் லாஜிக்கை ஒரு பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டார்..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட சில பொதுவான கேள்விகளுக்கும்.. மலரவன் பதிலளித்தார்..!!

"மூர்த்தி ஸார் வந்தாச்சா..??"

"ம்ம்.. காலைலேயே வந்துட்டார்..!!"

"இன்வெஸ்டிகேஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மன்ட்..??"

"ப்ச்.. எதுவும் இல்ல ஸார்..!! என்ன மோட்டிவ்னு கூட இன்னும் தெரியல..!! பட்.. இன்வெஸ்டிகேஷன் புல் ஃஸ்விங்ல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ரெண்டு ஆங்கிள்ல இன்வெஸ்டிகேஷன் மூவ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!"

"ஓ.. என்ன ஆங்கிள்ஸ்..??"

"ஒன்னு.. மூர்த்தி ஸாரோட பிஸினஸ் எதிரிங்க யாராவது, அவர் மேல இருக்குற பகைல.. அவரோட ஒரே பையனை தீர்த்து கட்டிருக்காங்களான்னு..!! இன்னொன்னு.. அந்த காசிப்பயலோட ட்ரக் பெட்லிங் கேங்ல யாராவது.. அவன் மேல இருக்குற பகைல இதைப் பண்ணிருக்கலாமான்னு..!!"

"ஓகே ஓகே.. குட்..!!"

எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் அங்கிருந்து கிளம்ப.. ஒருமணி நேரத்துக்கும் மேலாகிப் போனது..!!

"ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி.. கேஸ் கோர்ட்டுக்கு வர்றப்போ.. நீ வர்ற மாதிரி இருக்கும்..!! உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??" கிளம்புகிற சமயத்தில் மலரவன் அசோக்கிடம் கேட்க,

"இ..இல்ல ஸார்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!" அவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.

அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் மலரவனின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.. வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்பில் ஏறிக் கொண்டனர்..!! சாவி திருகி ஜீப்பை கிளப்பினார் ஸ்ரீனிவாச பிரசாத்.. ஆக்சிலரேட்டரை மிதித்து வேகம் கூட்டினார்..!! அந்த ஜீப்.. காவல்நிலைய வளாகத்தின் நுழைவாயிலை தாண்டியபோது.. எதிர்ப்பக்கம் இருந்து இன்னொரு ஜீப் க்ராஸ் செய்து, காவல் நிலையத்துக்குள் நுழைந்தது..!! அந்த ஜீப்பில்.. பின் சீட்டில்.. அமர்ந்திருந்தாள்.. மீரா..!!!

ஒரு ஜீப்பில்.. 'அடுத்து என்ன செய்யப் போகிறோம்?' என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்..!! அடுத்த ஜீப்பில்.. எதைப் பற்றிய அக்கறையும் இல்லாமல்.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீரா..!! இரண்டு ஜீப்புகளும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாய் க்ராஸ் செய்து கொண்டன.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை..!! இருவரையும் சந்தித்துக்கொள்ள வைத்து.. அவர்களது காதலுக்கு உதவி செய்கிற மாதிரி ஒரு எண்ணம்.. பாழாய்ப்போன அந்த விதிக்கும் வரவில்லை..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. மீரா மலரவனின் முன்பு அமர்ந்திருந்தாள்..!! அவளுடைய இதயத்தின் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாயிருந்தது.. ஆனால் அந்த பதற்றத்தை தனது முகத்தில் காட்டாமல், மிக லாவகமாக மறைத்திருந்தாள்..!! சில வினாடிகள் அவளை ஏற இறங்க பார்த்த மலரவன்.. பிறகு மிக இயல்பாகவே தன் விசாரணையை ஆரம்பித்தார்..!!

"இது ஜஸ்ட்.. ஒரு ஃபார்மல் என்கொய்ரிதான்..!! நீங்க எதுவும் நெர்வஸ் ஆகிக்க தேவை இல்ல..!!"

"இ..இல்ல ஸார்.. ஆகல.. சொல்லுங்க..!!"

"ஹ்ம்ம்.. ந்யூஸ் பேப்பர் பாத்திருப்பிங்கன்னு நெனைக்கிறேன்....??"

"ம்ம்.. பார்த்தேன் ஸார்.. பாத்ததுக்கு அப்புறந்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது.. அப்படியே.. I was shocked..!! எப்படி சொல்றதுன்னு தெரியல.. I.. I just.. I couldn't believe that..!!"

பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து.. அழுதுவிடுகிற குரலில் சொன்னாள் மீரா..!! மிக திறமையாகவே நடித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. முணுக்கென்று அவளுடைய கண்களில் ஒருதுளி கண்ணீர் பூத்தது.. அதை அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்..!! அவளுடைய நடிப்பை மலரவன் அப்படியே நம்பிவிட்டார் போல தோன்றியது.. அவளது அழுகை அவரிடம் ஒரு பதற்றத்தை கொடுத்திருந்தது..!!

"ப்ளீஸ் மிஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..!!"

என்றார் கனிவான குரலில். உடனே மீரா ஒருமுறை மூக்கை விசும்பிக் கொண்டாள். விசும்பிக்கொண்டவள், ஒருவித குசும்புடன் கேட்டாள்.

"யா..யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சாச்சா ஸார்..??"

"இன்னும் இல்ல.. இப்போத்தான் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சிருக்கோம்.. கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்..!!"

"ம்ம்..!!
​​
"ஆக்சுவலி.. விஜய சாரதியோட செல்ஃபோன் எங்களுக்கு இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்லுக்கு வந்த கால்லாம் எங்களால கண்டு பிடிக்க முடிஞ்சது.. அது மூலமாத்தான் உங்க நம்பர் எங்களுக்கு கெடைச்சது..!!"

"ம்ம்.. புரியுது ஸார்..!!"

"அவர் இந்தியா வந்து ரெண்டு நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள அஞ்சாறு தடவை உங்களுக்கு கால் பண்ணி பேசிருக்காரு.. இல்லையா..??"

"எஸ்..!!

"ஹ்ம்ம்.. நேத்து ஈவினிங் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா..??"

மலரவன் அந்த மாதிரி கேட்டதும், மீரா படக்கென உஷாரானாள். நேற்று இறுதியாக விஜயசாரதியுடன் ஃபோனில் பேசியபோது, தான் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தது எந்த இடம் என்று அவசரமாக யோசித்தாள். யோசித்தவள்,

"அண்ணாநகர்ல ஷாப்பிங் போயிருந்தேன்.. மத்தபடி என் வீட்லதான் இருந்தேன்..!!" என்றாள் இயல்பான குரலில்.

"உங்க வீடு சிந்தாதிரிப்பேட்டைல..??"

"எஸ்..!!"

"உங்களுக்கும் விஜயசாரதிக்கும் எப்படி பழக்கம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"

தானும் விஜயசாரதியும் முதன் முதலாக சந்தித்துக்கொண்ட அந்த சம்பவத்தை.. மீரா இப்போது நினைவுக்கு கொண்டுவந்தாள்..!! அந்த நினைவு எப்போதும் அவளுக்கு வேதனையையே தரும்.. இன்றும் தந்தது..!! ஆனால் அந்த வேதனையை தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. சலனமற்ற முகபாவத்துடனே சொன்னாள்..!!

"I'm a nurse..!! வியாசர்பாடில.. மூர்த்தி சார்க்கு சொந்தமான ஒரு ஹாஸ்பிடல் இருக்குது.. அங்கதான் நான் வொர்க் பண்ணினேன்..!! மொதலாளின்ற முறைல விஜய் அந்த ஹாஸ்பிடல்க்கு அப்பப்போ வருவாரு..!! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருதடவை ஃப்ரண்ட்ஸோட வந்திருந்தாரு.. அவரோட ஃப்ரண்ட் யாருக்கோ மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வேணும்னு வந்திருந்தாரு..!! அன்னைக்குத்தான் நாங்க முதமுதலா மீட் பண்ணிக்கிட்டோம்..!!"

"ம்ம்..!!"

"நான் ஹாஸ்பிடல் ரெஸ்டாரன்ட்ல தனியா உக்காந்து சாப்பிட்டு இருந்தேன்.. அவர் எதிரே உக்காந்து சாப்பிட்டாரு.. அவரே தானா வந்து எங்கிட்ட பேசினார்.. ஃப்ரண்ட்ஷிப் வச்சுக்கிட்டாரு..!!" என்பதுவரை உண்மையை சொன்ன மீரா, அப்புறம் குரலை மாற்றாமலே ஒருசில பொய்களை சொன்னாள்.

"ரொம்ப நல்ல டைப்.. பணக்காரர்ன்ற பந்தா கெடையாது.. ரொம்ப டீசண்டா, கண்ணியமா நடந்துப்பாரு.. எனக்கும் அவரை ரொம்ப பிடிச்சு போச்சு..!! வீ ஆர் வெரி குட் ப்ரண்ட்ஸ்..!!!" மீரா அப்படி சொன்னதுக்கு மலரவன் மெலிதாக புன்னகைத்தார். அதை கவனித்த அவள்,

"எ..என்ன ஸார்.. சிரிக்கிறீங்க..??" என்று கேட்டாள்.

"ஒன்னுல்ல.. அந்த விஜயசாரதியை இவ்வளவு புகழ்றீங்களேன்னு பார்த்தேன்..!!"

"ஆ..ஆமாம்.. ஏன்..??"

"இல்ல.. இதுவரை நான் விசாரிச்ச வரைக்கும்.. அவரை பத்தி வேற மாதிரிதான் கேள்விப்பட்டேன்..!! ஹ்ம்ம்ம்ம்.. எனிவே.. அது அவங்க அவங்க வ்யூ..!! ஹ்ம்ம்.. உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!"

"ம்ம்.. சொல்லுங்க..!!"

"விஜயசாரதி இறந்து போறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி.. கடைசியா அவர் பேசுனது ரெண்டு பேர்ட்டதான்..!! ஒன்னு.. அவர் கூடவே இறந்து போன அந்த காசி.. இன்னொன்னு நீங்க..!!​" ​மலரவன் சொல்லிவிட்டு மீராவின் கண்களையே கூர்மையாக பார்க்க, அவளோ

"ஓ.. இஸ் இட்..??" என்று ஆச்சரியப்பட்டு அவரை குழப்பினாள்.

"எ..எஸ்.. நேத்து ஈவினிங் உங்ககிட்ட அவர் பேசின ஒரு அரை மணி நேரத்துலதான்.. மர்டர் நடந்திருக்கு..!!"

"ஓகே..!! எ..எனக்கு அது தெரியாது..!!"

"​ஹ்ம்ம்​.. லாஸ்டா அவர்கிட்ட நீங்க என்ன பேசுனிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"

"​ரெண்டு ​பேரும் நேர்ல மீட் பண்ணிக்கிறது பத்தித்தான் பேசிக்கிட்டோம்..​!! அவரை பாத்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு.. இவ்வளவு நாளா அவர் யூ.எஸ்ல இருந்தாரு.. இப்போ.. இன்னும் ஃபைவ் டேஸ்ல நான் கல்ஃப் கெளம்புறேன்.. அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான் திரும்ப வருவேன்..!! அதான்.. இந்த அஞ்சு நாள் விட்டா.. அப்புறம் ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே முடியாதுன்னு.. அதுக்கு நடுவுல ஒருநாள் மீட் பண்ணிக்க நெனச்சோம்..!! ஆக்சுவலா.. இன்னைக்கு மீட் பண்றதா இருந்தது.. அ..அதுக்குள்ள.. அதுக்குள்ள இப்படி.."

சொன்னதை முடிக்காமலே மீரா போலியாக விசும்ப ஆரம்பித்தாள்.. மலரவன் மீண்டும் தலையை சொறிந்துகொண்டார்.. அழுகிறவளை அவரே மறுபடியும் சமாதானம் செய்யுமாறு ஆகிப் போனது..!!

அதன்பிறகும் மலரவன் மீராவை பல கேள்விகள் கேட்டார்.. எல்லாமே விஜயசாரதி பற்றியும், அவனுக்கும் மீராவுக்கும் இருந்த நட்பு பற்றியுமான கேள்விகளாகவே இருந்தன..!! எல்லா கேள்விகளுக்கும் மீரா மிக இயல்பாக, புத்திசாலித்தனமாக, எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க முடியாத வகையில் பதில் சொன்னாள்..!! ஒரு கட்டத்தில் மலரவன் சலிப்படைந்து போனார்.. ஆரம்பத்தில் மீரா மீது இருந்த சிறிய சந்தேகமும் இப்போது அவருக்கு இல்லாமல் போயிருந்தது..!!

இருந்தாலும்.. அவளை சந்தேக லிஸ்டில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்பு.. இன்னும் ஒரு காரியம் செய்ய நினைத்தார்.. அவளுடைய கைரேகையை கலெக்ட் செய்துகொள்வதுதான் அது..!! அதை அவளிடம் நேரடியாக கேட்டு பெறுவதற்கும் அவருக்கு மனமில்லை.. அவள் பெண் என்பதும், அதிலும் அழகான பெண் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அவள் அறியாமலே அதை செய்யவேண்டும் என்று நினைத்தார்..!!

"வந்துமே கேட்ருக்கணும்.. ஏதோ ஞாபகத்துல மறந்துடுச்சு..!! ஏதாவது சாப்பிடுறீங்களா..?? காபி, டீ, ஜூஸ்..!!" என்று திடீரென கேட்டார்.

"இ..இல்ல ஸார்.. அதுலாம் வேணாம்..!!" மீரா தயங்கினாள்.

"பரவால.. சாப்பிடுங்க..!!"

"நோ ஸார்.. நீங்க மொதல்ல கேட்டு முடிங்க.. அப்புறமா.."

"கேக்க வேண்டியதுலாம் கேட்டு முடிச்சாச்சு.. அவ்வளவுதான்..!! ஏதாவது சாப்பிட்டு நீங்க வீட்டுக்கு கெளம்பலாம்..!!"

"ஓ..!!"

"சொல்லுங்க.. என்ன சாப்பிடுறீங்க..??"

"இ..இல்ல ஸார்.. ஒன்னும் வேணாம்..!!"

"நோ நோ.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. எங்க இன்வெஸ்டிகேஷனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க.. யு லுக் ஸோ டயர்ட் ஆல்ஸோ.. கண்டிப்பா ஏதாவது சாப்பிடனும்..!! சொல்லுங்க..!!" அவர் மிகவும் வற்புறுத்தவும்,

"ஓகே.. ஜூஸ்..!!" என்று மீரா ஒத்துக் கொண்டாள்.

மலரவன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு சொன்னார்.. அப்படி சொல்கையிலே கண்ணை சிமிட்டி அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு சிக்னல் கொடுத்தார்..!! கைரேகை சேகரிப்பதற்கான யுக்தி அது என்பதை.. அந்த கான்ஸ்டபிளும் புரிந்துகொண்டு ஜூஸ் எடுத்துவர நகர்ந்தார்..!!

மீரா உஷாராக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. மலரவன் அந்த கான்ஸ்டபிளுக்கு கண்ணால் கொடுத்த சிக்னலை.. அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. தனது கைரேகையை சேகரிக்கத்தான் இந்த கரிசன நாடகம் எல்லாம் என்பது.. அவளுக்கும் விளங்காமல் இல்லை..!!

விஜயசாரதியின் வீட்டில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டு கிளம்புகையில்.. அந்த வீட்டுக்குள் தனது கைரேகை படிந்திருக்க வாய்ப்பிருக்கிற இடங்களை எல்லாம்.. கைக்குட்டையால் துடைத்து முடித்து அவள் கிளம்பிய காட்சி.. இப்போது அவளது மனத்திரையில் பளிச்சிட்டது..!! மலரவனின் சிறுபிள்ளைத்தனமான இந்த முயற்சியை நினைத்து, அவளுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது.. அதை மிக எளிதாக அடக்கிக் கொண்டாள்..!!

இரண்டே நிமிடங்களில்.. மஞ்சள் நிறத்திலான பழச்சாறு நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளர்.. மீராவுக்கு முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது..!! அவள் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த டம்ளரை பற்றி.. கையில் எடுத்து உயர்த்தி.. அப்படியே தொண்டைக்குள் சரித்து.. மடக் மடக்கென முழுதும் குடித்து முடித்தாள்..!! கைக்குட்டையால் உதட்டை ஒற்றிக்கொண்டாள்..!! காலி டம்ளரை டேபிளில் வைக்காமல்.. மலரவன் முன்பாக உயர்த்தி பிடித்து காட்டியவாறே.. கொஞ்சம் கேலி கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்..!!

"இப்போ திருப்தியா ஸார்..??"

"வாட்..??" மலரவன் புருவத்தை சுருக்கினார்.

"இல்ல.. குடிச்சே ஆகணும்னு கம்ப்பெல் பண்ணுனிங்களே.. குடிச்சு முடிச்சாச்சு.. இப்போ திருப்தியான்னு கேட்டேன்..!!" கேட்டுவிட்டு மீரா புன்னகைக்க,

"ஹாஹா.. எ..எஸ் எஸ்.. திருப்தி..!!" மலரவன் ஒரு அசட்டு புன்னகையை சிந்தினார்.

"ம்ம்.. அப்போ நான் கெளம்புறேன் ஸார்..!!"

இயல்பான குரலில் சொன்ன மீரா.. டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு.. மலரவனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. சேரிலிருந்து எழுந்து.. திரும்பி விடுவிடுவென நடந்து.. ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள்..!!

அத்தியாயம் 29

அன்று மாலை ஐந்து மணி.. கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் அருகே அமைந்திருக்கிற ISKCON ராதாகிருஷ்ணா திருக்கோயில்..!! வழக்கத்தைவிட அதிகமாகவே கோவில் வளாகத்துக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! ஆடல்கோலத்தில் அழகுற வீற்றிருக்கும் ராதையையும் கிருஷ்ணனையும் தரிசிக்க.. ஆலயத்தின் வாயிலிலிருந்தே பக்தர்கள் நெருக்கியடித்தவாறு வரிசையில் நின்றிருந்தனர்..!! கோயிலின் சின்னஞ்சிறு மூலை முடுக்குகளில் கூட.. ஒரேயொரு மந்திரம் மட்டும் தெய்வீகமாக ஒலித்துக்கொண்டே இருந்தது..!!

"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா..
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே..!!
ஹரே ராமா ஹரே ராமா..
ராமா ராமா ஹரே ஹரே..!!"


அசோக்கும் பாரதியும் அப்போதுதான் தரிசனம் முடித்துவிட்டிருந்தனர்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் அமர்ந்து தற்போது இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு அருகிலேயே வாழைப்பழங்கள் எட்டிப்பார்க்கிற அர்ச்சனை பாத்திரம்..!! இருவரது கையிலும் இலையால் வேயப்பட்ட ஒரு கிண்ணம்.. அதில் நெய்யின் செறிவு நிறைந்து போயிருந்த பருப்புசாத பிரசாதம்..!! இருவருமே ஏதோ யோசனையாய் இருந்தனர்.. அவ்வப்போது பிரசாதத்தை விண்டு வாயில் போட்டுக் கொண்டனர்..!!

இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை எல்லாம்.. ஒன்று கூட ஒளிவு மறைவு இல்லாமல்.. அசோக் தன் அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தான்..!! மீராவுக்கு நடந்திருந்த கொடுமையையும்.. அசோக்கின் கவலையான மனநிலையையும்.. அவர்களது காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிற சிக்கலையும்.. பாரதி நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள்..!! ஆறுதல் வார்த்தைகளை சொல்லி.. நேற்றே மகனை தேற்றியும் வைத்திருந்தாள்..!!

இந்தமாதிரி கோயிலுக்கு வருவதெல்லாம் அசோக்கின் வழக்கம் கிடையாது.. இன்று ஏனோ அம்மா அழைத்தபோது அவனால் மறுக்க இயலவில்லை..!! கவலையும் குழப்பமும் அவனுடைய மனதில் நிறைந்து போயிருக்க.. கடவுளின் சந்நிதானத்தில் அதற்கான நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தானோ என்னவோ..!! கவலைக்கு காரணம் மீராவை தேடிக்கண்டுபிடிக்க முடியுமா முடியாதா என்பது.. குழப்பத்திற்கு காரணம் இரண்டு நாட்களாய் அவன் செய்த வேலைகள் எல்லாம் சரியா தவறா என்பது..!! அரிக்கிற குழப்பத்தை அடக்க முடியாமல்.. அசோக் இப்போது அம்மாவிடம் மெலிதான குரலில் சொன்னான்..!!

"நான் பண்றதெல்லாம் சரிதானான்னு சந்தேகமா இருக்கு மம்மி..!!"

"எ..எதை சொல்ற..??" பாரதி மகனின் பக்கமாய் முகத்தை திருப்பி கேட்டாள்.

"அதான் மம்மி.. அந்த பென்டன்ட்டை மறைச்சது.. எஸ்.பி ஸாரை பேச விடாம தடுத்தது.. போலீஸ்ட்ட பொய் சொன்னது..!!"

"ம்ம்.. அதுல என்ன சந்தேகம் உனக்கு..?? நீ செஞ்சதுல எந்த தப்பும் இல்ல அசோக்.. எல்லாம் சரிதான்..!!"

"இல்ல மம்மி.. நம்ம வசதிக்காக சட்டத்தை ஏமாத்துறது தப்பு இல்லையா..?? நமக்கு வேணா மீரா நல்லவளா தெரியலாம்.. ஆனா.. சட்டத்தோட பார்வைல அவ குற்றவாளிதான..??"

அசோக் அவ்வாறு கேட்கவும்.. பாரதி மகனின் கண்களையே கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்..!! அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல்.. சிலவினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவள்.. அந்த பேச்சை மாற்றும் விதமாக அவனிடம் கேட்டாள்..!!

"அந்த பையனோட செல்ஃபோனை மீரா தூக்கிட்டு போயிட்டான்னு சொன்னேல..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"அதை ஏன் அவ எடுத்துட்டு போனான்னு ஏதாவது யோசிச்சியா..??"

"யோசிச்சேன் மம்மி.. பட்.. எதுவும் புரியல..!!"

"ப்ச்.. என்னடா நீ.. இந்தக் காலத்து புள்ளையா இருந்துட்டு இப்படி சொல்ற..?? டெயிலி ந்யூஸ் பேப்பர்லாம் படிக்கிறியா, இல்லையா..?? 'செல்ஃபோனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல்..' னு எத்தனை ந்யூஸ் வருது..!!" பாரதி சொல்ல வருவது, இப்போது அசோக்கிற்கு புரிய ஆரம்பிக்க,

"................" அவன் அம்மாவையே யோசனையாக பார்த்தான்.




"மீராவை லவ் பண்ற மாதிரி நடிச்சு அவன் ஏமாத்திருக்கான்னு சொல்ற.. அமெரிக்கா போனவன் ரெண்டு நாள் முன்னாடிதான் இந்தியா வந்தான்னு சொல்ற.. வந்த ரெண்டாவது நாளே இப்படி நடந்திருக்கு..!! ஏமாத்திட்டு ஓடிப்போனவன் இந்தியா வந்தது இவளுக்கு எப்படி தெரியும்..?? நிச்சயமா அவன்தான் இவளை ஃபோன் பண்ணி வரவச்சிருக்கணும்..!! ரெண்டு பேரை இப்படி கொலை பண்ணி போட்ருக்கான்னா.. அவ்வளவு வெறி வர்ற அளவுக்கு அவனுக அவளை என்ன டார்ச்சர் பண்ணிருக்கணும்..?? அந்த செல்ஃபோனை கரெக்டா எடுத்துட்டு போயிருக்கான்னா.. அதுல ஏதோ விஷயம் இருக்கனுமா இல்லையா..??"

"இ..இருக்கணும் மம்மி..!!"

"கண்டிப்பா இருக்கணும்..!! அவளை அசிங்கமா படம் எடுத்து வச்சுட்டு அவங்க மிரட்டிருக்கனும்.. அதான் அவனுகள கொன்னுபோட்டுட்டு அந்த செல்ஃபோனை எடுத்துட்டு ஓடிருக்கா..!!"

"ம்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!"

"சட்டம் வேற, தர்மம் வேற அசோக்.. சரி தப்புன்றதும் ரெண்டுக்கும் வேற வேற..!!" மகன் முதலில் கேட்ட கேள்விக்கு, பாரதி இப்போது திடீரென வந்தாள்.

"எ..என்ன மம்மி சொல்ற..??" சுருங்கிய புருவத்துடன் அசோக் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

"பொண்ணுகளை கிள்ளுக்கீரையா, வெளையாட்டு பொம்மையா, வெறும் போகப்பொருளா நெனைக்கிற ரெண்டு அரக்கனுகளை கொன்னது.. சட்டத்துக்கு வேணா தப்பா தெரியலாம் அசோக்.. ஆனா தர்மப்படி அது தப்பே இல்லடா..!!" தீர்க்கமான குரலில் சொன்ன அம்மாவை, அசோக் திகைப்பாக பார்த்தான்.

"மம்மி.."

"சட்டம்ன்றது மனுஷங்களா வச்சுக்கிட்டதுதான்டா மகனே..!! ஆனா.. தர்மம்ன்றது அந்த ஆண்டவன் விதிச்சது..!! காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி சட்டதிட்டம் மாறும்.. தர்மம் எப்போவும் மாறாது..!! உலகம் பொறந்த நாள்ல இருந்து தர்மம்ன்றது எப்போவும் ஒண்ணுதான்..!!"

"................"

"அதர்மம் தலை எடுக்குறப்போலாம் நானே அவதாரம் எடுத்து வருவேன்னு.. கீதைல கிருஷ்ண பரமாத்மா சொல்லிருக்காரு..!! மீரா ரெண்டு அரக்கனுகளை கொன்னுருக்கான்னா.. அவளை ஏன் நாம ஒரு அவதார பொறப்பா நெனைக்க கூடாது..??"

"................"

"அந்த ஆண்டவனோட சன்னிதானத்துல இருந்துதான் இதை சொல்றேன் அசோக்.. சொல்றப்போ எனக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தல..!!"

அம்மா சொல்ல.. அசோக் இப்போது சற்றே தலையை திருப்பி பின்னால் பார்த்தான்.. தூரத்தில் புல்லாங்குழலுடன் சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கண்ணில் பட்டார்..!! விஜயசாரதியின் வீட்டில் பார்த்த ரத்தத்தில் தோய்ந்த கிருஷ்ணனின் சிலை இப்போது அவனுடைய நினைவுக்கு வர.. மனதில் இருக்கிற குழப்பம் மெல்ல விலகுவது போல ஒரு உணர்வு..!! கூடவே.. விஜயசாரதி என்கிற பெயர் கூட கிருஷ்ணனைத்தான் குறிக்கும் என்கிற யோசனையும் வர.. அவனது உதட்டில் மெலிதான ஒரு புன்னகை பரவியது..!!

பாரதி தோடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

"நம்ம கைல எதுவும் இல்ல அசோக்.. நடக்குறதுக்குலாம் ஏதோ காரணம் இருக்கு..!! அந்த நேரத்துக்கு நீ எதுக்கு சரியா அந்த எடத்துக்கு போகணும்..?? அந்த பெண்டன்ட் எதுக்கு கரெக்டா உன் கண்ணுல மட்டும் படணும்..?? அந்த எஸ்.பிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. அவர் எதுக்கு உனக்கு ஹெல்ப் பண்ணனும்.. மீரா பத்தின விஷயத்தை போலீஸ்ட்ட இருந்து அவர் மறைக்கணும்..?? நல்லா யோசிச்சு பாரு.. எல்லாத்துக்கு ஏதோ காரணம் இருக்குற மாதிரி தெரியல..??"

"ம்ம்..!!"

"மீராவுக்கு தண்டனை கெடைக்கனுமா இல்லையான்றத முடிவு பண்ண வேண்டியது நீயோ, நானோ, போலீஸோ இல்லடா.. அந்த ஆண்டவன்..!! தேவையில்லாததை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசி..!! போலீஸ் உதவி இல்லாம மீராவை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு எதாச்சும் யோசிச்சியா..??"

அம்மா பேசிய வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தினை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அசோக்.. பாரதி அந்த மாதிரி கேட்டதும் அந்த யோசனையில் இருந்து விடுபட்டான்..!! பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான்..!! நேற்று இரவு.. கொலையான வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பு.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை தனியாக அழைத்து.. அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, இப்போது அவனது நினைவுக்கு வந்தது..!! கேஷுவலாக சில கேள்விகளை கேட்டு.. விஜயசாரதியை பற்றி சில விஷயங்களை.. அவர் மூலம் அறிந்து கொண்டிருந்தான் அசோக்..!!

"இல்ல.. ஸ்கூல் மட்டுந்தான் சென்னைல படிச்சாரு.. டிக்ரி படிச்சதுலாம் ஹைதராபாத்ல..!!" அவர் அந்த மாதிரி சொன்னதும் அசோக்கிற்கு சுருக்கென்று இருந்தது.

"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" என்று மீரா எப்போதோ சொன்னது திடீரென ஞாபகத்துக்கு வந்தது.

மீரா ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாள் என்று ஆரம்பத்தில் அவன் நம்பியிருந்தான். அவள் சரளமாக தெலுங்கு பேசியதும் அவனது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருந்தது. பிறகு ஃபுட்கோர்ட் விளம்பர போர்டை பார்த்ததும், அது பொய்யென்று நினைத்தான். இப்போது கே.கே.மூர்த்தியின் பி.ஏ இப்படி சொன்னதும், மீண்டும் 'மீராவும் ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாளோ.. அங்குதான் அவளுக்கும் இந்த விஜயசாரதிக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்குமோ..?' என்கிற ரீதியில் அவனுக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??"

கிஷோரின் அக்கா பவானி சொன்னது வேறு மூளையில் பளிச்சிட, அவன் மேலும் குழம்பிப் போனான். அவனுடைய புத்தி மெல்ல மெல்ல, தவறான புரிதலின் ஆழத்துக்கு செல்ல ஆரம்பித்தது. அந்த தவறான புரிதலுடன்தான்..

"மீரா டிக்ரி படிச்சது ஹைதராபாத்தா இருக்கும்னு நெனைக்கிறேன் மம்மி..!!" என்று இப்போது பாரதியிடம் சொன்னான்.

"ஓ.. எப்படி சொல்ற..??"

அசோக் தனது அனுமானத்தை அம்மாவிடம் விளக்கி கூறினான்.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவிடம் பேசியது பற்றி.. மீரா முன்பு தன்னிடம் குறிப்பிட்டது பற்றி.. எல்லாம் அவளிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்..!!

"ரெண்டு பேரும் ஒரே காலேஜ்லதான் படிச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. அங்கதான் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆகிருக்கணும்..!! அந்த காலேஜ்ல போய் விசாரிச்சா.. கண்டிப்பா மீரா பத்தி ஏதாவது லீட் கெடைக்கும் மம்மி..!!"

"ஹ்ம்ம்.. அந்த காலேஜ் பேரு, அந்தப் பையன் எந்த வருஷம் படிச்சு முடிச்சான்.. அதுலாம் அவர்ட்ட விசாரிச்சியா..??"

"ம்ம்.. எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன்..!!"

"அப்புறம் என்னடா.. உடனே கெளம்ப வேண்டியதுதான.. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??"

"இன்னைக்கு நைட் கெளம்புறேன் மம்மி.. கிஷோரும் கூட வர்றேன்னு சொல்லிருக்கான்..!!"

"ம்ம்.. நல்லது..!! உடனே கெளம்பு.. அந்த காலேஜ்ல போய் விசாரி.. ஏதாவது தகவல் கெடைக்கும்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!"

"மீரா எனக்கு கெடைப்பாளா மம்மி..??" அசோக் திடீரென அந்த மாதிரி ஏக்கமாக கேட்கவும், பாரதி புன்னகைத்தாள்.

"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!" நம்பிக்கையாக சொல்லிவிட்டு, மகனின் தலைமுடியை கோதிவிட்டாள்.

அன்று இரவே அசோக்கும் கிஷோரும் ஜெட் ஏர்வேஸில் ஹைதராபாத் கிளம்பினார்கள்.. ஒரு மணி நேர பயணத்தின்பின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் வந்து இறங்கினார்கள்.. பஞ்சாரா ஹில்ஸ் சென்று, அவர்களது கல்லூரி நண்பன் பரணியின் வாடகை வீட்டு காலிங்பெல்லை அழுத்தினார்கள்..!! தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறான் பரணி..!!

"இதுதான் மச்சி என் பேரு..!!"
சமீபத்தில் பூரி ஜகன்னாத் இயக்கி ஹிட்டடித்த ஒரு தெலுங்கு படத்தின் டைட்டில் கார்டில்.. அடுக்கடுக்காக காணப்பட்ட ஜாங்கிரி வரிசையில்.. நான்காவது வரியை சுட்டிக்காட்டி பல்லிளித்த பரணியை.. அசோக்கும் கிஷோரும் வெறுப்புடன் பார்த்தார்கள்..!!

"கூடிய சீக்கிரம் தமிழ்ல என் பேரு வரும்டா.. அதுவும் தனியா..!!"

கான்ஃபிடன்ட்டாக சொன்ன பரணியை கடுப்புடன் முறைத்தவாறே.. அவன் வாங்கிவைத்திருந்த ஹைதராபாத்தி சிக்கனை எடுத்து கடித்தார்கள்..!! இவர்கள் விழித்திருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்.. பரணி தனது டாலிவுட் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருக்க.. இருட்டுக்குள் அவனை தனியாக புலம்பவிட்டு.. இவர்கள் குறட்டை இல்லாமல் உறங்கினார்கள்..!!




அடுத்தநாள் காலையே அசோக்கும், கிஷோரும் இப்ராஹிம் பாக்கில் இருக்கும் வாசவி இஞ்சினியரிங் கல்லூரிக்கு சென்றார்கள்..!! எப்படி ஆரம்பிப்பது என்றே இருவருக்கும் ஆரம்பத்தில் படுகுழப்பம்..!! விஜயசாரதி கொலையாகியிருந்த விஷயம் அவனது கல்லூரிக்கு இன்னும் பரவியிருக்கவில்லை.. இவர்களும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை..!! கல்லூரி பேராசிரியர்கள் சிலரை சந்தித்து பேசினார்கள்.. விஜயசாரதி அந்த கல்லூரியில் படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன.. நிறைய பேராசிரியர்கள் மாறியிருந்தனர்.. ஒருசில பழையவர்கள் விஜயசாரதியை நினைவு கூர்ந்தாலும், 'ரோக்' என்று அவனை திட்டியதை தவிர, அவர்களால் உருப்படியான தகவல் எதையும் தர முடியவில்லை..!!
பிறகு.. கல்லூரிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடையில்.. காசில்லாமல் சிகரெட் மறுக்கப்பட்ட அவனை பிடித்தனர்.. அந்த கல்லூரியில் ஆபீஸ் அசிஸ்டன்டாக பணிபுரிபவன்..!! அவனிடம் சில கரன்ஸிகளை அள்ளி தெளித்து.. அவன் மூலமாக அந்தக் கல்லூரியில் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் படித்த மாணவர்களின் தகவல்களை ஒரு குறுந்தட்டில் கிடைக்கப் பெற்றனர்..!! மாணவர்களுடைய புகைப்படங்களும் அந்த குறுந்தகட்டில் இடம்பெற்றிருந்தன..!!

அந்த புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து.. விஜயசாரதி அந்த கல்லூரியில் பயின்ற காலத்தில் மீரா அங்கு பயிலவில்லை என்ற உண்மையை கண்டறிந்தனர்..!! 'சரி.. ஹைதராபாத்திலேயே வேறு கல்லூரியாக இருக்கும்..' என்று மீண்டும் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்..!! குறுந்தகட்டில் கிடைத்த தகவல் மூலம்.. ஹைதராபாத்தில் விஜயசாரதி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று முதலில் விசாரித்தனர்..!!
அவர்கள் மூலம் இன்னொருவர்.. அவர் மூலம் வேறொருவர்.. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம்.. அந்த இடத்திலிருந்து அடுத்த இடம் என்று.. அவர்களது விசாரணை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது..!! விஜயசாரதியின் புகைப்படத்தை காட்டி அவனை நினைவுறுத்துவது.. பிறகு மீராவின் அடையாளங்களை சொல்லி அந்த மாதிரி யாராவது ஒரு பெண்ணை அந்த விஜயசாரதி காதலித்தானா என கேட்பது.. என்கிற மாதிரிதான் அவர்களது விசாரணை பொதுவாக அமைந்திருந்தது..!!

விஜயசாரதியை பற்றி விசாரிக்க விசாரிக்க.. அவனது தீய குணங்களும், கெட்ட சகவாசங்களும்.. மேலும் மேலும் அவர்களுக்கு தெரியவந்தன..!!

பேகும்பேட்டில் ஒரு விபச்சார விடுதி..


"இவளுக எல்லாம் அவன் காதலிச்சவளுகதான்.. ஒவ்வொருநா ராத்திரிக்கும் ஒவ்வொருத்தி..!!" - தன்னிடமிருந்த பெண்களை கைகாட்டி பேசினாள், அந்த விடுதியின் தலைவி.

ஹைடெக் சிட்டியில் ஒரு பார்..

"என்ன ஸார்.. விஜயோட ஃப்ரண்டுன்றீங்க.. டோப் இருக்கானு கேட்டா இல்லைன்றீங்க..??" - மிதமிஞ்சிய போதையில் வாய்குழற சொன்னான், விஜயசாரதியுடன் கல்லூரியில் படித்த ஒருவன்.

துமுகுன்ட்டாவில் ஒரு சேரிப்பகுதி..

"அவன்ட்ட சொல்லி வைங்க.. என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் அவனுக்கு சாவு.. அண்ணா அடுத்த மாசம் வெளில வர்றாரு..!!" - விஜயசாரதி இறந்துபோன விஷயம் தெரியாமல் கறுவினான், ஒற்றை கையை இழந்துபோயிருந்த ஒரு ரவுடி.

எர்ரகடாவில் ஒரு ஓபன் கார்டன் ரெஸ்டாரன்ட்..

"அதெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு.. இப்போ நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஸார்..!! தயவு செஞ்சு.. என் வீட்டுக்காரர்ட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிடாதிங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்..!!" - கையில் ஒருவயது குழந்தையுடன் கெஞ்சினாள், விஜயசாரதியிடம் காதலென்ற பெயரில் கற்பிழந்த இன்னுமொரு பெண்.

அசோக் ஹைதராபாத்தில் விஜயசாரதி பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்த சமயத்தில்.. மீரா சென்னையில் வளைகுடா பயணத்தின் விசா பிரச்சினைக்கு அலைந்து கொண்டிருந்தாள்..!! வேலைக்கு ஏற்பாடு செய்திருந்த கன்சல்டன்ஸிக்கு சென்று மேனஜரை சந்தித்து பேசினாள்.. வெளிநாட்டில் தான் தங்குவதற்கான ஏற்பாட்டை பற்றி விவாதித்தாள்..!! முதல் மாச சம்பளம் வரும்வரை செலவுக்கு தேவையென.. தனது செயின், ப்ரேஸ்லட்டை எல்லாம் விற்று காசாக்கினாள்..!! அந்தக்காசின் கணிசமான தொகையை.. ஐயாயிரம் சவூதி ரியாலாக மாற்றி.. தனது ஹேண்ட் பேகுக்குள் திணித்தாள்..!!

"எந்த நாட்டுக்கு போறேன்னு கூட சொல்ல மாட்டியா..??" கேட்ட மனோகரிடம்,

"எனக்கு சொல்ல விருப்பம் இல்ல..!! இன்னும் ரெண்டே நாள்.. அப்புறம் நீங்க யாரோ நான் யாரோ..!!" என்று வெடுக்கென சொன்னாள்.

"ஹ்ம்ம்.. எதுக்கு இந்த கஷ்டம்லாம்..?? இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல.. நீ மட்டும் கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டுட்டேன்னு வச்சுக்கோ.. ராணி மாதிரி வாழலாம்..!!" பல்லிளித்தவனிடம்,

"செருப்பு பிஞ்சுடும்..!!!!" கண்களில் கோபக்கனலுடன் எச்சரித்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பே.. வெளிநாட்டு பயணத்திற்கான பேக்கிங் வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.. ஒரு பெரிய பெட்டியில் தனது உடைகளை எல்லாம் அடுக்கி வைத்தாள்.. மறவாமல் அந்த உடைகளுக்கு நடுவே அசோக்கின் புகைப்படத்தை செருகினாள்..!!

இன்னொரு பக்கம்.. கொலையாளியை கண்டுபிடிக்கிற முயற்சியில் மலரவன் மிகத் தீவிரமாக இறங்கியிருந்தார்..!! உயர் அதிகாரியிடம் டெலிஃபோனில் பேசியவர்.. 'கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன் ஸார்' என்று நம்பிக்கையாக சொன்னார்..!! கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகை பிரதிகளை கவனமாக ஆராய்ந்தார்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒரு வரி விடாமல் கூர்ந்து வாசித்தார்..!! விஜயசாரதியிடமும், காசியிடமும் சமீபகாலமாக மொபைலில் பேசியவர்களை ஒவ்வொருவராக விசாரித்து முடித்தார்..!! தண்டையார்பேட்டை ஸ்லம் ஏரியாவில்.. சேறு நிறைந்த ஒரு சாலையில் நடந்து சென்று.. ஒருவாரம் முன்பு ஜெயிலில் இருந்து ரிலீசான ஒரு ரவுடியின் வீட்டு கதவை தட்டினார்..!! ஒரு நாளுக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு.. மிச்ச நேரங்களில் தனது ஜீப்பில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்..!!

மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் கழித்துவிட்டு.. நான்காம் நாள் காலை.. அசோக் வெறுங்கையுடன் சென்னை திரும்பினான்..!! மீராவும் அன்று மாலை வெளிநாட்டுப் பயணத்திற்கு தன்வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாள்..!! மூன்று நாட்கள் அலைச்சல்.. திரும்ப வருகையில் ரயில் பயணம்.. களைப்படைந்து போயிருந்தான் அசோக்.. வந்ததுமே தனது அறைக்கு சென்று படுக்கையில் வீழ்ந்தவன்.. அடித்துப் போட்டாற்போல உறங்கிப் போனான்..!!

மகன் தூங்கட்டும் என்று விட்டுவிட்டிருந்த பாரதி.. மதியம் ஆனதும் ஒரு காபியுடன் சென்று அவனை எழுப்பினாள்..!! பல்துலக்கிவிட்டு அந்த காபியை அவன் உறிஞ்ச.. அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், மெல்ல ஆரம்பித்தாள்..!!

"என்னடா.. என்னாச்சு.. உபயோகமா ஏதாவது தெரிஞ்சதா..??"

அம்மா கேட்கவும், ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை அசோக் சுருக்கமாக அவளுக்கு எடுத்துரைத்தான். அவன் சொன்னதை எல்லாம் அவளும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.

"அவன் ஏமாத்தின இன்னும் ரெண்டு மூணு பொண்ணுகளை பத்தித்தான் தகவல் கெடைச்சது மம்மி.. மீரா பத்தி எந்த தகவலும் கெடைக்கல..!!"

"ம்ம்.. அப்போ அலைச்சல்தான் மிச்சமா..??"

"அப்படியும் சொல்லிட முடியாது..!! அந்த விஜயசாரதி பத்தி நெறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது..!! அப்புறம்.. இங்க சென்னைல அவனோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது.. அவங்களுக்கு கண்டிப்பா மீரா பத்தி தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. அவங்களை பத்தின டீடெயில் கலக்ட் பண்ணிட்டு வந்திருக்கேன்..!! ஆனா.. இப்போ உடனே அவங்களை போய் விசாரிக்க முடியாது.. கொலை நடந்திருக்குற இந்த சமயத்துல நான் போய் விசாரிச்சா.. தேவையில்லாத சந்தேகம் வரும்..!! அதனால.. இதை கொஞ்சநாள் ஆறப்போட்டு.. அப்புறம் அவங்களை விசாரிக்கலாம்னு நெனைச்சிருக்கேன்..!! அதுவரை மீராவுக்கு மட்டும் எதுவும் ஆகிடக்கூடாது மம்மி..!!" அசோக் கவலையாக சொல்ல,

"ஹ்ம்ம்.. அவளுக்கு எதுவும் ஆகாது.. நீ தேவையில்லாம கவலைப்படாத..!! அவ கண்டிப்பா உனக்கு கெடைப்பா.. நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சேர்ந்து வாழப் போறீங்க.. அம்மாவுக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல..!!" பாரதி அவனுக்கு நம்பிக்கையூட்டினாள்.

"தேங்க்ஸ் மம்மி..!!"

"அம்மா கீழ போறேன்டா.. இன்னும் அரைமணி நேரத்துல சாப்பாடு ரெடியாயிடும்..!! காலைல வேற நீ சாப்பிடல.. குளிச்சுட்டு கீழ வா.. மொதல்ல வந்து நல்லா வயிறாற சாப்பிடு.. என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிச்சுக்கலாம்..!! சரியா..??" சொல்லிவிட்டு பாரதி அந்த அறையினின்று வெளியேறினாள்.

குளித்து முடித்து வேறு உடை மாற்றி கீழே செல்ல.. அசோக் முழுதாக ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டான்..!! படியிறங்கி கீழே வந்தவன், நேராக ஹாலுக்குத்தான் சென்றான்..!! ஹாலில் இருந்த டிவியில் ஜஸ்டின் டிம்பர்லேக் அலறிக்கொண்டிருந்தார்..!!

"Aren't you something to admire..?
'Cause your shine is something like a mirror..!!"



டிவிக்கு முன்னால் கிடந்த சோபாவில் சங்கீதா அமர்ந்திருந்தாள்.. ஆனால் டிவியில் ஓடிய பாடலுக்கு காதுகொடாமல்.. கையில் விரித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள்..!! அசோக் வந்ததும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பி.. அண்ணனை ஏறிட்டு புன்னகைத்தாள்..!! அசோக்கும் பதிலுக்கு புன்னகைத்து.. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..!! சங்கீதா உடனே ரிமோட்டை எட்டி எடுத்து சேனல் மாற்றினாள்.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு சென்றவள்.. ஒரு சேனலில் விளம்பரம் ஓடியதை பார்த்ததும்.. அதிலேயே வைத்துவிட்டு அசோக்கிடம் திரும்பி கேலியாக சொன்னாள்..!!

"ஹ்ம்ம்.. நீங்கதான் டிவில அட்வர்டைஸ்மன்ட் மட்டுந்தான பார்ப்பிங்க.. பாருங்க..!!"

"ஹஹா.. லூஸு..!!"

தங்கையின் கிண்டலுக்கு அசோக் மெலிதாக சிரித்தான்..!! அவளும் சிரித்துவிட்டு மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க.. இவன் டிவியை பார்க்காமல்.. டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டான்..!! ரெட்ஹில்ஸ் கொலை கேஸ் புலன் விசாரணையில்.. சமீபத்தைய முன்னேற்றத்தை வாசித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தான்..!!

"சங்கீஈஈஈ..!!!!" சமையலறையில் இருந்து பாரதி அலறினாள்.

"என்ன மம்மி..??"

"இங்க கொஞ்சம் வாடி..!!"

"என்னன்னு சொல்லு..!!"

"ப்ச்.. வாடின்னு சொல்றேன்ல.. வா..!!!"
பாரதியின் குரல் அவ்வாறு கோபமாக ஒலிக்க.. சங்கீதா இப்போது எரிச்சலானாள்..!! அந்த எரிச்சலை பதிலுக்கு கத்துவதில் காட்டாமல்.. பக்கத்தில் இருந்த அண்ணனிடம் குறைபட்டுக் கொண்டாள்..!!

"ஹ்ம்ம்.. பாருடா இந்த மம்மியை.. நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விடமாட்டேன்றாங்க..!! ச்சே..!!"

சலிப்பாக சொன்னவள், கையிலிருந்த புத்தகத்தை மடக்கி, டம்மென்று டீப்பாய் மீது வைத்தாள். அசோக்கின் பார்வை இப்போது எதேச்சையாக அந்த புத்தகத்தின் மீது விழுந்தது. அந்த புத்தகத்தை பார்த்ததும், அவனுடைய நெற்றி நெருக்கமாய் சுருங்கிக் கொண்டது. அது.. மும்தாஜ் இவனிடம் படிக்க சொல்லி கொடுத்த அந்த புத்தகம்.. கிறித்தவ மத போதனைகளை உள்ளடக்கிய புத்தகம்.. ஆர்வமில்லாமல் இவன் இத்தனை நாட்களாய் படிக்காமலே வைத்திருந்த புத்தகம்..!!

"ஹேய்.. சங்கி.. இ..இது.. இது என்னோட.." அசோக் முடிக்கும் முன்பே,

"ம்ம்.. ஆமாம்.. உன் பேக்ல இருந்த புக்தான்.. போரடிக்குதுன்னு நான்தான் எடுத்துட்டு வந்து படிச்சுட்டு இருந்தேன்..!! சும்மா சொல்லக் கூடாது.. ஜீசஸோட லைஃப் ஹிஸ்டரி.. படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..!!"

சங்கீதா சிந்திய வார்த்தைகளில் உண்மையான ஒரு உற்சாகம் பொங்கியது..!! அசோக் இப்போது மீண்டும் அந்த புத்தகத்தின் மீது பார்வையை வீசினான்.. புத்தக முகப்பில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்த தலைப்பை கண்களாலேயே வாசித்தான்..!!

"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"

அதை வாசித்த அந்த நொடியிலேயே...

"மனம் போலே எல்லாம் நடக்கும்..!!" டிவியில் பாண்ட்ஸ் விளம்பர பாடல் ஓடியது.

"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!"

என்று.. பாரதி மூன்று நாட்களுக்கு முன்னால், கிருஷ்ண பகவான் கோவிலில் வைத்து அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வர.. அவனது உடலில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது..!! அந்த புத்தகத்தை எடுப்பதற்காக மெல்ல கையை நீட்டினான்.. புத்தகத்தை பற்றி டீப்பாயில் இருந்து எடுத்தான்..!! அதே நேரத்தில்.. சங்கீதா அம்மாவின் அழைப்பிற்காக சோபாவில் இருந்து அவசரமாய் எழ.. ஆக்சிடன்டலாக அண்ணனின் கையை தட்டிவிட்டாள்..!!

அந்த புத்தகம் அசோக்கின் கையிலிருந்து விடுபட்டு.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! சங்கீதா 'ஓவ்' என்று ஓசை எழுப்பிக்கொண்டே.. அந்த புத்தகத்தை கீழே விழாமல் பிடிப்பதற்காக.. கைநீட்டியவாறே திடீர் பரபரப்புடன் நகர்ந்தாள்..!! அந்த புத்தகத்தில் இருந்து விடுபட்ட அது மட்டும்.. காற்றில் மிதந்து.. பறந்தவாறே கீழிறங்கி.. அசோக்கின் மடியில் வந்து மெல்ல அமர்ந்தது..!!

அது.. ஒரு புகைப்படம்.. ஒரு பெண்ணின் புகைப்படம்..!! அந்தப் பெண்ணின் முகம் மட்டுமே பிரதானமாக தெரியுமாறு.. படம்பிடிக்கப்பட்ட புகைப்படம்..!! அந்த முகம் கூட முழுதாக தெரியவில்லை.. அந்தப்பெண் தனது துப்பட்டாவால் பாதி முகத்தை மூடி சுற்றியிருக்க.. அவளது கண்கள் மட்டுமே தெளிவாக பிரகாசித்தன..!!



அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!!

எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை சூழ்ந்து பிசைந்தது..!! புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவனால் கண்டுகொள்ள முடிந்தது..அவனையும் அறியாமல் அவனது உதடுகள் முணுமுணுத்தன..!!

"மீரா..!!!!!"

அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த புகைப்படத்தையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க.. சங்கீதா கீழே விழுந்த புத்தகத்தை, கையால் அள்ளி வாரி எடுக்க.. டிவியில் அந்த வாசகத்துடன் பாண்ட்ஸ் விளம்பரம் நிறைவு பெற்றது..!!

"இப்போ வந்ததுல லவ் ஸ்டோரில ட்விஸ்ட்..??"

 

11 comments:

  1. sekiram sethu vainga romba feeling ah irukuthu

    ReplyDelete
  2. next update when... pls update ASA possible...

    ReplyDelete
  3. நல்ல விறுவிறுப்பான கதை

    ReplyDelete
  4. i like ur all stories screw and this part is really superb ,and final quote is super .also explain the pain of love.still i m waiting for ur next update,unga story ellam 200 thadavai padichu iruppen

    ReplyDelete
  5. Just now I read this Story after a long time period.
    I miss lot of days without it.
    Thanks....

    Expecting next update.

    Evergreen

    Kaadhalin Kaadhalan (GSMSK)

    ReplyDelete
  6. கடைசில மும்தாஜ் கொடுத்த புத்தகம் அவன் காதலை ஒன்று சேர்க்கிறது ஞெம்ம செம்ம

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...