Social Icons

அன்புள்ள ராட்சசி - 15


 




அத்தியாயம் 24

'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??


அசோக்கையும் அவன் மனநிலையையும் யாருமே துல்லியமாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்..!! அவன் மீராவின் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான காதலாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்கிற அச்சுறுத்தலாலும்.. மனதளவில் தளர்ந்து போயிருந்தான்.. புத்தியளவில் குழம்பி போயிருந்தான்..!! நம்பிக்கையான வார்த்தைகளையே அவன் மனம் நாடியது.. தெளிவான வழிகாட்டலே அவன் புத்திக்கு தேவையாயிருந்தது..!! ஆனால்.. அவனுக்கு கிடைத்தது என்ன..??

ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. அசோக்கின் நண்பர்களும் சரி.. அவனது குடும்பத்தாரும் சரி.. அவனிடம் அன்பு கொண்டிருந்தார்களே ஒழிய.. அவனது அவசியத்தை அறிந்துகொண்டார்கள் இல்லை..!! அவன் மீதிருந்த அன்பின் காரணமாக.. அவனது நிலையை பார்க்க சகியாமல்.. அவநம்பிக்கையான வார்த்தைகளை சிந்திவிட்டனர்..!! அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை புரியவில்லை.. அவநம்பிக்கையை ஊட்டுகிற அன்பு எப்போதுமே.. மனித மனதில் மறுதலையான மாற்றத்தையே தோற்றுவிக்க கூடும்..!! அசோக்கின் மனதிலும் அத்தகைய மாற்றமே..!!

பதைபதைப்புடன் படிக்கட்டு ஏறிய பாரதி, மூச்சிரைக்க அசோக்கின் அறையை வந்தடைந்தாள்.. அவரசமாக கதவை திறந்து, அறைக்குள் பார்வையை வீசினாள்..!! உள்ளே அவள் கண்டகாட்சியில்.. ஒருவித நிம்மதியும், குழப்பமும் ஒருசேர அவளுடைய முகத்தில் படர்ந்தன..!! அசோக் சுயநினைவுடன் இருந்ததினால் வந்தது அந்த நிம்மதி.. குழப்பத்துக்கு காரணம் அவன் அமர்ந்திருந்த நிலை..!!

கால்கள் தரையில் பதிந்திருக்க கட்டிலில் அமர்ந்திருந்தான்.. முழங்கைகளை தொடைகளில் ஊன்றி, முகத்தினை உள்ளங்கைகளில் கவிழ்த்திருந்தான்.. மூச்சு விடுவதற்கு சாட்சியாய் அவனது முதுகு விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தது..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு சூனிய உணர்வில் ஆழ்ந்திருக்கிறான் என்பதினை.. அவன் அமர்ந்திருந்த தோற்றத்தில் இருந்தே அறிந்துகொள்ள முடிந்தது..!!

பதற்றம் குறையாத பாரதியின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்க.. படியேறி ஓடிவந்ததில் அவளது நெஞ்சுக்கூடு காற்றுக்காக அடித்துக்கொண்டு கிடக்க.. அதற்குள்ளாகவே சப்தம் கேட்டு அசோக் தலையை நிமிர்ந்து பார்த்தான்..!! வாசலில் தாயின் உருவம் கண்டதும்.. அவனது நெற்றியில் உடனடியாய் ஒரு சுருக்கம்..!! அதுவும்.. அவள் வந்து நின்றிருக்கிற கோலம் அவனை சற்றே திகைப்பில் ஆழ்த்தியது..!!

ஒருசில வினாடிகள்தான்.. அசோக்கிற்கு புரிந்து போனது.. வாசலில் அவள் நின்ற கோலமும், வந்திருப்பதற்கான காரணமும்..!! சிறிது தடுமாறியவன், பிறகு பொறுமையாக பக்கவாட்டில் திரும்பினான்.. கையை நீளமாக்கி சற்றே எட்டி அதை எடுத்தான்.. எடுத்ததை பிறகு உள்ளங்கையில் வைத்து அம்மாவிடம் நீட்டினான்.. தூக்க மாத்திரைகள் நிரம்பிய டப்பா..!!

வாசலின் இருபுறமும் கையூன்றி நின்று.. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த பாரதி.. இப்போது அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!! மகனை நெருங்கியவள்.. அவன் கையிலிருந்த டப்பாவை கைப்பற்றிக்கொண்டாள்..!! அவளுடைய முகத்தில் இன்னமும் முழுநிம்மதி வந்திருக்கவில்லை.. அச்சம் இன்னும் மிச்சம் இருந்தது..!! அம்மாவின் எண்ண ஓட்டம் அசோக்கிற்கு புரிந்திருக்கவேண்டும்..!!

"சா..சாப்பிடலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடல..!!"

தளர்வான குரலில் சொன்னவன்.. தலையை மெல்ல குனிந்துகொண்டான்..!! பாரதி இப்போது மகனின் தாடையை பற்றி.. அவனது முகத்தை நிமிர்த்தினாள்..!! அம்மாவை ஏறிட்டு அவளது கூர்மையான பார்வையை சந்தித்த அசோக்கிற்கு.. தனது வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கையில்லை என்று தோன்றியது..!!

"சாப்பிடல மம்மி.. ப்ராமிஸ்..!!" என்றான் சற்றே சலிப்பாக.

பாரதிக்கு இப்போது மகனின் வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது.. அவளிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.. 'என்னாயிற்றோ ஏதாயிற்றோ' என்று பதைபதைப்புடன் ஓடிவந்திருந்ததில், அவளது இருதயம்தான் இன்னும் 'படக் படக்' என துடித்துக்கொண்டிருந்தது..!! படபடப்பை குறைக்கும் பொருட்டு.. பாரதியும் அசோக்கின் அருகாக மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்..!! கையிலிருந்த டப்பாவை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு.. கண்களை மூடி.. சுவாசத்தை சீராக்கிக்கொள்ள முயற்சித்தாள்..!!

"ஆ..ஆனா.. கூடிய சீக்கிரத்துல எனக்கு அந்த நெலமை வந்துடுமோன்னு பயமா இருக்கு மம்மி..!!"




அசோக் அவ்வாறு சொன்னதும்.. பாரதி இப்போது தலையை திருப்பி.. பக்கவாட்டில் தெரிந்த மகனின் முகத்தை கலவரமாக பார்த்தாள்..!! அம்மாவை கவனியாத அசோக்.. எங்கேயோ வெறித்து பார்த்தபடி தொடர்ந்து பேசினான்..!!

"ஆளாளுக்கு அவளை மறந்துடு மறந்துடுன்னு சொல்றீங்க..!! எ..என்னால முடியல மம்மி.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என்னால அவளை மறக்க முடியும்னு எனக்கு தோணல..!!"

"..............................."

"அவளோட பிரச்சினையை சொல்லி கஷ்டப்படுத்தக்கூட விரும்பாம.. என்னைவிட்டு பிரிஞ்சு போயிருக்கா.. எந்த அளவுக்கு என்னை உண்மையா நேசிச்சிருக்கணும்.. எந்த அளவுக்கு எதையுமே எதிர்பார்க்காம என்மேல அவளுக்கு காதல் வந்திருக்கணும்..?? அந்த மாதிரி ஒருத்தியை எப்படி என்னால மறக்க முடியும் மம்மி..??"

"..............................."

"அவளை மறக்கனும்னா இதுதான் ஒரே வழி.. அதான்..!!"

"..............................."

"ஏ..ஏதோ ஒருவேகத்துல எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆனா சாப்பிட போறப்போ.. என்னன்னவோ யோசனை மம்மி..!! நீ.. டாடி.. சங்கி.. தாத்தா, பாட்டி.. ஃப்ரண்ட்ஸ்..!! ரொம்ப கஷ்டமா இருந்தது..!!"

"..............................." அமைதியாக மகனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பாரதிக்கு, இப்போது கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.

"அ..அவகூடதான் என் லைஃப்னு.. நான் எப்போவோ முழுசா நம்பிட்டேன் மம்மி.. மனசுக்குள்ள என்னல்லாம் ஆசை தெரியுமா..?? இப்போ.. 'அவ இல்லாம ஒரு லைஃப் இருக்குது.. அடம்புடிக்காம வாழ்ந்துபாரு'ன்னு.. நீங்க எல்லாரும் சொல்றப்போ.. என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல மம்மி..!! அந்த லைஃப் மேலேயே எனக்கு வெறுப்பா வருது..!!"

அசோக் சொல்ல சொல்ல.. பாரதியின் மூளைக்குள் பலவித யோசனைகள்..!! அவளும் மற்றவர்களும் செய்த தவறு, இப்போது அவளுக்கு தெளிவாக புரிந்தது.. ஆறுதலும், நம்பிக்கையும் நாடியவனுக்கு அவநம்பிக்கையை கொடுத்துவிட்ட தவறு..!! தாங்கள் செய்த அந்த தவறை உடனே சரி செய்தாகவேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.. இல்லாவிட்டால் ஆசையாக வளர்த்த மகனை அநியாயமாக இழக்க நேரிடும் என்றும் புரிந்தது..!!

அதே நேரம்.. அசோக் செய்த தவறும் அவளுடைய மனதை தைக்காமல் இல்லை.. அதையும் அவனுக்கு சுருக்கென சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தாள்..!! இனி இந்த மாதிரி எண்ணம் அவனுக்கு என்றுமே தோன்றக்கூடாது..!! மனதுக்குள்ளேயே ஒரு கணக்கு போட்டவள்.. சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. குரலிலும் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு.. பட்டென்று சொன்னாள்..!!

"சரி எங்களுக்குத்தான் அறிவு இல்ல.. உனக்கு எங்க போச்சு புத்தி..??"

பாரதி திடீரென அந்தமாதிரி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. பேசிக்கொண்டிருந்தவன் பேச்சை படக்கென நிறுத்தினான்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தான்..!! சற்றே தடுமாற்றமான குரலில்..

"எ..என்ன சொல்ற.." என்றான்.

"பின்ன என்ன..?? நாங்க 'மறந்துடு'ன்னு சொன்னா.. 'என்னால மறக்க முடியாது.. உங்க வேலையை பாத்துட்டு போங்க'ன்னு மூஞ்சில அடிச்சமாதிரி நீ சொல்ல வேண்டியதுதான..?? 'அவ கெடைக்க மாட்டா'ன்னு சொன்னா.. 'கண்டுபிடிக்கிறனா இல்லையா பாருங்க'ன்னு சவால் விட வேண்டியதுதான..?? குடிச்சுட்டு கண்டவன் கூட ரோட்ல சண்டை போடுறதுக்கு பதிலா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சிருக்கலாம்ல..??"

பாரதி படபடவென பேசப்பேச.. அசோக்கின் மனதில் ஒரு புதுவித உணர்வு பரவ ஆரம்பித்தது..!! இரண்டு வாரங்களாக இருந்த இறுக்க உணர்வை தளர்த்த ஆரம்பித்த, ஒரு இலகுவான உணர்வு.. தளர்ந்து போயிருந்த அவனது இதயத்திற்கு தைரியமூட்டுகிற மாதிரியான நம்பிக்கை உணர்வு..!! பாரதி தொடர்ந்து பேசினாள்..!!

"அடுத்தவங்க சொல்றதைக்கேட்டு உனக்கா ஒரு வைராக்கியம் வந்திருக்கனும்.. 'இதுக்குலாம் உடைஞ்சு போயிடக்கூடாது.. அவளை தேடிக்கண்டுபிடிச்சு எல்லார் முன்னாடியும் நிறுத்தனும்..!! அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து.. பேரன் பேத்தியை அவங்க கொஞ்சுறப்போ.. ஒருகாலத்துல என்னல்லாம் சொன்னீங்கன்னு கேலி பண்ணனும்..!!' அந்த மாதிரிலாம் உனக்கு வைராக்கியம் வந்திருந்தா.. உனக்கும் புத்தி இருக்குன்னு அர்த்தம்..!!"




"..............................."

"அதைலாம் விட்டுட்டு.. இப்படி தம்மடிக்கிறதும், தண்ணியடிக்கிறதும், பொலம்புறதும், சண்டை போடுறதும்.. என்னடா இதெல்லாம்..?? அதெல்லாம் பாக்குறப்போ எங்க மனசு என்னபாடு படும்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா..?? பத்தாக்கொறைக்கு மாத்திரை டப்பாவை வேற தூக்கிட்டு வந்துட்டான்.. புத்திசாலிப்புள்ள..!!"

பாரதி இகழ்ச்சியாக சொல்ல.. அசோக் தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்..!! அவனுக்குமே இப்போது அவன் செய்த தவறு தெளிவாக விளங்கிற்று..!! தனக்கிருந்த மன அழுத்தைத்தை அப்பட்டமாக வெளியே காட்டி.. தன்மீது அன்பு வைத்திருந்தவர்களை பயமுறுத்திவிட்டோம் என்று தோன்றியது.. தைரியம் இழந்தது தவறென்று புரிந்தது..!!

"உன் காதல் உண்மையானதுதானடா..??" பாரதி திடீரென கேட்க, அசோக் திகைத்துப் போனான்.

"எ..என்ன மம்மி இப்படி கேக்குற..??"

"ப்ச்.. சொல்லுடா..!! உன் காதல் உண்மையானதுதான..??"

"ஆ..ஆமாம்..!! அதுல என்ன உனக்கு சந்தேகம்..??"

"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..??"

"கா..காதல் மேல நம்பிக்கையா.. அ..அப்படினா..?? என்ன கேக்க வர்றன்னு எனக்கு புரியல..!!"

அசோக் குழப்பமாக அம்மாவின் முகத்தை ஏறிட.. இவள் இப்போது சற்றே நிதானித்தாள்..!! எதைச்சொல்லி மகனுக்கு புரியவைப்பது என்று ஒருசில வினாடிகள் யோசித்தாள்..!! பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு.. மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்..!!

"உன் அப்பாவோட எழுத்தை மட்டுந்தான் நான் அப்போ பாத்திருக்குறேன் அசோக்.. வேற எதுவும் எனக்கு அறிமுகம் இல்ல.. அவரு கருப்பா செவப்பான்னு கூட எனக்கு தெரியாது.. அவரோட குரலை கூட மெட்ராஸ்க்கு கெளம்புறதுக்கு மொதநாள்தான் கேட்டேன்..!! வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஆத்துக்கு போறதுக்கே அவ்வளவு பயப்படுற பாரதிதான்.. ஐநூறு கிலோமீட்டர் தனியா தாண்டி வந்தேன்..!! உடம்பெல்லாம் ரத்தம் வடிய.. கைல காசு இல்லாம.. கால்ல செருப்பு இல்லாம.. கட்டின பொடவையோட.. முன்னப்பின்ன அறிமுகமே இல்லாத ஊருக்கு..!! எந்த நம்பிக்கைல வந்தேன்னு நெனைக்கிற..??" பாரதி கேட்டுவிட்டு மகனை கூர்மையாக பார்க்க,

"..............................." அவனிடம் எந்த பதிலும் இல்லை.

"காலங்காத்தால நாலு மணிக்குலாம்.. கொஞ்சம் சீக்கிரமாவே.. அந்த ட்ரெயின் மெட்ராஸ் வந்துடுச்சு.. கொட்டுற பனில.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல தன்னந்தனியா நின்னுட்டு இருந்தேன்..!! யாராரோ வர்றாங்க போறாங்க.. ஒருமாதிரி பாக்குறாங்க.. பேச்சு குடுக்குறாங்க.. அம்மாக்கு ரொம்ப பயமா இருந்துச்சுடா..!!"

"..............................."

"உன் அப்பா வந்து சேர்றதுக்கு அரை மணி நேரம் ஆச்சு..!! அந்த அரைமணி நேரமும்.. 'எப்போடா அவர் வருவாரு.. அவர் நெஞ்சுல சாஞ்சு ஓன்னு அழலாம்..'னு நெனச்சுட்டு இருந்தேனே ஒழிய.. ஒரு செகண்ட் கூட.. 'அவரு வருவரோ வரமாட்டாரோ'ன்னு என் மனசு சந்தேகப்படல அசோக்.. சத்தியமா..!!"

"..............................."

"என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கைடா.. 'நம்ம காதல் உண்மையானது.. அது நம்மள கஷ்டத்துல தள்ளிடாது'ன்னு ரொம்ப நம்பிக்கை..!! இன்னைக்கு எனக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கெடைச்சிருக்குன்னா.. அதுக்கு காரணம், என் காதல் மேல நான் வச்சிருந்த நம்பிக்கைனாலதான்..!! அந்த நம்பிக்கை உன் காதல் மேல உனக்கு இருக்கா..?? ஒரு நல்ல வாழ்க்கையை அந்தக்காதல் அமைச்சு குடுக்கும்னு.. உன் மனசார நம்புறியா..??"

"..............................." அசோக் அமைதியாகவும், திகைப்பாகவும் பார்த்துக்கொண்டிருக்க, பாரதியே தொடர்ந்தாள்.

"நம்பு.. உன் காதலை முழுசா நம்பு..!! காதலும் கூட கடவுள் மாதிரிதான்டா.. நம்புனவங்களை சோதிக்கும்.. ஆனா கைவிடாது..!! காதலுக்கு உண்மையா இருந்தா மட்டும் பத்தாது.. உண்மையான அந்த காதல் மேல அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைக்கணும்..!! இது ரெண்டும் இருந்துட்டா.. அந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும்..!!"

மிக உறுதியான குரலில் சொல்லி முடித்தாள்..!! அசோக் எதுவுமே பேசத்தோன்றாதவனாய் அமர்ந்திருந்தான்.. அம்மா சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தையே, அவன் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது..!! அந்த அர்த்தம் புரிய புரிய.. இருண்டு போயிருந்த அவனது இதயத்தில்.. மெலிதாக ஒரு ஒளிக்கீற்று எட்டிப்பார்த்தது..!!

தீவிர யோசனையில் இருக்கும் மகனையே.. பாரதி சிறிது நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மகனின் மனநிலை இப்போது அவளுக்கு தெளிவாக புரிய.. அவள் மனதில் ஒரு நிம்மதி..!! அந்த நிம்மதி அவளது முகத்திலும் பரவ.. பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறே.. கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள்..!!

"சரிடா.. அம்மா கெளம்புறேன்.. தலைக்கு மேல வேலை இருக்குது.. பாத்திரம்லாம் அப்டியே கெடக்குது.. கழுவி எடுத்து வச்சுட்டு டிபன் ரெடி பண்ணனும்.. மாமா வேற கால்வலின்னாரு.. போய் தைலம் தேச்சு விடனும்.. எந்திரிக்கிறப்போ காபி ரெடியா இல்லைன்னா, உன் தங்கச்சி வேற பேயாட்டம் ஆடுவா..!! ஹ்ம்ம்... நீ குளிச்சுட்டு சீக்கிரம் கீழ வா.. நைட்டு வேற சாப்பிடல.. வயிறுலாம் காஞ்சு போய் கெடக்கும்.. வந்து சுடச்சுட ஒரு பத்து இட்லியாவது இன்னைக்கு சாப்பிடனும்.. சரியா..!!"

மிக இயல்பாக சொல்லிக்கொண்டே அறைவாசலை நோக்கி நடக்கிற அம்மாவை.. அசோக் வித்தியாசமாக பார்த்தான்..!! அடுத்த கணமே.. மேஜை மீதிருந்த தூக்கமாத்திரை டப்பா அவனது கண்களில் படவும்.. அவசரமாக அவளை அழைத்தான்..!!

"ம..மம்மி.."

"ம்ம்..??" பாரதி திரும்பி பார்த்து கேட்டாள்.

"இ..இது.. இ..இந்த டப்பா.." அசோக் இழுத்தான்.

"ஆங்.. அதுக்கென்ன..??"

"இல்ல.. இ..இங்கயே வச்சுட்டு போயிட்ட..??"

"ஹ்ம்ம்.. நல்லாருக்கே..!! நான் என்ன உனக்கு எடுபுடியா..?? நீதான எடுத்துட்டு வந்த.. நீயே போய் எடுத்த எடத்துல வச்சுடு..!!"

கிண்டலான குரலில் சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க.. அசோக்காலும் அவனுடைய உதட்டில் கசிந்திட்ட ஒரு புன்முறுவலை கட்டுப்படுத்த முடியவில்லை.. நீண்ட நாட்களுக்கு அப்புறம் அவனது இதழ்களில் பூத்துக்கொண்ட மெலிதான ஒரு புன்னகை அது..!!

"தேங்க்ஸ் மம்மி..!!" என்றான், திரும்பி நடக்கிற பாரதியின் முதுகை பார்த்து.

அசோக்கிடம் ஒருவித அலட்சியத்துடன் பேசிவிட்டு வந்திருந்தாலும்.. பாரதியின் மூளை என்னவோ உள்ளே ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தது.. படி இறங்கியவளின் முகத்தில் அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! மகனின் நிலை பற்றி பலவிதமான சிந்தனைகள்.. அடுத்து என்னென்ன செய்வது என்பது மாதிரியான கேள்விக்குறிகள்.. அவசர அவசரமாக ஆனால் மிக தெளிவாக எடுக்கப்பட்ட சில முடிவுகள்..!! படியிறங்கி கீழ் தளத்திற்கு வந்த பாரதி..

"பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!"

என்று இன்னமும் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த மாமனாரை.. தற்காலிகமாக அலட்சியம் செய்தாள்..!! சுவற்றோடு ஒட்டியிருந்த அந்த டெலிஃபோனைத்தான் முதலில் அணுகினாள்.. டயல் செய்துவிட்டு ரிஸீவரை காதில் பொருத்திக்கொண்டாள்.. அடுத்த முனையில் இருந்து 'ஹலோ' ஒலித்ததும்..

"ஆங்.. பவானி.. அத்தை பேசுறேன்மா..!!" என்றாள்.

அத்தியாயம் 25

அதன்பிறகு வந்த ஒருவாரம்.. பத்து நாட்கள்..!! அசோக் முழுமையாக மாறிப்போனான் என்று சொல்ல இயலாது.. ஆனால் குறிப்பிடத் தகுந்த மாதிரியாக சில மாற்றங்கள் அவனிடம்..!! அவனுடைய நினைவு எப்போதும் மீராவைத்தான் சுற்றி வந்தது.. அவளை இழந்துவிட்ட துக்கம் அவன் மனதில் எப்போதுமே உறைந்து கிடந்தது.. ஆனால்.. முன்பு மாதிரி கழிவிரக்கத்தில் மூழ்கி அவன் சோர்ந்திருக்கவில்லை.. புகையினாலும், மதுவினாலும் அவனது சிந்தனையை சிதைத்துக் கொள்ளவில்லை..!! மாறாக.. உரம் கொண்டதென நெஞ்சினை மாற்றிக்கொள்ள முயன்றான்.. உடைந்து போய்விடக்கூடாதென உறுதியாய் இருந்தான்..!!

மீராவை கண்டுபிடிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று.. திரும்ப திரும்ப யோசித்து பார்த்தான்..!! மீராவுடனான பழைய நினைவுகளை எல்லாம்.. மீண்டும் மீண்டும் அசை போட்டான்.. ஏதாவது வழி தென்பட்டுவிடாதா என ஏங்கினான்..!! எந்த ஒரு வழியும் அவனது புத்திக்கு புலப்படவில்லை.. அதற்காக அவன் தளர்ந்து போய் விடவும் இல்லை.. மறுபடியும் வேறொரு நினைவை அசைபோட்டு.. அவனது முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்தான்..!!

அம்மா உதிர்த்த அறிவுரைகள் அவனுக்கு உபயோகமானதாய் இருந்தன..!! அத்தனை நாள் காதலுக்கு உண்மையாய் இருந்தவன்.. அதன்பிறகு .. உண்மையான அந்தக்காதல் மீது உறுதியான நம்பிக்கையும் வைக்க நினைத்தான்..!! வாழ்க்கையில் இடர்பாடுகளை சந்திக்க நேருகிற வறியவர்கள்.. 'எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்' என்று.. கடவுள் மேல் பாரத்தை போடுவது போல.. ஆசைக்காதலியின் அழகுமுகம் காணத்துடித்த அசோக்.. 'எங்க காதல் எங்களை சேர்த்து வைக்கும்' என்பது மாதிரி.. காதல் மேல் தனது பாரத்தை போட்டான்..!!

பாரதி அன்று பேசுகையில்.. 'அவளை கண்டுபிடிச்சு.. அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து..' என்கிற ரீதிரில்.. ஒரு எதிர்கால கனவுடன் அவன் மனதில் நம்பிக்கையூட்ட முயன்றவிதம்.. அசோக்கை பொறுத்தவரையில் மிக சக்தி வாய்ந்ததாக அமைந்தது..!! அவனது மனம் சோர்ந்து போக ஆரம்பிக்கும் போதெல்லாம்.. அம்மா சொன்ன அந்த வார்த்தைகளையே அசோக் நினைவுறுத்திக் கொள்வான்..!! சட்டென்று ஒரு எதிர்கால கனவில் மூழ்க ஆரம்பித்து விடுவான்.. அந்த கனவு முழுக்க மீராவே நிறைந்திருப்பாள்..!!




திடீரென இவன் எதிரே வந்து நிற்பாள்.. திணறிப்போகிற மாதிரி இறுக்கி அணைத்துக் கொள்வாள்.. 'உன்னை பாக்காம என்னால இருக்க முடியலடா' என்று இவன் மார்பில் முகம் புதைத்து அழுவாள்..!! கன்னங்களில் வழிகிற நீர் துடைத்து இவன் கனிவுமொழி பேச.. கண்கள் இரண்டும் திறந்து வைத்து அவள் காதலாக பார்ப்பாள்..!! காதல்க்கதிர்வீச்சு நடத்துகிற அந்த காந்தப்பார்வையில்.. இவன் கசிந்துருகி, கவர்ந்திழுக்கப்பட்டு, கவனம் தடுமாறி நிற்கையில்.. அவள் இமைகளை மூடிக்கொள்வாள்.. இதழ்களை திறந்து வைப்பாள்..!! 'அமுதம் பருகிக்கொள்.. அதனையே பகிர்ந்தும்கொள்..' என.. அசைவேதுமின்றியே அழைப்பு விடுப்பாள்..!!

உதடுகள் உரசிக்கொள்ளும்.. உடனடியாய் ஒரு தீப்பிடிக்கும்..!! உதட்டுவரிப் பள்ளத்தில்.. உமிழ்நீர் என்கிற பெயரினில்.. சுரந்து வடிகிற தேனொன்றே.. சுகமான அத்தீயினை மூட்டியிருக்கும்..!! ஆசை ஏக்கம் அத்தனையும்.. அதரம் சுவைத்தே அடுத்தவருக்கு அறிவித்திட முயல்வர்..!! முத்தம் இவனை முரடனாக்கும்.. காதலனின் வேகம் அவளை கர்வம் கொள்ள வைக்கும்..!! இதழில் நடக்கும் வன்முறைக்கு.. அவளும் இயன்ற அளவு ஒத்துழைப்பாள்..!!

முத்தம் முடிந்து நெடுநேரம் ஆகியும்.. மூடிய இமைகளோடு.. முகமெல்லாம் உணர்ச்சி கொப்பளிக்க நின்றிருப்பாள்..!! அவள் உதட்டில் மினுமினுக்கும் முத்த ஈரத்தினை.. விரலினால் இவன் துடைக்க.. விழிகள் திறந்து கொள்ளும் அவளுக்கு..!! உதட்டினை உடனடியாய் உள்ளே மடித்துக் கொள்வாள்.. எச்சில் மிச்சத்தை நாவால் தடவி சுவை ருசிப்பாள்..!! கண்களில் பளிச்சென ஒரு மின்னல் பிறந்திட.. கன்னங்களில் அழகாய் ஒரு பள்ளம் தோன்றிட.. காதலும் குறும்பும் கலந்த குரலில் கேட்பாள்..!!

"கல்யாணம் பண்ணிக்கலாமா..??"

பட்டு உடலை தொட்டுப் போர்த்திய பட்டுப்புடவையும்.. மலர்ப்பந்து மார்பினில் வந்து புரண்டிடும் மலர்மணமாலையும்.. நடுவகிடு வழியிறங்கி நெற்றி தவழும் சுட்டியும்.. நாசியின் நடுத்தண்டுதனில் தொங்கி மேலுதடு முத்தமிடும் புல்லாக்கும்.. அஞ்சனம் பூசிய வண்டின கண்களும்.. சந்தனம் தடவிய பஞ்சின கன்னங்களுமாய்.. குத்துக்கால் இட்டமர்ந்து.. குனிந்ததலை குனிந்தேயிருக்க.. மணமகளோடு குணமகளுமாக மாறிப்போய்.. மந்திரத்தோடு வாத்தியமும் சேர்ந்தொலித்திட.. மஞ்சளால் ஆனதொரு மங்கலநாணினை வாங்கிக்கொள்வாள்.. மாலைகளை தோள்மாற்றிக்கொண்டு மனைவியும் ஆகிப் போவாள்..!!

அட்சதை தலையில் படிந்திருக்கும்.. ஆசீர்வாதம்பெற தரையில் பரவுவார்கள்.. அத்தையின் காலில் விழுந்து கிடக்கும் அவள்.. அப்பாவின் பாதம் பணிந்திருக்கிற இவனை பார்த்து.. குறும்பாக கண்சிமிட்டி குழிவிழுகிற கன்னத்தோடு சிரிப்பாள்..!!

கல்யாணம் முடிந்துவிடும்.. கனவோட்டம் முடிந்திடாது.. முதலிரவு தேனிலவென முடிவிலாமல் முன்னேறும்..!! நெஞ்சத்தில் பூத்திருந்தவள் மஞ்சத்தில் வீற்றிருப்பாள்.. நேரங்காலம் தெரியாமல் வெட்கமுற்று வெறுப்பேற்றுவாள்..!! தாகம் முற்றிப்போன இவன் மாராப்பினை பற்றியிழுக்க.. தளிர்க்கரங்களால் அவள் மலர்க்குவியல்கள் மறைத்திடுவாள்..!! ஆசையெனும் ஆயுதம் ஏந்தி.. நாணமெனும் கோட்டையை தகர்த்து.. ஆடையெனும் பகைவனை வெல்வார்கள்.. உள்ளத்தால் ஒன்றானவர்கள், இப்போது உடலாலும் உறவாடுவார்கள்..!! இவனது வேகம் அவளுக்கு பிடிக்கும்.. அவளது வியர்வையும் இவனுக்கு மணக்கும்..!! நெற்றிக் குங்குமம் ஈரத்தில் கரையும்.. மெத்தை மல்லிகை மோகத்தில் கசங்கும்..!! உஷ்ணம் கொண்டு உடல்கள் தகிக்கும்.. உச்சம் கண்டும் தேடல்கள் தொடரும்..!! பகல்ப்பொழுதுகளே பகையாகிப் போகும்.. இருமனங்களுமே இரவுக்கென ஏங்கும்..!!

"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. வா..!!"

தனியாக அழைத்து செல்வாள்.. தனது அடிவயிறு திறந்து காட்டுவாள்..!! புரியாமல் இவன் விழிக்க.. 'புத்தூ' என்று தலையில் தட்டுவாள்..!! கருத்தரித்த செய்தியை காதோரமாய் கிசுகிசுப்பாள்..!! ஆனந்தத்தில் இவன் திளைத்துக் கொண்டிருக்க.. அவளும் அதே ஆனந்தத்தில் விழைந்த கண்ணீரோடு..

"தேங்க்ஸ்டா..!!" என்று பைத்தியம் போல் உளறுவாள்.

வயிறு பெரிதாகிப்போக அவள் இடுப்பு பிடித்து நடப்பாள்.. கர்ப்பிணி மனைவிக்கு இவன் கால் அமுக்கி விடுவான்..!! அகம் இருப்பவனை நெஞ்சில் சாய்த்து அவள் தாலாட்டுவாள்.. அடம் பிடிப்பவளை கெஞ்சிக் கூத்தாடி இவன் சாதமூட்டுவான்..!!

"கண்ணு மூக்குலாம் அப்படியே உன்னை மாதிரிதான்..!!"

களைத்துப்போன உடலும், தளர்ந்துபோன குரலுமாய் அவள் சொல்ல.. இவன் கலங்கிப்போன விழிகளுடன், கையிலிருக்கும் குழந்தையை விடுத்து.. மனைவியின் நெற்றியிலேயே முதலில் முத்தம் வைத்திடுவான்..!!

"தேங்க்ஸ்டி..!!" என்று இவன் இப்போது பைத்தியம் போல் உளறுவான்.

ஐந்தே வருடங்கள்.. ஒன்று கழுத்தை பற்றி தொங்கும்.. ஒன்று மீசை பற்றி இழுக்கும்.. ஒன்று தொடையில் விழுந்து கடிக்கும்.. ஒன்று மூக்கில் விரலை நுழைக்கும்.. எல்லாவற்றிற்கும் கடைக்குட்டியோ மடியில் கிடந்துகொண்டு, எட்டி எட்டி இவன் மார்பிலேயே உதைக்கும்..!! ஐந்து குழந்தைகளுடன் இவன் அவஸ்தைப் படுவதை.. அடக்கமுடியா சிரிப்புடன் அவள் பார்த்து ரசிப்பாள்..!!

இந்த மாதிரியாகவே அவனது கனவு நீளும்.. திரும்ப திரும்ப அதே கனவினை காணுவான்.. சற்றேனும் திகட்டிடாது..!!

உறக்கத்தில் காண்கிற கனவு, உறங்கி எழுகையில் உபயோகமில்லாமல் போகலாம்.. விழித்திருக்கையில் காண்கிற கனவு, விழிப்புடனே வைத்திருக்க உதவலாம்..!! அசோக் கண்ட கனவு அவனது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அடுத்த நாளை நோக்கி அவனது வாழ்க்கையை உந்தித் தள்ளியது.. நனவாக அக்கனவினை மாற்றிட வேண்டுமென.. நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் கொடுத்தது..!!

அசோக்கிடம் மட்டுமில்லாது அவனை சுற்றி இருந்தவர்களிடமும் ஒரு மாற்றத்தை காண முடிந்தது..!! அவனிடம் எதிர்மறையாக பேசுவதை முதலில் விட்டொழித்தார்கள்.. அசோக்கின் மனநிலையை இலகுவாக்குகிற மாதிரியான வார்த்தைகளையே கவனமாக சிந்தினர்.. 'இன்றோ நாளையோ மீரா கிடைத்துவிடப் போகிறாள்' என்பது மாதிரியான கற்பனையை அவர்களுமே மனதுக்குள் வளர்த்துக் கொண்டனர்.. அது அவர்களது பேச்சிலும் வெளிப்பட்டது.. அசோக்கின் மன இறுக்கம் அகல, அது மிக அவசியமாயிருந்தது..!!

"தைரியமா இரு மச்சி.. எங்க போயிட போறா அந்த கோயில்பட்டி வீரலட்சுமி.. புடிச்சிடலாம்..!!" என்று நம்பிக்கையாக சொன்னது, எப்போதும் எதிர்மறையாக பேசுகிற சாலமனேதான்.

எல்லாம் பாரதி இட்ட கட்டளை.. தனது குடும்பத்தாரிடம் மட்டுமில்லாது, அசோக்கின் நண்பர்களிடமும் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாள்..!! அசோக் தூக்க மாத்திரையை தூக்கி சென்ற விஷயத்தை.. இரண்டு பேரிடம் மட்டுமே பாரதி சொல்லியிருந்தாள்..!! ஒன்று அசோக்கின் அப்பா மணிபாரதியிடம்.. இன்னொன்று கிஷோரின் அக்கா பவானியிடம்..!! பவானியை டெலிஃபோனில் அழைத்த பாரதி.. அன்றே அவளை வீட்டுக்கு வரவழைத்தாள்.. அசோக்கின் நிலையை கவலையுடன் எடுத்துரைத்தாள்..!!

"எப்படி இருந்த எம்புள்ளை இப்படி ஆயிட்டான்.. ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி அவன் மனசை ரொம்ப நோகடிச்சுட்டோம்..!! அவனை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது பவானிம்மா..!!" தளர்ந்த குரலில் சொன்ன பாரதிக்கு,

"ப்ச்.. என்னத்தை நீங்க..?? நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி..?? ஹ்ம்ம்.. அவனை பத்தி நீங்க இனிமே வொர்ரி பண்ணிக்காதிங்க.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" பவானி தைரியமூட்டினாள்.

அசோக்கை தனது அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டாள் பவானி..!! தனது உறவினன் என்பதை மறந்து.. மனஅழுத்தம் கொண்ட ஒரு பேஷண்ட்டை எப்படி அணுகுவாளோ, அந்த மாதிரி மிக கவனமாக அவனை அணுகினாள்..!! அசோக்கின் நிலை பற்றிய கவலையும், பாரதிக்கு கொடுத்த வாக்குறுதியும் அவள் மனதில் இருந்தன.. ஆனால் அவற்றை எப்போதும் அவளது குரலிலோ, நடவடிக்கையிலோ அவள் காட்டிக்கொண்டது இல்லை..!! இயல்பாக நடந்து கொள்வாள்.. இலகுவான குரலில் பேசுவாள்.. மிக அழகாக அசோக்கின் கவனத்தை திசை திருப்புவாள்.. அவன் அறியாமலே அவன் மனதுக்குள் நம்பிக்கை விதைகளை தூவுவாள்..!! மேற்சொன்ன அசோக்கின் மனமாற்றத்தில் பவானியின் பங்கும் மிக முக்கியமானது..!!

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? Stress-ன்றது நம்ம எல்லார்ட்டயுமே இருக்குது அசோக்.. நம்மளோட நார்மல் லைஃப்க்கு அந்த Stress ரொம்ப ரொம்ப essential..!! Stress இல்லாத மனுஷன்னா.. அது ஏதாவது கோமால கெடக்குற பேஷன்ட்தான்..!! என்ன.. அந்த Stress ஒருஅளவுக்கு மேல போறப்போதான் பிரச்னை.. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான..?? காய்ச்சல் தலைவலி மாதிரிதான் இதுவும்.. கொஞ்சநாள் ட்ரீட்மன்ட் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்..!! உன் ஆளு திரும்ப வர்றப்போ.. இப்படியா சீக்குக்கோழி மாதிரி அவ முன்னாடி நிப்ப..?? அப்படியே சிங்கம் மாதிரி நிக்க வேணாம்.. ஹஹா..!! என்ன சொல்ற..??"

"அச்சச்சோ.. அக்காக்கு லேட் ஆயிடுச்சுடா.. உன் பைக்ல என்னை ஹாஸ்பிடல் வரை ட்ராப் பண்றியா..??"

"ம்ம்.. வந்தது வந்துட்ட.. 'Art of Living' class ஆரம்பிக்கப் போகுது.. சும்மா அட்டண்ட் பண்ணி பாக்குறியா..??"

தற்கொலையை முயலாம் என்று அசோக் நினைத்த அன்றே.. அவன் வாழ்தல்கலையை பயிலுமாறு அமைந்து போனது..!! முதல்நாள் அனுபவம் அவனுக்குமே பிடித்திருந்ததால்.. அதன் பிறகு தினமும் அந்த வாழ்தல்கலை வகுப்புக்கு வருகை தர ஆரம்பித்தான்..!! முன்பொருமுறை டாகுமன்ட்ரி எடுப்பதற்காக அங்கே வந்திருந்தபோது அறிமுகமான மும்தாஜ்தான்.. இப்போது அசோக்கிற்கு யோகா பயிற்றுவித்தாள்..!! அசோக்கின் நிலையை பவானியின் மூலமாக மும்தாஜும் ஓரளவு அறிந்திருந்தாள்.. அவளும் அசோக்கிடம் தனிக்கவனம் எடுத்துக் கொண்டாள்..!!

"தலையை மேல கொண்டு போறப்போ மூச்சை நல்லா உள்ள வாங்கணும்.. அப்புறம் தலையை கீழ கொண்டு வர்றப்போ கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணனும்..!!" கண்கள் மூடி அமர்ந்திருந்த அசோக்கின் தாடையை தாங்கியவாறு மும்தாஜ் சொன்னாள்.

"உடம்புன்றது நாம சாப்பிட்ட சாப்பாட்டோட விளைவு.. மனசுன்றது நாம பார்த்த, கேட்ட, படிச்ச விஷயங்களோட விளைவு..!! உடம்பு, மனசு.. இது ரெண்டுமே நாம கெடையாது..!! இது ரெண்டுல இருந்தும் நம்மள நாமளே பிரிச்சு எடுக்குறதுதான் தியானம்..!!" மேடையில் நின்று மும்தாஜ் சொல்ல, தரையில் இன்னும் சிலருடன் அமர்ந்திருந்த அசோக், அதை கவனமாக கேட்டுக்கொண்டான்.

"இந்த உலகத்துல வந்து பொறக்குறதை.. நாம எப்படி முடிவு பண்றது இல்லையோ.. அந்த மாதிரி இந்த உலகத்தை விட்டு போறதையும்.. நாம முடிவு பண்ணக் கூடாது அசோக்..!! அட்வைஸ் பண்றேன்னு நெனச்சுக்காதிங்க.. எனக்கு அந்த அருகதைலாம் இல்ல.. ஹ்ஹ..!! ஏதோ என் மனசுல தோணுனதை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! ம்ம்.. இந்தாங்க..!!" அசோக்கிற்கு தேநீர் கலந்து நீட்டிக்கொண்டே, ஒரு இதமான புன்னகையுடன் மும்தாஜ் சொன்னாள்.

வகுப்பின்போதும்.. வகுப்பு முடிந்து உரையாடுகிறபோதும்.. அசோக்கின் மனக்காயம் ஆறுவதற்கு.. மும்தாஜும் முடிந்த அளவு உபயோகமாக இருந்தாள்..!! மீதி நேரங்களில்.. பவானி தன்னால் இயன்ற அளவுக்கு அசோக்குடன் நேரத்தை செலவழித்து.. அவனது மனமாற்றத்துக்கு பெருவுதவி செய்தாள்..!!

"ஏன் கோவம் வருது..?? உன் மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தா.. உனக்கு கோவம் வர்றதுக்கு அவசியமே இல்லையே..?? யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு நீ கூலா இரு..!!" - அசோக்குடன் பைக்கில் செல்கையில் பவானி.

"தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுலாம் உனக்கு ஒரு temporary comfort தரலாம் அசோக்.. But.. long termல பாக்குறப்போ.. it's too dangerous..!! உன் ப்ராப்ளத்துக்கு அது சொல்யூஷன் இல்ல..!!" - அலுவலக அறையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கிடம் பவானி.

"ஏண்டா.. அவளுக்கு பிடிக்குமேன்னு ஆசையா வளர்த்தேன்னு சொல்ற.. இப்படியா தண்ணி ஊத்தாம காய விடுறது..?? நாளைக்கு அவ வந்து இதை பாத்தான்னா என்ன நெனைப்பா..?? அவ வர்றவரைக்கும் நீதான் இதை நல்லா கவனிச்சுக்குற.. சரியா..?? மார்னிங், ஈவினிங் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்தணும்.. அவ வந்து பாக்குறப்போ அப்படியே சொக்கிப் போயிடணும்..!!" - வீட்டின் பின்புறமிருந்த மஞ்சள் ரோஜா தோட்டத்தை நோட்டமிட்டவாறே பவானி.

மீராவின் வருகை பற்றி, அசோக் அறியாமல் அவன் மனதில் நம்பிக்கை வளர்ப்பது மட்டுமல்லாமல்.. சில சமயங்கள் நேரிடையாகவே, அசோக்கிடம் மீரா பற்றி பேசி அறிந்துகொள்வாள்..!!

"ஹ்ம்ம்.. தேடுதல் வேட்டை எந்த லெவல்ல இருக்குது..?? ஏதாவது லீட் கெடைச்சதா..?? என்னைக்கு அந்த அழகு மூஞ்சியை என் கண்ணுல காட்டப்போற..??"

"ப்ச்.. எந்த லீடும் கெடைக்கலக்கா.. எல்லாம் அப்படியே ப்ளாங்கா இருக்கு.. ஏதோ இருட்டு ரூமுக்குள்ள குருட்டு பூனை அலையுற மாதிரி இருக்கு..!!"

"ஏண்டா இப்படி பேசுற..?? அவகூட பேசினது பழகினதுலாம் கொஞ்சம் பொறுமையா நெனச்சு பாரு.. ஏதாவது லீட் கெடைக்கும்..!!"

"எல்லாம் நெனச்சு பாத்துட்டேன்க்கா.. எதுவும் பிடிபடல..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..?? நான் உண்மைன்னு நெனச்சது எல்லாமே.. கடைசில பொய்..!! வரைமொறையே இல்லாம பொய் பொய்யா சொல்லிருக்கா.. சரியான புழுகு மூட்டை..!!" அசோக் சொன்னவிதம் பவானிக்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஹாஹாஹாஹா..!! ஓகே ஓகே..!! ஹ்ம்ம்... சரி.. அப்போ இப்படி பண்ணு.. கொஞ்சம் உல்ட்டாவா திங்க் பண்ணி பாரு.. ஏதாவது யூஸ்ஃபுல் மேட்டர் கெடைக்குதான்னு பாக்கலாம்..!!"

"உல்ட்டானா.. எப்படி..??"

"ம்ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது.. நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..?? அந்த ஆங்கிள்ல யோசிச்சு பாரு..!!"

"ம்க்கும்.. ஏன்க்கா நீங்க வேற..?? நானே கன்ஃப்யூஸ் ஆகிப்போய் கெடக்குறேன்.. நீங்க காமடி பண்ணிட்டு இருக்குறீங்க..??" அசோக் நொந்துபோன குரலில் சொல்ல,

"ஹாஹாஹாஹா..!! காமடி பண்ணலடா.. சீரியஸா சொல்றேன்..!!" பவானி சிரித்தாள்.

பவானியின் சிரிப்பு அசோக்கின் முகத்திலும் புன்னகையை பூக்க செய்தது..!! இந்த மாதிரி.. அசோக்கின் மனநிலை தேறுவதற்கும்.. ஒரு இதமான சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கி தருவதற்கும்.. அடுத்த நாளின் மீது அவனுக்கு ஒரு பிடித்தத்தை ஏற்படுத்துவதற்கும்.. பாரதி, பவானி, மும்தாஜ் ஆகிய மூன்று பெண்களுமே.. மிக மிக முக்கியமான பங்காற்றியிருந்தனர்..!!

மும்தாஜுடன் முன்பே இருந்த அறிமுகத்துடன்.. இப்போது வகுப்புக்கு வந்த இந்த பத்து நாட்களில்.. அவளுடனான அசோக்கின் நெருக்கம் நிறையவே அதிகரித்திருந்தது..!! மாலை நேரத்தில் வகுப்பு முடிந்தவுடன்.. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருந்த சிறிய பூங்காவில்.. விளையாடுகிற குழந்தைகளையும், வாக்கிங் செல்கிற நோயாளிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே.. சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிப் போனது..!! ஆரம்பத்தில் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டவர்கள்.. பிறகு பர்சனல் விஷயங்களைக்கூட பகிர்ந்து கொண்டனர்கள்..!!




"இந்த புக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்..!! உங்களுக்கு படிக்கிறதுக்கு டைம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும்.. எனக்காக கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. சரியா..??"

மும்தாஜ் நீட்டிய புத்தகத்தை வாங்கிகொண்டான் அசோக்.. பக்கங்கள் நிறைந்த தடிமனான புத்தகம்..!! புன்னகை படிந்திட்ட உதட்டுடன்.. புத்தகத் தலைப்பின் மீது பார்வையை வீசியவனுக்கு.. ஒரு புதுவித ஆச்சரியம்..!!

"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உள்ளடக்கிய புத்தகம் என்பது.. அந்த தலைப்பை பார்த்ததுமே புரிந்து போனது..!! அட்டையை புரட்டி பொருளடக்க பட்டியல் பார்த்து.. அந்த சந்தேகத்தை உறுதியும் செய்துகொண்டான் அசோக்..!! அப்படியே மும்தாஜை ஏறிட்டு.. மெலிதான ஒரு புன்முறுவலுடன் சொன்னான்..!!

"க்ரேட்..!!!"

"எ..என்ன.. என்ன க்ரேட்..??"

"இல்ல.. ஒரு முஸ்லிம் பொண்ணு.. ஒரு ஹிந்து பையனுக்கு.. கிறிஸ்டியன் புக் படிக்க தர்றீங்களே.. அதை சொன்னேன்..!!"

"ஹஹ.. இதுல என்ன இருக்கு..?? நான் எல்லா மத கொள்கைகளையும் படிப்பேன்.. எனக்கு எல்லா மதங்கள் மேலயும் நம்பிக்கை உண்டு..!!"

"ஓ..!! எனக்கு எந்த மதத்துலயும் நம்பிக்கை இல்லை..!!"

"ம்ம்.. தெரியும்..!! இந்த புக் படிச்சு பாருங்க.. அந்த நம்பிக்கை வர சான்ஸ் இருக்கு..!! மனுஷங்க பண்ற தப்புக்கு மதங்கள் என்ன பண்ணும்னு தோணும்..??"

"அப்படி என்ன ஸ்பெஷல் இந்த புக்ல..??"

"ம்ம்ம்ம்ம்.. எப்படின்னு சொல்ல தெரியல..!! ஜீசஸோட வாழ்க்கை சரிதம்.. அவரோட எண்ணங்கள்.. போதனைகள்.. எல்லாம் படிக்கிறப்போ.. மனசு அப்படியே ப்யூர் ஆகிப்போய்.. ஒருமாதிரி லேசான ஃபீல் கெடைக்கும்..!! புத்தில ஏதாவது குழப்பம் இருந்தா.. அது உடனே சரியாகிடும்..!! படிச்சு பாருங்க.. உங்களுக்கும் புரியும்..!!"

"ஹ்ஹ.. ஓகே.. ட்ரை பண்றேன்..!!"

ஆர்வம் இல்லை என்றாலும்.. மும்தாஜின் மனதை நோகடிக்க விரும்பாதவனாய்.. அந்த புத்தகத்தை தனது பேகுக்குள் திணித்துக் கொண்டான் அசோக்..!! ஒரு சில வினாடிகள் எதையோ யோசித்தவன்.. பிறகு தானும் அவளுடன் ஏதாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துடன்..

"நா..நான்.. நெறைய ஹாரர் மூவி கலக்க்ஷன்லாம் வச்சிருக்கேங்க.. உங்களுக்கு எதாவது எடுத்துட்டு வந்து தரட்டுமா.. பார்ப்பிங்களா..??" என்று அப்பாவியாக கேட்டான்.

"ஹாரர் மூவினா.. பேய்ப்படமா..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"அய்யோ.. நமக்கு அதுலாம் ஆகாதுங்க.. உவ்வே..!!" - மும்தாஜிடம் ஒரு முகச்சுளிப்பு.

"இ..இல்லைங்க.. இ..இது நீங்க நெனைக்கிற மாதிரி பேய் இல்ல.. வேற மாதிரி இருக்கும்..!!"

"வாட்..?? வேற மாதிரி பேயா..??"

"ம்ம்.. எல்லாம் ஜப்பானீஸ் ஹாரர் மூவிஸ்..!!"

"ஓ.. என்ன வித்தியாசம்..??"

"இந்த ஹாலிவுட் பேயிங்கதான் அசிங்கமா அருவருப்பா இருக்குங்க.. பாத்தாலே பயமா இருக்கும்..!! ஜப்பான் பேயிங்கள்லாம் அப்படி இல்ல.. நல்லா பவுடர், கண்மை, லிப்ஸ்டிக்லாம் போட்டுக்கிட்டு.. அழகா, செமக்யூட்டா இருக்குங்க.." அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டே போக,

"ஹாஹாஹாஹாஹாஹா..!!" மும்தாஜுக்கு சிரிப்பை நிறுத்த வெகுநேரம் ஆனது.

அத்தியாயம் 26

நெடுநாட்களுக்கு அப்புறம் மும்தாஜ் மனம் விட்டு சிரித்ததற்கு மறுநாள்..!!

வடபழனி முனுசாமி சாலையில்.. வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் அசோக்.. பைக்கின் பின்சீட்டில் மும்தாஜ்..!! இரண்டு கால்களையும் ஒருபக்கமாக போட்டு அமர்ந்திருந்தாள்.. அசோக்குடைய முதுகை உரசிவிடக்கூடாது என.. மிகவும் பிரயத்தனப்பட்டு உடலை ஒடுக்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய அவஸ்தையை புரிந்துகொண்ட அசோக்.. தன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்..!! இப்படி ஒரு பிரயாணத்துக்கு காரணமே மும்தாஜ்தான்..!!

"எ..என்னாச்சுன்னு தெரில அசோக்.. வ..வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்னுது..!! எ..என்னை கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ண முடியுமா..??"

சற்றுமுன் அசோக்கிடம் தயங்கி தயங்கி கேட்டதே அவள்தான்..!! அவன் மீதிருந்த நன்மதிப்பில் அவ்வாறு கேட்டுவிட்டாலும்.. இப்போது அருகில் அமர்ந்து பயணிக்கையில், அவளிடம் ஒரு கூச்சம்.. அந்த கூச்சம் தந்த ஒருவித அவஸ்தையுடனே பயணித்துக் கொண்டிருந்தாள்..!!

முனுசாமி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்புகிற மற்றொரு குறுகிய சாலையில்தான்.. அசோக்குடைய அலுவலகம் இருக்கிறது..!! பேருந்து நிலையத்துக்கும் அந்த குறுகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்..!! சீறிக்கொண்டிருந்த வண்டியின் வேகத்தை குறைத்து.. அலுவலகம் இருக்கிற கட்டிடத்தின் முன்பாக நிறுத்திய அசோக்.. பின்பக்கமாக திரும்பி..

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மும்தாஜ்.. வந்துடுறேன்..!!" என்றான்.

மும்தாஜ் இறங்கிக்கொள்ள, வண்டியை சாய்த்து ஸ்டான்ட் இட்டுவிட்டு, அவனும் இறங்கிக்கொண்டான்.

"உங்க ஆபீஸ்க்கு எங்களைலாம் இன்வைட் பண்ண மாட்டிங்களா..??" மும்தாஜ் சற்றே குறும்பாக கேட்க,

"இ..இல்ல.. அ..அதுக்காக இல்ல..!!" அசோக்கிடம் ஒரு தயக்கம்.

"அப்புறம்..??"

"நீ..நீங்க நெனைக்கிற மாதிரிலாம் எங்க ஆபீஸ் இருக்காது..!! ஒரே குப்பையா.. ஒரு கேவலமான ஸ்மெல்லோட.. ரொம்ப கச்சடாவா இருக்கும்..!!"

"ஹாஹா.. அதனால என்ன.. எனக்கு ஓகே..!!" சொல்லிவிட்டு மும்தாஜ் புன்னகைக்க, அசோக் மேலும் ஓரிரு வினாடிகள் தயங்கினான். பிறகு,

"தென்.. இட்ஸ் ஃபைன்..!!"

என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க.. மும்தாஜ் அவனை பின்தொடர்ந்தாள்..!! பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு ஏறி, இருவரும் மேலே சென்றார்கள்.. மூடியிருந்த கதவு திறந்து, அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!!

இவர்கள் சென்ற நேரத்தில் அசோக்கின் நண்பர்கள் மூவருமே அலுவலகத்தில் இல்லை.. ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர்..!! அவர்களிடம் வேலை செய்கிற அசிஸ்டன்ட்கள்தான்.. சிஸ்டத்தில் ஏதோ கேம்ஸ் ஆடியபடி ஹாயாக அமர்ந்திருந்தனர்..!!

அசோக் அவர்களிடம் சென்று ஏதோ ஃபைல் பற்றி கேட்க.. அவர்களில் ஒருவன் மேஜை ட்ராவை கைகாட்டினான்..!! மேஜையை அணுகிய அசோக் ட்ராவை திறந்தான்.. உள்ளே கைவிட்டு, அந்த ஃபைல் அடங்கிய மெமரி ஸ்டிக்கை தேடினான்..!!

அதேநேரம்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த மும்தாஜ்.. காத்திருக்கிற நேரத்தில் அந்த அறையை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்..!! சுவற்றில் ஒட்டியிருந்த அந்த கவிதை காகிதம் அவளுடைய கண்ணில் பட்டது.. ஒரு ஆர்வத்துடன் அந்தக்கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்..!!

அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!

உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??

நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??

புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


"ம்ம்.. கவிதை நல்லாருக்கு..!!" மும்தாஜ் திடீரென சொல்ல, மேஜை ட்ராவுக்குள் கவனத்தை தொலைத்திருந்த அசோக், இப்போது தலையை நிமிர்ந்து பார்த்தான்.

"ஓ.. பிடிச்சிருக்கா..??" என்று கேட்டவாறே மெலிதாக புன்னகைத்தான்.

"எஸ்.. ரொம்ப ரொம்ப..!! எழுதினது யார்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"வேற யாரு.. நான்தான்..!!" அசோக்கின் குரலில் ஒருவித குறும்பு.

"ஹாஹா.. சான்ஸே இல்ல.. சத்தியமா இது நீங்க எழுதினது கெடையாது..!!" மும்தாஜ் உறுதியான குரலில் சொன்னாள்.

"எ..எப்படி சொல்றீங்க..??" அசோக் சற்றே புருவத்தை நெறித்தவாறு கேட்டான்.

"ஒரு பொண்ணோட வலி அப்படியே அப்பட்டமா தெரியுது.. ஒரு ஆம்பளையால இந்த அளவுக்கு அந்த வேதனையை உணர்ந்து எழுதிருக்க முடியாது..!! அந்த வார்த்தைகள்ல தெரியிற கோவமும்.. அந்த அர்த்தத்துல தெறிக்கிற வீரியமும்.. கண்டிப்பா இதை எழுதினது ஒரு பொண்ணாத்தான் இருக்கணும்னு தோணுது..!!"

மும்தாஜ் அந்த மாதிரி சொன்னதுமே.. அசோக்கின் மனதில் ஒரு அதிர்வலை.. அவனது மூளையில் ஒரு மின்னல் வெட்டு..!! ஃபைல் தேடிக்கொண்டிருந்த அவனது கவனம் சிதறி.. வேறொரு யோசனையில் சென்று குவிய ஆரம்பித்தது..!! மும்தாஜ் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!

"கொஞ்ச நாள் முன்னாடி நான்கூட நெறைய கவிதைலாம் எழுதுவேன் அசோக்..!! என்னோட பாஸ்ட்லாம் உங்களுக்கு தெரியும்ல.. நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான பீரியட்ல இருந்தப்போ.. நெறைய எழுதுவேன்..!! எல்லாம் இந்த மாதிரி கவிதையாத்தான் இருக்கும்.. ஆம்பளைங்க மேல வெறுப்பு.. அப்படியே ஒரு ஆத்திரம்.. அடக்க முடியாம ஒரு பழியுணர்ச்சி..!! மனசுல இருக்குற கோவத்தை எல்லாம்.. இந்த மாதிரி கவிதையாத்தான் கொட்டுவேன்..!!"

மும்தாஜ் சொல்லிக்கொண்டே போக.. அசோக்கின் மூளை இப்போது சுறுசுறுப்பாகியிருந்தது.. மிக தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தது..!! அசோக்கிற்கு அந்த கவிதையின் அர்த்தம் ஓரளவுக்கு தெரியும்.. அகராதி புரட்டி அந்தக்கவிதையின் உள்ளர்த்தத்தை கொஞ்சம் உணர்ந்தே வைத்திருந்தான்..!! 'ஒரு ஆணிடம் ஏமாந்த பெண்ணின் வேதனையை சொல்கிற கவிதை இது' என்கிற அளவிலேதான் அவனது எண்ணம் இருந்ததே ஒழிய.. மீராவுக்கு நிஜத்திலே நடந்த கொடுமையின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று.. அவனது மனம் எப்போதும் சந்தேகப்பட்டது இல்லை..!! இப்போது மும்தாஜ் சிந்திய வார்த்தைகளில்.. அவனுக்கு அந்த சந்தேகம் பிறந்திருந்தது..!!

"உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!!"

"நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!"


அவனை விட்டு பிரிந்து செல்கிற அன்று.. கண்களில் நீர் வழிய மீரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது..!! அந்தப்பக்கம் மும்தாஜ் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. இந்தப்பக்கம் அசோக், நடந்துமுடிந்த பலசம்பவங்களை பரபரவென நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவனுடைய உணர்வு நரம்புகளில் எல்லாம், சர்சர்ரென ஒரு அதிர்வு மின்சாரம் பாய.. அந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் மனதில் சரசரவென குழப்பப்படங்களாய் ஓடின..!!

"என் அக்கா சொன்னேன்ல............................. கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா................................. ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்................... நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு.............." - ஃபுட்கோர்ட்டில் அமர்ந்துகொண்டு, முகத்தை மிக இயல்பாக வைத்தவாறு, அக்காவின் காதல் என்கிற பெயரில் மீரா சொன்னவை.

"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??" - புன்னகையுடன் கேட்டாள் பவானி.

"மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!" - பூங்காவில் ஒரு பள்ளி மாணவியிடம் வெறுப்பை உமிழ்ந்தாள் மீரா.

"அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்.. ............... அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!" - புகை வழிகிற வாயுடன் ஸ்ரீனிவாச பிரசாத்.

"எனக்கு விஜய்ன்ற பேரே பிடிக்காது..!!!!" - நடிகர் விஜய் நடித்த சினிமாவிற்கு செல்லலாம் என்று அழைத்தபோது, மீரா முகம் சிவக்க உக்கிரமாக கத்தியது.

"நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!" - மீண்டும் புகைமண்டலத்துக்கு நடுவே ஸ்ரீனிவாச பிரசாத்.


அவ்வளவுதான்.. அசோக்கை உடனடியாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.. அவன் முகத்தில் உச்சபட்சமாய் ஒரு தீவிரம் கொப்பளித்தது..!! உடலின் அத்தனை செல்களிலும் ஒரு பதற்றம் நிறைந்துபோயிருக்க.. நடுங்குகிற கையால் தனது செல்போனை எடுத்தான்.. வெடவெடத்த விரல்களால் ஏதோ ஒரு எண்ணுக்கு டயல் செய்தான்..!! அவனுடைய மாற்றத்தை கவனித்த மும்தாஜ்..

"என்னாச்சு அசோக்..??"

என்று குழப்பமாக கேட்க.. அசோக் அதை அலட்சியம் செய்தான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதும்..

"ஹலோ ஸார்.. நான் அசோக் பேசுறேன்..!!" என்றான்.

"ஆங்.. சொல்லு அசோக்..!!" என்றார் மறுமுனையில் ஸ்ரீனிவாச பிரசாத்.

"ஸார்.. நீங்க அந்த விஜயசாரதின்ற பையன் பத்தி சொன்னிங்கள்ல..??"

"ம்ம்..!!"

"அவன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னிங்க..!!"

"ஆமாம்..!!"

"அந்த வெளிநாடு.. யூ.எஸ்தான..??"

"ஆ..ஆமாம்..!! உனக்கு எப்படி தெரியும்..??"

ஸ்ரீனிவாச பிரசாத் குழப்பமாக கேட்க.. இந்தப்பக்கம் அசோக்கின் மனம் இன்னும் தெளிவு பெற ஆரம்பித்தது.. அவனது சந்தேகம் இப்போது மிகவும் உறுதிப்பட்டுப் போனது.. நெஞ்சில் எழுந்திருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது..!! அவசரமாக ஏதோ யோசித்தவன், உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!

"ஸார்.. நீங்க இப்போ ஃப்ரீயா..?? எனக்காக கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமா..??"

ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள.. அவன் நன்றி சொல்லி காலை கட் செய்தான்..!! உடம்பில் ஒரு பதட்டத்துடன் அந்த அறைவாசலை நோக்கி நகர்ந்தான்..!!

"என்னாச்சு அசோக்..??" மீண்டும் கேட்ட மும்தாஜிடம் திரும்பி,

"ஸாரி மும்தாஜ்.. நீங்க ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடுறீங்களா.. எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு..!!" என்றான்.

மும்தாஜின் பதிலுக்காக கூட காத்திராமல், அலுவலகத்தை விட்டு அவசரமாய் வெளியேறினான்.. தடதடவென படியிறங்கி கீழ் தளத்துக்கு வந்தான்.. பைக்கின் நெற்றியில் சாவி போட்டு திருகி, கிக்கரை படக்கென உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முழுவதுமாக முறுக்கி, வண்டியை விர்ரென பறக்க விட்டான்..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்தின் முன்பாக அமர்ந்திருந்தான்..!! யாரிடமோ டெலிபோனில் பேசியவர்.. பேசிமுடித்ததும் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தார்..!! அசோக்கோ பொறுமையற்றவனாய் கேட்டான்..!!

"என்ன ஸார் சொல்றாங்க..??"

"அந்த விஜயசாரதி இந்தியாதான் வந்திருக்கானாம்.. ரெண்டு நாளாச்சு..!! அவனோட இண்டியன் காண்டாக்ட் நம்பர் தெரியலைன்னு சொல்றாங்க..!!"

"ஓ..!! இப்போ என்ன ஸார் பண்றது..??"

"ம்ம்ம்ம்.. அவங்களோட மாதவரம் பங்களா அட்ரஸ் எனக்கு தெரியும்.. அங்கதான் போய் விசாரிக்கணும்..!!"

"அ..அப்போ வாங்க ஸார் இப்போவே கெளம்பலாம்..!!" அசோக் அவசரப்பட்டான். ஸ்ரீனிவாச பிரசாத் நிதானமாகத்தான் இருந்தார்.

"டேய்.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத..!! உன் சந்தேகம் சரிதான்னு உனக்கு தோணுதா..??"

"ஹையோ.. நான் ஸ்ட்ராங்கா நம்புறேன் ஸார்..!! இந்த விஜயசாரதிதான் மீராவுக்காக அந்த ஸிம் வாங்கி தந்திருக்கணும்.. அவளை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்திருக்கணும்.. அதனாலதான்.. நீங்க மீராவோட அடையாளம்லாம் சொல்லி அவளை தெரியுமான்னு கேட்டப்போ.. அவன் தெரியாதுன்னு சொல்லி மழுப்பிருக்கனும்..!! அவன்தான் ஸார்.. அவனேதான்.. சந்தேகமே இல்ல..!! அவனை விசாரிச்சா என் மீரா எங்க இருக்கான்னு தெரிஞ்சிடும் ஸார்..!!"

"ஹ்ம்ம்..!! சரி நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! இப்போ மட்டும் அவன் வாயை திறப்பான்னு என்ன நிச்சயம்..?? இப்போவும்.. அவளை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அவன் அடம்பிடிச்சா..??"

"விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மையை சொல்லுவான் ஸார்..!!"

"டேய்.. அவங்கள்லாம் பெரிய ஆளுங்கடா.. அந்த மாதிரிலாம் அடிச்சு விசாரிக்க முடியாது..!!"

"ஹையோ நானும் அந்த அர்த்ததுல சொல்லல ஸார்..!! அவன்கிட்ட எப்படியாவது, கெஞ்சி கூத்தாடியாவது மீரா பத்தி தெரிஞ்சுக்கணும்.. ப்ளீஸ் ஸார்..!!"

அசோக் கெஞ்சலாக சொல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் அவனுடைய முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! 'காதல் மனிதனை என்னன்ன பாடெல்லாம் படுத்துகிறது?' என்பது மாதிரி இருந்தது அவரது பார்வை..!! பிறகு ஒரு பெருமூச்சுடனே எழுந்து கொண்டவர்..

"சரி வா.. கெளம்பலாம்..!!" என்றார்.

வடபழனி காவல் நிலையத்தில் இருந்து.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் போலீஸ் ஜீப்பில் கிளம்பினார்கள்..!! நூறு அடி சாலையை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பின் வேகத்தை அதிகரித்தார்..!! அரை மணி நேரமும், ஐந்து நிமிடங்களும் கழிந்த போது.. அந்த மாதவரம் வீட்டை அவர்கள் அடைந்திருந்தனர்..!! ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு முன்பே அறிமுகமாகியிருந்த.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை சந்தித்து பேசினர்..!!

"என்ன ஸார்.. தம்பியை தேடிக்கிட்டு அடிக்கடி வர்றீங்க.. எதுவும் பிரச்சினை இல்லையே..??"

"இல்ல ஸார்.. ஆக்சுவலா இது வேற பிரச்சினை.. மிஸ்டர் விஜயசாரதி மூலமா யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் ஏதாவது கெடைக்குமான்னு பாக்குறோம்.. வேற ஒன்னுல்ல..!!"

"ஹ்ம்ம்.. தம்பி ரெண்டு நாளு முன்னாடிதான் இந்தியாவுக்கே வந்தாப்ல..!!"

"தெரியும் ஸார்.. நீங்க தந்த நம்பருக்கு ட்ரை பண்ணிட்டுத்தான் இங்க வர்றேன்..!!"

"ஓ.. அப்படியா.. சரி சரி..!! ம்ம்ம்.. அவர் இப்போ வீட்ல இல்லிங்களே.. வெளில போயிருக்காரு..!!"

"எங்க போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா..??"

"எங்க போயிருப்பாரு.. சனிக்கிழமை சாயந்திரம்.. ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு ரெட்ஹில்ஸ்ல இருக்குற கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருப்பாரு..!!"

"ம்ம்.. அவரை காண்டாக்ட் பண்றதுக்கு எதுவும் நம்பர் இருக்கா..??"

"ஓ எஸ்.. இருக்கே..!!"

அவர் நம்பரை சொல்ல.. அசோக் தனது செல்போனில் சேகரித்துக் கொண்டான்..!! சேகரித்துக் கொண்ட வேகத்திலேயே அந்த எண்ணுக்கு கால் செய்தான்.. என்கேஜ்டாக இருந்தது..!! சிறிது நேரம் காத்திருந்துவிட்டு.. மீண்டும் கால் செய்து பார்க்க.. மீண்டும் என்கேஜ்ட்..!! திரும்பவும் அந்த எண்ணை முயற்சி செய்ய நினைத்த அசோக்கை.. இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் தடுத்தார்..!!

"வேணாம் அசோக்.. விடு..!!"

"ஏன் ஸார்..??"

"இந்த மேட்டரை ஃபோன்ல பேசுறது அவ்வளவு நல்லதில்லன்னு தோணுது.. நேர்லயே போய் பேசிடலாம்..!!" அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், எதிரே இருந்த பி.ஏவிடம் திரும்பி,

"ஸார்.. அந்த ரெட்ஹில்ஸ் கெஸ்ட் ஹவுஸோட அட்ரஸ் கொஞ்சம் சொல்றீங்களா..??" என்று கேட்டார்.

அதே நேரம்..

"No 37, தேவன்பு ஸ்ட்ரீட், off G.N.T ரோட், ரெட்ஹில்ஸ்..!!"

கார் ஓட்டிக்கொண்டிருந்த விஜயசாரதி.. காதில் வைத்திருந்த செல்ஃபோனில் அந்த கெஸ்ட் ஹவுஸின் முகவரியை சொல்லிக்கொண்டிருந்தான்..!! அடுத்த முனையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது.. சாட்சாத் நமது மீராவேதான்..!!!!

"நீதான் ஏற்கனவே அந்த வீட்டுக்கு வந்திருக்கல..?? உடம்புல ஒட்டுத்துணி இல்லாம.. நாலு மணி நேரம் அந்த வீட்ல படுத்திருந்த.. ஞாபகம் இல்ல..??" விஜயசாரதியின் குரலில் எள்ளல் தொனித்தது.

"ஏன் இப்படிலாம் பண்ற..??" கேட்ட மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஆத்திரமும், ஆதங்கமும் வெடித்து சிதறியது.




"ஹாஹா.. அப்படி என்ன பண்ணிட்டேன்..??"

"ஏற்கனவே என் வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கிட்ட.. இன்னும் உனக்கு வெறி அடங்கலையா..??"

"ஹாஹாஹாஹாஹாஹா..!!!" பெரிதாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்திய விஜயசாரதி தொடர்ந்து பேசினான்.

"என்ன பண்ண சொல்ற டார்லிங்..?? நான் பாட்டுக்கு கம்முனு இருந்தேன்.. உண்மையை சொல்லப்போனா.. என் செல்லத்தை நான் சுத்தமா மறந்தே போயிட்டேன் தெரியுமா..?? ப்ராமிஸ்டா செல்லம்.. என்னை நம்பு..!!"

"...................."

"ஹ்ம்ம்.. சும்மா இருந்தவன்கிட்ட வந்து.. 'நான் இருக்கேன், நான் இருக்கேன்'ன்னு உன்னை நீயே ஞாபகப்படுத்தி விட்டுட்டு.. இப்போ என்னை குத்தம் சொன்னா என்ன நியாயம் டார்லிங்..??"

"நான் என்ன பண்ணினேன்..??"

"என்ன பண்ணுனியா..?? உன்னை யார் போலீஸ்க்குலாம் போக சொன்னது..??"

"எத்தனை தடவை சொல்றது.. நான் போலீஸ்க்கு போகல, போலீஸ்க்கு போகலன்னு..!!"

"அப்புறம் எப்படி அவங்களுக்கு என் நம்பர் தெரிஞ்சது.. உன்னை பத்திலாம் தெரிஞ்சது..??"

"அது வேற பிரச்னை.. சொன்னா உனக்கு புரியாது..!!"

"ஹாஹா.. வாட்டெவர்.. ஐ டோன்ட் கேர்..!! சும்மா இருந்தவன் மனசுல.. அந்த ஆள் கால் பண்ணி உன்னை பத்தி விசாரிச்சதும் ஆசை வந்துடுச்சும்மா..!! உன் உடம்பு.. அந்த ஷேப்.. அந்த ஸ்மெல்.. நீ எனக்கு தந்த சுகம்.. வாவ்...!!! நெனச்சு பாத்ததுமே உடம்புல அப்படியே குப்புனு ஒரு சூடு ஏறிடுச்சு செல்லம்..!! அதான் இன்னும் ரெண்டு வாரத்துல இண்டியா போறோமே.. ரெண்டாவது இன்னிங்ஸ் ஆடிப்பாக்கலாமான்னு ஒரு ஆசை வந்துடுச்சு..!! அந்த ஆசையை அடக்க முடியாமத்தான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணினேன்..!!"

"ப்ளீஸ் விஜய்.. இது வேணாம்.. என்னை விட்ரு..!!" மீரா திடீரென கெஞ்சினாள்.

"அப்போ அந்த வீடியோ உனக்கு வேணாமா..?? நெட்ல போட்ரலாமா..??"

"நோ..!!!!"

"எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா.. என் மூஞ்சி அதுல சுத்தமா தெரியாது..!! உன்னோட லவ்லி ஃபேஸ்தான் அதுல ஹைலைட்டே..!!"

"ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ற.?? ப்ளீஸ்.. அந்த வீடியோவை எங்கிட்ட குடுத்திடு..!!"

"அப்போ ரெட்ஹில்ஸ் வா.. ஜஸ்ட் இன்னைக்கு நைட் மட்டும்.. சித்திரவதை பண்ண கூப்பிடல.. சந்தோஷமா இருக்கலாம்னுதான் கூப்பிடுறேன்..!! இன்னும் என் செல்ஃபோன்லதான் அந்த வீடியோ இருக்குது.. காலைல நீ போறப்போ என் செல்ஃபோனோட சேர்த்து, அதை உனக்கு காதல்பரிசா குடுத்துடுறேன்.. ஓகே வா..??"

"...................."

"ஹ்ம்ம்.. அன்னைக்கு நீ மயக்கத்துல இருந்ததால.. நெறைய விஷயம் ட்ரை பண்ண முடியலடி செல்லம்.. எனக்கு ரொம்ப வருத்தம் தெரியுமா..?? அதெல்லாத்தையும் இன்னைக்கு பண்ணி பாக்குறோம்.. எல்லாம் உன்னோட சுயநினைவோட.. தெகட்ட தெகட்ட..!! You are going to enjoy this chellam.. I promise..!!"

விஜயசாரதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவனது நம்பருக்கு இன்னொரு கால் வருவதை.. 'கீங் கீங்' என்று ஒலியெழுப்பி அவனது செல்ஃபோன் அறிவித்தது..!! உடனே..

"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா செல்லம்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் திரும்ப கூப்பிடுறேன்..!!"

என்றுவிட்டு மீராவுடனான தொடர்பை துண்டித்தான்..!! செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தவன்.. அன்னோன் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்திருந்தப்பதை தெரிந்துகொண்டான்.. அசோக்கின் நம்பர் அது..!! அன்னோன் நம்பர் என்று தெரிந்ததும்.. திரும்ப கால் செய்யும் எண்ணத்தை கைவிட்டான்.. மீண்டும் மீராவின் எண்ணை அழைக்க நினைத்தான்..!! அதற்குள்ளாகவே அவனது செல்ஃபோனுக்கு வேறொரு நம்பரில் இருந்து கால் வந்தது..!!

"KASI CALLING..!!!"

என்று பளிச்சிட்டது செல்ஃபோன் டிஸ்ப்ளே..!! காசி.. போதைப்பொருள் விநியோகிப்பவன்.. போலீஸாரால் வலைவீசி தேடப்படுகிறவன்..!! விஜயசாரதி அந்த காலை அட்டண்ட் செய்தான்.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் பேசினான்..!!

"சொல்லு மாமு.. எங்க இருக்குற..??"

"அங்கதாண்டா வந்துட்டு இருக்குறேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்..!!"

"ஓ.. நானும் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..!! அதுசரி.. சரக்கு ரெடியா..?? அதை சொல்லு மொதல்ல..!!"

"ம்ம்.. ரெடி ரெடி..!! நீ சொன்னதை விட நெறயவே ரெடி..!!"

"வாவ்...!!!!! தேட்ஸ் க்ரேட்..!!!!!" விஜயசாரதி குதுகலிக்க, காசியின் குரலில் ஒரு சீரியஸ்னஸ்.

"மாமு இன்னொரு விஷயம்..!!"

"என்ன..??"

"சொல்றேன்னு தப்பா நினைக்காத.. அமவுன்ட்டு உடனே வேணுண்டா..!!"

"ஏய்.. என்னடா இது.. ஏதோ புது ஆள்ட்ட பேசுற மாதிரி பேசுற..?? நமக்குள்ள பணம்லாம் ஒரு பிரச்சினையா..??"

"அதுக்கு சொல்லல மாமு..!! முன்ன மாதிரி இல்ல.. இப்போலாம் கெடுபுடி ஜாஸ்திடா.. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அரேஞ்ச் பண்ணிருக்கேன்..!! அதில்லாம.. நானே இப்போ பல பிரச்னைல இருக்கேன்..!! பணம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது மாமு..!!"

"ப்ச்.. ஒன்னும் கவலைப்படாத.. உடனே வாங்கிக்கலாம்..!! ஆமாம்.. வேற எதோ பிரச்னைன்னு சொன்னியே.. என்னது..??"

"இப்போ வேணாம்.. எல்லாம் அங்க வந்து விவரமா சொல்றேன்..!!"

"வா வா..!! ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம்ல.. உனக்கு பணம் மட்டும் இல்ல.. செம்மையா ஒரு விருந்தே ரெடி பண்ணி வச்சிருக்கேன் மாமு..!!"

"விருந்தா.. என்ன விருந்து..??"

"கோழி விருந்து மாமு..!! பொட்டைக் கோழி.. அதுலயும் சக்கையான வெடக்கோழி..!!"

"ஏய்.. என்னடா சொல்ற..??"

"அனுஷ்கா பிடிக்குமா உனக்கு ..??"

"யாரு.. நம்ம அருந்ததி அனுஷ்காவா..??"

"ம்ம்.. அவளேதான்..!!"

"பிடிக்குமே.. ஏன் கேக்குற..??"

"அவள்லாம் இவகிட்ட பிச்சை வாங்கணும்.. அந்த அளவுக்கு இருப்பான்னா பாத்துக்கோ..!!"

"யார்டா அது.. ஐட்டமா..??"

"ஐட்டமா..?? அடப்பாவி.. நானே தேத்துனதுடா..!!"

"நீயே தேத்துனதா.. அப்புறம் என்னையும் கூப்பிடுற.. அந்தபொண்னுக்கு ஓகேவா..??"

"அவகிட்ட பெர்மிஷன்லாம் வேற கேக்கணுமா..?? நாம நில்லுனா நிப்பா.. உக்காருனா உக்காருவா மாமு..!!"

"என்னடா சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல..!!"

"அவ மேட்டர் ஒன்னு நம்மகிட்ட மாட்டிருக்குது மாமு.. நாம என்ன சொன்னாலும் அவ கேட்டுத்தான் ஆகணும்..!! என்ன்ன்ன சொன்னாலும்..!!! புரியுதா..??"

"ஓ..!! ஏதாவது பிரச்னையாகிட போகுதுடா..!!"

"ஒரு பிரச்னையும் இல்ல மாமு.. அவளை எனக்கு நல்லா தெரியும்.. சரியான தொடை நடுங்கி.. புள்ளப்பூச்சி மாமு அவ..!! அந்த புள்ளப்பூச்சியை இன்னைக்கு பறக்கவிட்டு பறக்கவிட்டு அடிச்சு நசுக்குறோம்.. புரியுதா..?? சீக்கிரம் வா.. ஒரு பொண்ணுகிட்ட இதெல்லாம் பண்ணிப் பாக்கனும்னு உனக்கு அசிங்கமான ஆசைலாம் இருக்கும்ல.. அதெல்லாம் அவகிட்ட இன்னைக்கு பண்ணிப் பாத்துடலாம்.. வா..!!" குரூரமாக சொல்லிவிட்டு காலை கட் செய்தான் விஜயசாரதி.

அதேநேரம்..

ரெட்ஹில்ஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மீரா.. விஜயசாரதியிடம் பேசிமுடித்து கையிலேயே வைத்திருந்த செல்ஃபோனை.. (அசோக்குடன் பழகிய காலத்தில் அவன் அறியாமல் பதுக்கி வைத்திருந்த அந்த செல்ஃபோனை..) இப்போது ஹேண்ட் பேக் திறந்து உள்ளே வைத்தாள்..!! அந்த மாதிரி அவள் உள்ளே வைக்கையில்.. பேகுக்குள் இருந்த அந்த வஸ்து பளிச்சென்று வெளியே தெரிந்தது..!!

அரையடிக்கும் சற்று அதிகமான நீளத்தில்.. பளபளவென மினுமினுத்த ஒரு உலோக கத்தி..!!

"இந்த லெஃப்ட் எடுத்துக்கோங்கண்ணா..!!" ஆட்டோ ட்ரைவரிடம் மிக இயல்பான குரலில் சொன்னாள் மீரா.

அதேநேரம்..

அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் ஜீப்பில் ஏறியிருந்தார்கள்.. ரிஸ்வான் ரோட்டில் மிதமான வேகத்தில் ஜீப் சென்றுகொண்டிருந்தது..!! அசோக்கும் சரி.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.. முகத்தை மிக இறுக்கமாகவே வைத்திருந்தனர்.. அவரவர் மூளைகளில் விழைந்த சிந்தனைகளிலேயே மிக கவனமாக இருந்தனர்..!!

திருமுருகன் நகர் ஜங்கஷனில் எதிர்கொண்ட ட்ராஃபிக்கை சமாளித்து.. ரெட்ஹில்ஸ் வந்து சேர அவர்களுக்கு அரைமணிநேரம் ஆனது..!! பி.ஏவிடம் வாங்கிக்கொண்ட முகவரியை அடைய மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது..!!

இளஞ்சிவப்பு நிறத்தில் மிக பளபளப்பாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. அருகில் வேறேதும் வீடுகள் இன்றி தனித்திருந்தது..!! பத்தடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர்.. பச்சை மரங்கள் அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டி வளர்ந்து, நீளநீளமாய் வெளியே தலைநீட்டின..!! இரும்பு பட்டைகளாலும் மரத்தகடுகளாலும் ஆன அகலமான வாயிற்கதவு..!! பறவைகளின் சப்தத்தை தவிர.. சுற்றிலும் நிசப்தம்..!!

வாசலில் வாட்ச்மேன் இல்லை.. கேட்டை திறந்த ஸ்ரீனிவாச பிரசாத் உள்ளே நுழைந்தார்.. அசோக் அவரை பின்தொடர்ந்தான்..!! கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்த வீட்டுக்கு.. இங்கிருந்தே சிமென்ட்டில் சாலை போடப்பட்டிருந்தது.. ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அகலத்திலான குறுகலான சாலைதான்..!! அந்த சிமெண்ட் சாலையின் இருபுறமும்.. பச்சை பச்சையாய் கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த செடிகள்.. அழகாகவும் கச்சிதமாகவும் முடிவெட்டிக் கொண்டிருந்தன அந்த செடிகள்..!! அசோக் அந்த செடிகளில் விரல்கள் நுழைத்து தடவியவாறே.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பின்னால் சென்றான்..!!

வீட்டை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் காலிங் பெல் அழுத்தினார்..!! உள்ளே குருவி கத்துகிற எஃபக்டில் காலிங் பெல் கதறுவது வெளியிலேயே கேட்டது..!! இருந்தாலும் சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து எந்த எதிர்ச்செயலும் இல்லை..!! மேலும் இரண்டு மூன்று முறை காலிங் பெல் அழுத்தி ஸ்ரீனிவாச பிரசாத் சோர்ந்து போன சமயத்தில்தான்.. அசோக் எதேச்சையாக கதவின் மீது கை வைக்க.. அது கொஞ்சமாய் திறந்து கொண்டது..!! உடனே இருவரது முகத்திலும் ஒரு ஆச்சரியம்.. கொஞ்சம் குழப்பம்..!!

"தெறந்தேதான் இருக்கு ஸார்..!!"

சொல்லிக்கொண்டே அசோக் கதவின் மீது கைவைத்து நன்றாக உள்ளே தள்ள.. அது முழுவதுமாய் திறந்து கொண்டது..!! இயல்பாக உள்ளே நுழைந்து வீட்டுக்குள் பார்வையை வீசிய இருவரையும்.. ஒரு உச்சபட்ச அதிர்ச்சி வந்து தாக்கியது.. இருவரது இருதயங்களும் படக்கென சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தன..!!

உள்ளே.. கருஞ்சிவப்பான ரத்தவெள்ளத்தில்.. இரண்டு மனித உடல்கள் மிதந்து கொண்டு கிடந்தன.. இரண்டுமே ஆணின் உடல்கள்..!! ஒருவன் சோபாவில் சரிந்திருந்தான்.. ஒருவன் தரையில் வீழ்ந்திருந்தான்..!! தலை, மூக்கு, மார்பு, தொடை என.. உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் சராமாரியாக குருதி வெளிப்பட்டு வெளியே வடிந்திருந்தது..!! ரத்தத்தில் நனைந்த கண்ணபிரானின் உலோக சிலை வேறு.. அவர்களுடன் சேர்ந்து தரைவிரிப்பில் வீழ்ந்து கிடந்தது..!! இருவரும் நூறு சதவீதம் இறந்துவிட்டார்கள் என்பது.. பார்க்கையிலேயே தெரிந்தது..!!

ஸ்ரீனிவாச பிரசாத்தாவது பரவாயில்லை.. அசோக் அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.. கண்களில் கண்ட காட்சியில் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்-தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல், படக்கென அவருடைய வலதுகையில் அந்த பிஸ்டல் முளைத்தது.. அதன் மேற்புறத்தை பிடித்து இழுத்து, சேஃப்டி கேட்சை விடுவித்துக் கொண்டவர்.. தடதடவென வீட்டுக்குள் ஓடினார்..!! அசோக் என்ன செய்வதென்றே தெரியாமல்.. இறந்து கிடந்த பிணங்களை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்..!!

உள்ளே ஓடிய ஸ்ரீனிவாச பிரசாத்.. கையில் விறைப்பாக பிடிக்கப்பட்ட துப்பாக்கியுடன்.. ஒவ்வொரு அறையாக சென்று அலசினார்.. ஒருவரும் அகப்படவில்லை..!! பின்பு வீட்டுக்கு பின்புறமாக ஓடினார்.. பின்புற வாசல் திறந்தே கிடந்தது..!! வீட்டுக்கு பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லை.. பெரிய பரப்பிலான காலியிடம்.. குட்டையும், நெட்டையுமாய் ஆங்காங்கே செடிகள்..!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை..!!

ஸ்ரீனிவாச பிரசாத் சிறிது நேரம் அங்கேயே நின்று சுற்று முற்றும் பார்த்தார்.. உபயோகமாக எதுவுமில்லை என்று அறிந்தபிறகு, 'ச்சே' என்ற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்..!! அவர் வீட்டுக்குள் புகுந்த சில வினாடிகளில்.. வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த புதருக்குள் இருந்து.. மீரா வெளிப்பட்டாள்..!!!! அவளுடைய முகம் வியர்த்து வடிந்தது.. செடிகளுக்கு மத்தியில் நீளமாக சென்ற அந்த ஒத்தையடிப்பாதையில் நுழைந்து.. புயல்வேகத்துடன் ஓடினாள்..!!

ஹாலுக்குள் நுழைந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. பிஸ்டலின் சேஃப்டி கேட்சை போட்டு.. இடுப்பில் செருகிக்கொண்டார்..!! பிரம்மை பிடித்தவன் மாதிரி நின்றிருந்த அசோக்கிடம்..

"உள்ள யாரும் இல்ல அசோக்..!! உசுரு இருக்குதான்னு பாத்தியா..??" என்று கேட்டார்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே.. அவரே ரத்தவெள்ளத்தில் மிதந்தவர்களிடம் பார்வையை திருப்பினார்.. அதில்.. சோபாவில் சரிந்திருந்தவனின் முகத்தை சற்றே உன்னிப்பாக கவனித்ததும்.. நெற்றியை சுருக்கினார்..!!

"இவன் நெற்குன்றம் காசில..?? இவன் எப்படி இங்க..??" என்று குழப்பமாக முணுமுணுத்தார்.

விழுந்து கிடந்தவர்களிடம் குனிந்து.. அவர்களது மூச்சையும், நாடித்துடிப்பையும் சோதனை செய்து பார்த்தார்..!! ஒருசிலவினாடிகள்.. பிறகு எழுந்துகொண்டவாறே.. அசோக்கிடம் சொன்னார்.!!

"உசுரு இருக்குற மாதிரி தெரியல அசோக்.. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..!! நீ அப்படியே அசையாம நில்லு.. இங்க இருக்குற எதையும் தொட்டுறாத.. சரியா..??"

பதட்டமான குரலிலேயே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்.. பாக்கெட்டில் இருந்து செல்ஃபோன் எடுத்தார்.. 'பட் பட்'டென அந்த செல்ஃபோனை அழுத்தியவர்.. பிறகு..

"ஆங்.. கனகு.." என்றவாறே வாசலை நோக்கி நடந்து வெளியே சென்றார்.

அசோக் வீட்டுக்குள்ளேயே அசையாமல் நின்றிருந்தான்.. இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னுமே அவனால் மீளமுடியவில்லை.. உண்டான படபடப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு..!! கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான்.. அவனுடைய கவனத்தை அந்தப்பொருள் ஈர்த்தது..!! உடனே அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்.. கண்களில் ஒரு கூர்மை..!! நின்ற இடத்தில் இருந்து மெல்ல அடியெடுத்து வைத்தான்.. தரையில் விழுந்து கிடந்தவனை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. கீழே கிடந்தவனின் காலுக்கடியில் கிடந்த அதை கையில் எடுத்தான்..!!

கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!




அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! 'அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??' ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!

கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!


மீரா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் அவனது காதுக்குள் க்றீச்சிட்டன..!! வியர்த்துப் போனது அவனுக்கு இப்போது.. உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.. இருதயம் இன்னும் வேகமாய் படபடக்க ஆரம்பித்தது..!!

அப்போதுதான் அவனது மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்று..!! 'மீரா இங்கே வந்து சென்றிருக்கிறாள் என்றால்.. ஒருவேளை.. நான் இந்த விஜயசாரதிக்கு கால் செய்தபோது என்கேஜ்டாக இருந்ததே.. அந்த நேரத்தில் இவன் மீராவுடன் பேசிக்கொண்டிருந்திருப்பானோ..?? அப்படியானால்.. இவனது செல்ஃபோனில் மீராவின் தொடர்பு எண் பதிவாகியிருக்க வேண்டும் அல்லவா..??'

அந்த எண்ணம் மனதில் உதயமானதும் அசோக் மீண்டும் பரபரப்பானான்..!! 'எதையும் தொட்டுறாத' என்று எச்சரித்து விட்டு சென்றிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்தான்..!! செங்குருதியில் நனைந்துபோய் கிடந்த விஜயசாரதியிடம் குனிந்தான்.. அவனுடைய சட்டை, பேன்ட் பாக்கெட் எல்லாம் தடவி.. அவனது செல்ஃபோனுக்காக துழாவினான்.. கிடைக்கவில்லை..!! அருகில் இருந்த மேஜை, டீப்பாய், அலமாரி எல்லாம் அவசரமாக தேடினான்.. எங்கேயும் செல்ஃபோனை காணவில்லை..!!

உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவன்.. தனது செல்ஃபோன் எடுத்து.. சேகரித்து வைத்திருந்த விஜயசாரதியின் எண்ணுக்கு கால் செய்தான்.. கால் செய்ததுமே.. ரிங்டோன் சத்தம் எங்கிருந்தாவது வருகிறதா என்று.. காதுகளை கூர்மையாக்கி கொண்டான்..!!

ரிங்டோன் சத்தம் வரவில்லை.. மறுமுனையில் இருந்து டயல்டோன் சத்தம்தான் காதில் ஒலித்தது..!! 'கால் செல்கிறது.. ரிங்டோன்சப்தம் வரவில்லையே..' என்று அசோக் குழப்பமாக விழித்துக் கொண்டிருக்கையிலேயே.. அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! அடுத்த நொடியே.. ஆதங்கமும், கோவமும் நிறைந்த மாதிரியாக மீராவின் குரலும்..!!

"பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்காத அசோக்.. நீ நெனைக்கிறதுலாம் எப்போவும் நடக்காது.. புரிஞ்சுக்க..!!" சூடாக சொன்னாள் மீரா.

அசோக்கால் நம்பவே முடியவில்லை..!! 'நிஜம்தானா..?? மீராதானா இது..?? என் மீராதான் இப்போது என்னுடன் பேசுவதா..?? நிஜமாகவே அவளுடைய குரல்தான் இப்போது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதா..??' உள்ளத்தில் ஆச்சரியம் பீறிட.. உடனே ஒரு பதற்றமும் அவனை வந்து தொற்றிக்கொள்ள..

"மீ..மீரா.. மீரா.." என்றான் தவிப்பாக.

"ஏண்டா இப்படி பண்ற..?? போய்த் தொலையுறா சனியன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான..?? எதுக்கு இன்னமும் என்னை தேடிட்டு இருக்குற..??" மீரா சீற, அசோக்கின் கண்களில் முணுக்கென்று கண்ணீர்.

"எ..என்ன மீரா பேசுற.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்.. நீ எனக்கு வேணும் மீரா..!! ப்ளீஸ் மீரா.. எங்கிட்ட வந்துடு...!!"

"இல்ல அசோக்.. என்னால அது முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!"

"இன்னும் என்ன புரிஞ்சுக்கணும்.. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சு மீரா..!! இதுக்காகத்தான நீ ஓடி ஒளிஞ்ச.. இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..!! உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!! நீ இப்போ எங்க இருக்குறன்னு சொல்லு.. நான் மட்டும் தனியா வர்றேன்.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..!! நான் உன்மேல எந்த அளவுக்கு லவ் வச்சிருக்கேன்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ மீரா.. ப்ளீஸ்..!!"

"ஐயோ.. உன் லவ்வை பத்தி நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்டா.. நீதான் என் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்ற..!! இந்த விஷயம் தெரிஞ்சா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனச்சா.. நான் உன்னை விட்டு விலகுனேன்னு நெனைக்கிற..?? சொன்னா கேளுடா.. நான் உனக்கு வேணாம்.. இந்தப்பாவி உனக்கு வேணவே வேணாம்..!!" மீராவின் குரல் இப்போது அழுகையாக ஒலித்தது.

"இல்ல.. நீதான் எனக்கு வேணும்..!! நீ எனக்கு சொந்தமானவ மீரா.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு காரணம் இருக்கு.. என்கூட பழகுனதுக்கு காரணம் இருக்கு.. என்னை விட்டு பிரிஞ்சதுக்கு காரணம் இருக்கு..!! இப்போ என்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்குறதுக்கு கூட காரணம் இருக்கு மீரா..!!"

"எ..என்ன சொல்ற நீ..??"

"நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முயற்சிதான் இதெல்லாம்..!! அந்த காதல்தான் இப்போ உன்னையும் என்னையும் பேச வச்சிருக்கு..!! புரிஞ்சுக்கோ மீரா.. நீயும் நானும் சேரணும்.. அதுதான் விதி..!!"

அசோக் சொல்ல.. அடுத்த முனையில் மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! அவளுடைய அமைதி அசோக்கை பதற்றம் கொள்ள செய்தது..!!

"மீ..மீரா.. என்னாச்சு மீரா.. ஏதாவது பேசு மீரா..!!"

"ஓ.. நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்குமா..??" மீராவின் குரலில் ஒருவித இறுக்கம்.

"ஆ..ஆமாம்..!!" அசோக்கின் குரலில் ஒருவித தடுமாற்றம்.

"சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!! இப்போ கட் பண்றேன்.." படபடவென பேசிய மீரா ஒருகணம் நிறுத்தி..

"ஐ லவ் யூ..!!" என்று தழதழக்கிற குரலில் சொல்லிவிட்டு, பட்டென்று இணைப்பை துண்டித்தாள்.

"மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!"

என்று பதட்டத்துடன் கதறிக்கொண்டிருந்த அசோக்கிற்கு.. இணைப்பு துண்டிக்கப்பட்ட ஓசையே கேட்க கிடைத்தது..!! மீண்டும் அந்த எண்ணுக்கு அவன் கால் செய்ய.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது..!!

என்ன செய்வதென்று புரியாத அசோக்.. அப்படியே தலையை பிடித்துக்கொண்டான்.. தலை எல்லாம் வின்வின்னென்று வலிப்பது போல ஒரு உணர்வு..!! சோர்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..!! அவனுடைய இதயமெல்லாம் தாங்க முடியாத மாதிரி ஒரு வலி..!! கண்களில் கண்ணீர் பூத்து..கன்னம் நனைந்து ஓட ஆரம்பித்தது..!!

"பேசிட்டேன் அசோக்.. வந்துட்டு இருக்காங்க..!!"

சொல்லிக்கொண்டே ஸ்ரீனிவாச பிரசாத் வீட்டுக்குள் நுழைய.. அசோக் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்..!! கையிலிருந்த பென்டன்ட்டை.. அவர் அறியாமல் தனது பாக்கெட்டுக்குள் திணித்து மறைத்தான்..!! அவர் பக்கமாய் திரும்பி.. மிக இயல்பாக ஒரு பார்வை பார்த்தான்..!!

 

7 comments:

  1. Replies
    1. நன்றி தல .....உங்களுடைய எல்லா கதைகளையும் படித்து எனது கணினியில் செமித்துவைதுள்ளேன் அனைத்தும் அறுமை..தங்களின் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
      ---திரு

      Delete
  2. next update.......................?

    ReplyDelete
  3. Your word writting narriation was very nice.

    ReplyDelete
  4. கடைசில தாயோலி வில்லனும் கூட்டாளியும் செத்துட்டானுங்க

    ReplyDelete

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...