Social Icons

அசோக் காலிங் அசோக் - 5









எபிஸோட் – V

சீனியர் குப்புற கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவர் ஏன் அப்படி அழவேண்டும் என்று எனக்கு சத்தியமாக விளங்கவில்லை. காதலியை கிஸ் அடிக்கையில்.. கையில் அகப்பட்ட அவளுடைய 'கழுக் மொழுக்' பாகம் ஒன்றைப் பிடித்து.. கசக்கிப் பார்த்துவிட்டேன்..!! இது ஒரு குற்றமா..? அதற்கு அவளே ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஆள் என்னவோ.. இவருக்கு எதையோ பிடித்து கசக்கி விட்ட மாதிரி.. இப்படி ஃபீல் பண்ணி அழுகிறாரே..?

"சீனி.. சீனி.. யோவ் சீனி.." கவிழ்ந்திருந்த சீனியரை நான் எழுப்பினேன்.

"என்னடா வெண்ணை..???" எழுந்து கேமராவை பார்த்து அவர் கத்தினார்.

"என்னது வெண்ணையா..? ஐயையோ.. என்னய்யா இதெல்லாம் நீ சொல்லி திட்ட ஆரம்பிச்சுட்ட..? இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற நீ..?"

"டென்ஷன் ஆகாம என்ன பண்றது..? எது நடக்கக் கூடாதுன்னு நான் நெனச்சேனோ.. அதையே.. எக்ஸாக்டா பண்ணிட்டு வந்திருக்குற..? நாய் மாதிரி போய் வாய் வச்ச.. சரி.. வாய் வச்சதோட வந்து தொலைச்சிருக்க வேண்டியதுதான..? வரும்போது எதுக்கு ஆட்டோக்காரன் மாதிரி ஹாரன் அடிச்சுட்டு வந்த..?"

"கை ஆட்டோமேடிக்கா அங்கே போயிருச்சுயா சீனி.."

"ஓஹோ..? கை ஆட்டோமேடிக்கா போயிருச்சு.. நீங்களா எதுவும் பண்ணலை.. அப்டியா..?? என்னைக்காவது பாடப் புத்தகத்தை தொடுறதுக்கு கை ஆட்டோமேடிக்கா போயிருக்கா..? இதுக்கு மட்டும் எப்படி போச்சு..??" அவர் எகிற, நான் இப்போது எரிச்சலானேன்.




"யோவ்.. என்னய்யா.. ரொம்ப ஓவராத்தான் கலாய்க்கிற..? நீயும் இதெல்லாம் பண்ணிட்டுத்தான போயிருக்க..? நீங்க மட்டும் ஹாரன் அடிக்கலாம்.. நாங்க அடிக்க கூடாதோ..? நான் ஆட்டோக்காரன்னா.. அப்போ நீ என்ன ஐஸ் வண்டிக்காரனா..?"

"அட அறிவு கெட்ட ஜூனி.. நான் பண்ணினதையே நீயும் பண்றதுக்காக்காகவா.. நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மெசினை கண்டு புடிச்சேன்..?"

"நீ கஷ்டப்பட்டது எனக்கு புரியுதுயா.. என் கைக்கு புரியலையே..!!"

"இங்க பாரு ஜூனி.. நான் சொன்னதை நீ கேக்கலை.. தப்பு உன் மேலதான்..!!அதை ஒத்துக்கோ..!!"

"சொன்னதை நீ ஒழுங்கா சொல்லலை.. அதை நீ ஒத்துக்கோ..!!" நான் விடாமல் அடம் பிடிக்க, சீனியர் டென்ஷனானார்.

"ஐயயையயையயையோ.. இப்டியே பேசிட்டு இருந்த.. நான் லூசாயிடுவேன்.."

"இனிமேதான் ஆகப் போறியா..? அல்ரெடி நீ அப்படித்தான் பேசுற..?"

"ச்சை..!!! நீலாம் திருந்த மாட்டடா.. பட்டாத்தான் உனக்கு புத்தி வரும்..!! எக்கேடோ கேட்டுப் போ..!! இனிமே நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்..!! பை..!!"

பட்டென சீனியர் கால் கட் செய்ய, விட்டது சனியன் என எனக்கு தோன்றியது. படியிறங்கி என் ரூமுக்கு வந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நானும் ஜானியும் சென்று, கீழே இருக்கும் அக்கா மெஸ்ஸில் சாப்பிட்டு வந்தோம். அறையை தாழிட்டு விட்டு கொஞ்ச நேரம் லேகாவிடம் கொஞ்சினேன். அப்புறம் அன்று ட்ரயல் ரூமுக்குள் நடந்த அஜால் குஜால் மேட்டர்களை அசை போட்டவாறே.. அசந்து தூங்கிப் போனேன்..!!

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். காபி குடித்துவிட்டு, கலைஞர் டிவியில் ஒரு குத்துப் பாட்டு பார்த்தபோதுதான் அந்த ஆசை வந்தது..!! கவிதை எழுதும் ஆசை..!! லேகாவுக்கு பிறந்த நாள் வருகிறது அல்லவா..? அவள் எனக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்து கொடுத்திருக்கிறாள். அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஒரு கவிதை எழுதிக் கொடுத்தால் என்ன என்று இப்போதுதான் யோசனை வந்தது. கவிதை என்பது காதலின் வெளிப்பாடாகவும் இருக்கும்.. காசும் மிச்சம்..!! எப்பூடி..????

யோசனை வந்த உடனே, நான் என் ரூமுக்குள் புகுந்து கொண்டேன். காற்று கூட புகாதவாறு கதவை அறைந்து சாத்திக் கொண்டேன். பேனா பேப்பர் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, 'பே..' என்று கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். ஏதாவது ஒரு தீம் வைத்து எழுதலாம் என்று முடிவு செய்தேன். அன்லக்கிலி ஒரு ஐடியா என்னிடம் வந்து வசமாக சிக்கிக் கொண்டது. அதற்கு தொடர்பான வார்த்தைகளை யோசித்து.. எதுகை மோனை வரும் மாதிரி.. மாற்றி மாற்றி போட்டு.. மண்டையை குழப்பியவாறு..!!

ஒருவாறு கவிதையை எழுதி முடித்து, அதை திரும்ப திரும்ப வாசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். நமக்குள்ளும் இவ்வளவு திறமையா என்று ரொம்ப பெருமையாக இருந்தது. அரியர்களை கிளியர் பண்ண முடியாவிட்டால், அப்படியே கோடம்பாக்கம் பக்கம் ஒதுங்கிக் கொள்ளலாமா என்று வேறு ஒரு அல்ப ஆசை மனதில் ஓடியது. அப்போதுதான் சீனியரிடம் இருந்து கால் வந்தது. 'அதுக்குள்ள கோவம் போயிடுச்சா..?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கால் பிக்கப் செய்து காதில் வைத்தேன்.

"என்ன சீனி.. இனிமே கால் பண்ணவே மாட்டேன்னு நைட்டு சொல்லிட்டு போன..? மறந்துட்டு பண்ணிட்டியா..?"

"இல்ல.. மறந்துட்டு பண்ணல.. போனா போகுதுன்னு உன்னை மன்னிச்சுட்டு பண்றேன்.."

"அதெப்படி நீயா என்னை மன்னிக்கலாம்..? உன்கிட்ட வந்து நான் 'என்னை மன்னிச்சுடு'ன்னு சொல்லி கேட்டானா..? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை மன்னிக்குற நீ..?"

"வேணாம் ஜூனி.. மறுபடியும் ஆரம்பிக்காத..!! என்னால முடியலை..!!" சீனியர் நொந்து போன குரலில் சொன்னார்.

"சரி சரி வுடு..!! ம்ம்ம்... நான் இப்போ என்ன பண்ணிட்டு இருக்குறேன்னு சொன்னா.. நீ நம்பவே மாட்ட.."

"கவிதை எழுதிட்டு இருக்குற.. கரெக்டா..?"

"உனக்கு எப்படி தெரியும்..? ஓ.. டைரி பாத்து தெரிஞ்சுக்கிட்டியா..??"

"ஆமாம்..!!!"

"ம்ம்ம்.. கவிதைக்கு உள்ள என்ன எழுதிருக்கேன்றதையும் டைரில எழுதிட்டனா..?"

"இல்ல இல்ல.. கவிதை எழுதிருக்கேன்றது மட்டுந்தான் போட்டிருக்கு.. உள்ள என்ன கருமாந்திரத்தை எழுதுனேன்னு.. நல்லவேளை போடலை..!!"

"யோவ் சீனி.. என்ன நக்கலா..?"

"அதெல்லாம் ஒண்ணுல்லப்பா..!! ஆமாம்.. என்ன திடீர்னு கவிதை..?"

"ஏன் எழுத கூடாதா..? நாங்களும் காதல்ல வுழுந்துட்டோம்ல..? கவிதை அப்டியே கடல் நொரை மாதிரி பொங்குது..!!"

"அது எப்படி..? உங்களுக்குலாம் காதலிச்சதும் கவிதை வந்துடுது..?? பீர் குடிச்சதும் பிஸ் வர்ற மாதிரி..!!"

"ஐயே ச்சீய்.. கண்றாவியா பேசாதையா..!!"

"ஓஹோ..!! காதலிச்சமா.. கையை காலை வச்சுக்கிட்டு சும்மா இருந்தமான்னு இல்லாம.. கவிதைன்ற பேர்ல கண்ட கருமத்தையும் எழுதுறது கண்றாவியா தெரியலை.. நான் பேசுறது உனக்கு கண்றாவியா..?"

"ம்ம்ம்.. நான் எழுதிருக்குற கவிதையை கேட்டுப் பாத்தேன்னா.. நீ இப்படிலாம் பேச மாட்ட சீனி.."

"ம்ம்... நான் ஒரு காலத்துல எழுதுனதைத்தான இப்போ நீ எழுதிருக்குற..? என்ன எழவை எழுதி தொலைச்சேன்னு இப்போ எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல..!! கொஞ்சம் வாசிச்சு காட்டு.. கேட்டுப் பார்ப்போம்..!!" சீனியர் சொல்ல, நான் இப்போது உற்சாகமானேன்.

"சீனி.. இந்தக்கவிதையை நான் ரொம்ப ரொம்ப வித்தியாசமா எழுதிருக்கேன் சீனி.."

"எப்டி..??"

"என் லேகாவை எல்லா பறவைகளோடவும் கம்பேர் பண்ணி எழுதிருக்கேன்..!!"

"ஏன் பறவைகளோட நிறுத்திட்ட ஜூனி..? அனிமல்சோடவும் கம்பேர் பண்ணி எழுதலாமே..? நாய், குரங்கு, கழுதை, பன்னின்னு எவ்ளோ இருக்கு..??"

"ஐயயையயையயையோ..!! இப்போ கவிதையை நீ கேக்குறியா இல்லையா..?"

"சரி சரி.. சொல்லித்தொலை.."

சீனியர் வேண்டா வெறுப்பாகவே சொன்னார். இருந்தாலும் நான் மிகவும் ஆர்வமாகவே இருந்தேன். நான் முதன் முதலில் எழுதிய கவிதை அல்லவா..? அதை இன்னொருவரிடம் (நான்தான் பிற்காலத்தில் சீனியராகப் போகிறேன் என்பது வேறு விஷயம்) படித்துக் காட்டப்போவதில் நிஜமாகவே குஷியாக இருந்தேன். தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

"மொத லைன் சொல்றேன்.. கேளு..."

"ம்ம்ம்.."

"லேகா நீ ஒரு குயிலு.."

"ஓ..!!" அவர் கவுண்டமணி மாதிரி ரியாக்ஷன் கொடுத்தார். நான் தொடர்ந்தேன்.

"லேகா நீ ஒரு குயிலு - உன் அழகை எழுதி தாறியா எனக்கு நீ உயிலு..!!"

"அவளை கட்டிக்கிட்டா கிழியப் போவுது உன் செவுலு..!!" சீனியர் கவுன்ட்டர் கவிதை சொல்ல, நான் கடுப்பானேன்.

"ப்ச்.. என்ன சீனி.. நக்கலடிக்கிற..?"

"நக்கலடிக்கலை ஜூனி.. நடக்கப்போற உண்மை அது..!! ம்ம்.. அடுத்த லைன்..??"

"ம்ம்.. சொல்றேன் சொல்றேன்.. இதுதான் ரொம்ப முக்கியமான லைன்.. நல்லா கவனிச்சு கேளு..!!"

"ம்ம்.. சொல்லு..!!"

"லேகா நீ ஒரு குருவி.."

"அட்ரா.. அட்ரா..!! ம்ம்ம்.. மேல.."

"லேகா நீ ஒரு குருவி - உன் உள்ளத்தை தாறியா எனக்கு நீ உருவி.."

"அவ உள்ளம் என்ன உள்பாடியா..? உருவித்தர சொல்ற..?"

"யோவ் போய்யா.. நீ ஒன்னும் என் கவிதையை கேக்கவேணாம்..!! நான் லேகாகிட்டயே கொடுத்துக்குறேன்..!!" நான் சலிப்பாக சொன்னேன்.

"ஹ்ஹஹாஹ்ஹா...!! அதை நீ அவகிட்ட கொடுத்துடக் கூடாதுன்னுதான் மகனே.. நான் இப்போ உனக்கு கால் பண்ணினேன்.." சீனியர் நக்கலாக சொல்ல, நான் இப்போது அதிர்ச்சியானேன்.

"யோவ் சீனி.. என்னய்யா சொல்ற நீ..?"

"ஆமாம் ஜூனி..!! இந்த கவிதையை எழுதுனதோட நிறுத்திக்கோ.. தப்பித்தவறி கூட அவகிட்ட காட்டிடாத.."

"ஏன்.. காறித் துப்பிடுவாளா..?"

"இல்ல.. கட்டிப்புடிச்சு மொச்சு மொச்சுனு கிஸ் பண்ணுவா.."

"நெஜமாவா சீனி..?? ஹையோ.. அப்படி மட்டும் நடந்தா செம கிளுகிளுப்பா இருக்குமே.. அதை ஏன்யா வேணான்னு சொல்ற..?" நான் ஆவலை அடக்க முடியாமல் சொல்ல,

"அடச்சை.. அல்பே..!! நாம லேகாவை கழட்டி விட ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்.. அதை மொதல்ல நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!!"

"ஆமால்ல..???" நான் திடீரென ஞாபகம் வந்தவனாய் சொன்னேன்.

"ஆமாண்டா அசமஞ்சம்..!! இந்த கவிதையை அவ படிச்சா.. நம்ம ப்ளான்லாம் நாசமாயிடும்..!! புரியுதா..?"

"ஓஹோ..??? ம்ம்ம்ம்... சரி சீனி.. இப்போ நான் என்ன பண்றது..?"

"அந்த கவிதையை சுக்கு நூறா கிழிச்சு.. தீயை வச்சு கொளுத்தி.. சாம்பலை கொண்டு போய் சாக்கடைல கரைச்சிடு..!!"

"யோவ்.. ஏன் உனக்கு இந்த கொலைவெறி..? உனக்கே இதுலாம் ஓவரா இல்ல..? நான் என் வாழ்க்கைல எழுதின முதல் கவிதைய்யா இது..!! இதைப் போய் கொளுத்த சொல்றியே..?"

"வேணாம் ஜூனி.. இப்படி ஒரு கேவலமான எவிடன்ஸ்.. ப்யூச்சர்ல நமக்கு தேவையா..? இப்போவே அதை அழிச்சுடு..!!"



"ம்ஹூம்.. என்னால முடியாது..!! உனக்கு என்ன.. இதை அவகிட்ட காட்டக் கூடாது.. அவ்ளோதான..? நான் காட்டலை.. என் பேக் உள்ளேயே பத்திரமா வச்சிருக்கேன்..!! ஓகேவா..?"

"பேக் உள்ளயா..? காலேஜுக்குலாம் ஏன் இதை எடுத்துட்டு போற..?"

"இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சீனி..!! என் க்ளாஸ்ல வைரமுத்துன்னு ஒரு பையன் இருக்குறான்.. கவிதைலாம் நல்லா எழுதுவான்.."

"ம்ம்ம்.. சொல்லு சொல்லு.. ஞாபகம் வருது.."

"தனக்கு மட்டுந்தான் கவிதை எழுத வரும்னு அவனுக்கு ரொம்ப திமிரு.. அதான் எனக்கும் கவிதை எழுத வரும்னு.. இன்னைக்கு அவனுக்கு காட்டப் போறேன்.."

"ம்ம்ம்.. உன் கவிதையை படிச்சு.. அவன் புத்தி பேதலிச்சு போகணும்.. இல்லனா பூச்சி மருந்து குடிச்சு செத்து போகணும்..!! அதான உன் ஆசை..?"

"ச்சேச்சே.. அவ்ளோ பெரிய ஆசைலாம் எனக்கு இல்ல சீனி.. எனக்கும் கவிதை எழுத வரும்னு அவன் ஒத்துக்கணும்.. அவ்வளவுதான்..!!"

"அதுக்கு அவன் பூச்சி மருந்து குடிச்சே செத்து போகலாம்..!!"

"ப்ச்.. வெளையாடாத சீனி.."

"ம்ம்ம்ம்... ஓகே ஜூனி...!! பேக் உள்ளேயே பத்திரமா வச்சுக்கோ..!! நல்லா கேட்டுக்கோ.. பேக் ஜிப்பையாவது ஒழுங்கா கவனமா போடு.. உள்ள இருக்குறது லேகா கண்ணுல பட்டு தொலைக்கப் போவுது.."

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் சீனி... நீ கவலைப் படாத.."

நான் நம்பிக்கையாய் சொல்ல, சீனியரும் திருப்தியாய் காலை கட் செய்தார். இந்த வைரமுத்துக்கு ஆயுசு மிகவும் கெட்டியாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் போன ஜென்மத்தில் அன்னை தெரசா ரேஞ்சுக்கு சேவை செய்து பெரிய அளவில் புண்ணியம் சம்பாதித்திருக்க வேண்டும். அன்று காலேஜுக்கு லீவு போட்டுவிட்டான். என் கவிதையிடம் இருந்து தப்பி பிழைத்து விட்டான். வடை போச்சே என்று எனக்கும் ரொம்ப வருத்தமாக இருந்தது.

அன்று மாலை நானும் லேகாவும் காபி ஷாப் சென்றிருந்தோம். மறைவாக இருந்த ஒரு டேபிளை ச்சூஸ் செய்து கொண்டோம். லேகா டேபிளில் அமர்ந்து கொள்ள, நான் அவளுடைய பர்சை திறந்து பணம் எடுத்துக் கொண்டேன். கவுன்ட்டருக்கு சென்று எனக்கு ஒரு காப்புசினோவும், அவளுக்கு ஒரு சாக்கோசினோவும் ஆர்டர் செய்தேன். ஐந்து நிமிடங்கள் கழித்து கொடுத்தான்.

வாங்கிக்கொண்டு டேபிளுக்கு திரும்பியவன், லேகா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே அதிர்ந்து போனேன். இரும்புக்குண்டுகளை விழுங்கி விட்டவள் போல.. விழிகளை விரித்து வைத்தவாறு.. விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள்..!! என் முகத்தை அப்போதுதான் முதன்முறையாக பார்ப்பவள் போல.. மலங்க மலங்க பார்த்தாள்..!! 'போகும்போது நன்றாகத்தானே இருந்தாள்.. அதற்குள் என்ன ஆயிற்று இவளுக்கு..??' எனக்கு எதுவும் புரியவில்லை. நான் கனிவான குரலில் கேட்டேன்.

"லேகாம்மா.. லேகாம்மா.. என்னடா ஆச்சு உனக்கு..??"

"அசோக்.." அவள் ஆசையும் காதலுமாக அழைத்தாள்.

"சொல்லும்மா.. என்னாச்சு..?"

"நீ என்னை இவ்ளோ லவ் பண்றியா..?" அவள் கேட்டது எனக்கு புரியவில்லை.

"எவ்ளோ..??"

"இவ்ளோ..!!"

சொல்லிக்கொண்டே அவள் தன் வலது கையை நீட்ட, அப்போதுதான் அந்தக் கையில் முளைத்திருந்த என் கவிதைப் பேப்பரை பார்த்தேன். பக்கென அதிர்ந்து போனேன்..!! 'ஐயையோ.. இது எப்படி இவள் கையில் சிக்கியது..?' என்னுடைய பேக் திறந்து கிடந்தது இப்போது என் பார்வையில் பட்டது..!! 'இவள் எதற்கு என் பேகை திறந்து பார்த்தாள்..? சும்மா திறந்து நோண்டிக் கொண்டிருந்தவளிடம் இந்த கவிதை கருமம் சிக்கிவிட்டதா..?? ஐயையோ..!! எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்கி விட்டாளே..?? அவ்வளவுதான்.. சீனியர் இன்று என்னை ஏறு ஏறு என்று ஏறப் போகிறார்..!!'

நடந்ததை நம்ப முடியாமல் நான் மிரட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, லேகா பட்டென என்னை அணைத்துக் கொண்டாள். காபி ஷாப் என்பதையும் மறந்து, எனது கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி முத்தமிட ஆரம்பித்தாள். சீனியர் சொன்னது மாதிரி 'மொச்சு.. மொச்சு..' என்று..!! நான் திணறிப் போனேன். மிகவும் கஷ்டப்பட்டு அவளுடைய அணைப்பிலிருந்தும், முத்தத்திலிருந்தும் விலகிக் கொண்டேன்.

"ஐயோ.. என்ன லேகா இது.. பப்ளிக் ப்ளேஸ்ல..? யாராவது பாத்துட போறாங்க..!!"


"பாக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!! என் மேல எவ்வளவு லவ் இருந்தா.. இந்த மாதிரி ஒரு கவிதையை நீ எழுதிருப்ப..?"

'என்ன இது.. இவ டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு..? அடத்தூ..!!' என்று மனதுக்குள் நான் அவளை துப்பிக் கொண்டு இருக்க, அவள் தொடர்ந்தாள்.

"என்னை நெனச்சு இப்படி உருகி உருகி எழுதுன உனக்கு.. இந்த சின்ன முத்தம் கூட கொடுக்கலைனா எப்படி..??? யாராவது பாத்தா பாத்துட்டு போகட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!"

"லேகா.. நெஜமாவே உனக்கு இந்த கவிதை.. அந்த லைன்ஸ்லாம் பிடிச்சிருக்கா..?"

"இதுலாம் லைன்ஸ் இல்ல அசோக்.. நீ என் மேல வச்சிருக்குற லவ்ஸ்..!! இதுல நீ எத்தனையோ லைன்ஸ் எழுதிருக்குற.. ஆனா அதுக்கெல்லாம் ஒரே மீனிங்தான்.. நீ என் மேல வச்சிருக்குற லவ்..!! நான் இதுவரை உனக்கு நெறைய கிஃப்ட் வாங்கிக் கொடுத்திருக்குறேன்.. ஆனா.. இந்த மாதிரி ஒரு காதல் பரிசுக்கு முன்னாடி.. அதுலாம் ஒண்ணுமே இல்ல அசோக்..!! ஐ லவ் யூ டியர்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!!"

லேகா காதலும், ஆசையுமாய் சொல்லிவிட்டு என் தோளில் சாய்ந்து கொண்டாள். ஒரு கையால் என் இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவளுடைய மதர்த்த மார்புகளில் ஒன்று, மெத்தென்று என் புஜத்தில் அழுந்த.. எனக்கு சற்றே கிறக்கமாக இருந்தது..!! அதே நேரம்.. இம்சை மன்னன் சீனியரிடம் இன்று இரவு திட்டு வாங்கப் போவதை நினைக்க.. சற்றே கிலியாக இருந்தது..!!

நான் நினைத்த மாதிரியே சீனியர் அன்று இரவு கால் செய்யும்போது நாரசாரமாக திட்டினார். உஷ்ணமாக கத்தினார்.

"டேய் டேய் டேய்.. வெண்ணை வெட்டி.. வெளக்கெண்ணை கருப்பா..!! இந்த சப்பை மேட்டரை கூட.. இவ்வளவு சூப்பரா உன்னைத்தவிர யாரும் சொதப்ப முடியாதுடா..!! நான்தான் நேத்தே சொன்னேனே.. அந்த கவிதையை எரிச்சு.. அஸ்தியை கூவத்துல கரைச்சிடுன்னு..!! அப்போவே அதை செஞ்சிருந்தா.. இப்போ இப்படி ஆயிருக்குமா..?? நான் சொன்னதை கொஞ்சமாவது காது கொடுத்து கேட்டியா நீ..?"

"நான் என்ன பண்றது சீனி.. அவ கேஷுவலா என் பேகை திறந்து நோண்டிருக்கா.. அவ கைல கவிதை சிக்கிடுச்சு..? இப்டிலாம் நடக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்..?? சரி விடு.. இப்போ அவ அந்த கவிதையை படிச்சதால பெருசா என்ன ஆயிடப் போகுது..?"

"ஐயோ ஐயோ.. நடக்கப் போற விபரீதம் உனக்கு புரியவே இல்ல ஜூனி..!!"

"சொன்னாத்தானயா புரியும்.. டோமரு..?"

"இங்கபாரு ஜூனி.. நாளைக்குத்தான் உனக்கு அந்த பேராப்பு வரப் போற நாள்..!! அவ அந்த கவிதையை படிச்சது.. உனக்கு வரப்போற பேராப்புக்கு ஒரு முக்கியமான காரணம்..!!"

"யோவ்.. செகண்ட் எபிசொட்ல இருந்து.. 'உனக்கு ஒரு பேராப்பு வரப் போவுது.. உனக்கு ஒரு பேராப்பு வரப் போவுது..'ன்னு குடுகுடுப்பைக்காரன் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்குறியே..? அது என்னன்னுதான் கொஞ்சம் வெளக்கமா சொல்லித் தொலையேன்..??"

"ம்ஹூம்..!! அதை நான் சொன்னா.. அப்புறம் நீ மனசு மாறிடுவேன்னு எனக்கு தோணுது ஜூனி..!! சீனியாச்சு.. மசுராச்சுன்னு.. நீயே போய் அந்த ஆப்புல ஏறி அழகா உக்காந்துப்ப..!! உன் மேல எனக்கு நம்பிக்கை இல்ல..!! நான் சொல்றதை மட்டும் நீ அப்படியே கேளு.. அது போதும்..!!"

"ஓஹோ..? இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலையா..? சரி பரவால.. விடு..!! ஆனா.. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..!! நான் என்ன பண்ணனும்னு சொல்லு.. பண்ணுறேன்..!!"

"ஓகே ஜூனி.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு.."

"சொல்லு.."

"நமக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ்தான் இருக்கு..!! அதையும் மிஸ் பண்ணிட்டோம்னா.. அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது..!! நாளைக்கு லேகாவுக்கு பொறந்த நாள்.. அவ உனக்கு ஆப்பு வைக்க போற நாள்.."

"ஓஹோ..??"

"நாளைக்கு நீ ரொம்ப உஷாரா இருக்கணும் ஜூனி.. புரியுதா..?? நாளைக்கு உங்களுக்கு காலேஜ் லீவ் தான..? ரெண்டு பெரும் ஊர் சுத்தலாம்னு ப்ளான் போட்டுருக்கீங்கள்ல..?"

"ஆமாம்..!! நான் ஒன்னு கேக்கவா சீனி..?"

"என்ன..?"

"லேகாவாலதான் எனக்கு ஆப்பு வரப் போகுதா..?"

"ஆமாம்..!!"

"நான் வேணா நாளைக்கு எல்லா ப்ளானையும் கேன்சல் பண்ணிட்டு.. லேகாட்ட கூட சொல்லாம.. வேற ஏதாவது வெளியூர் ஓடிப் போயிறவா..?"


"நோ நோ..!! அப்டிலாம் பண்ணிடாத ஜூனி.. அது ஃப்யூச்சர்ல நமக்கு ரொம்ப டேஞ்சரான எஃபக்ட் கிரியேட் பண்ண சான்ஸ் இருக்கு..!! நமக்கு அந்த ஆப்பு மேட்டரை மட்டும் அவாய்ட் பண்ணினா போதும்.. மத்த மேட்டர்லாம் அப்படியே நடக்கட்டும்.. டச் பண்ண வேணாம்..!!"

"ஓஹோ..? அதை மட்டும் எப்படி அவாய்ட் பண்ணுறது..??"

"இரு இரு.. அதான் யோசிக்கிறேன்..!! ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்...."

சீனியர் சீரியசாக யோசனையில் மூழ்க, நான் எரிச்சலாக என் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'இந்த ஆள் இம்சை தாங்க முடியலை.. என்னை நம்பவும் மாட்டேன்றான்.. நடக்கப்போறதை முழுசா சொல்லவும் மாட்டேன்றான்.. ஆனா.. அந்த ஆள் நெனச்சது மட்டும் அப்படியே நடக்கனும்னு எதிர்பார்க்குறான்.. ச்சே..!! சரியான லூசு மாக்கான்..!!' நான் சலிப்புடன் திட்டிக் கொண்டிருக்கும்போதே, சீனியர் சந்தோஷமாக கத்தினார்.

"ஆங்... புடிச்சுட்டேன்..!!!!"

"அதுக்கெதுக்குயா இப்படி கத்துற..? நானுந்தான் இங்க புடிச்சுக்கிட்டு இருக்கேன்..!!"

"அடச்சை..!! நான் அதை சொல்லலை.. ஐடியாவை புடிச்சுட்டேன்னு சொன்னேன்...!!"

"ஓ.. அப்பிடியா..? தெளிவா சொல்லுயா..!!"

"ஆக்சுவலா இது ஒரு சப்பை மேட்டர் ஜூனி.. இதுக்கு போய் நாம நெறைய யோசிச்சுட்டோம்..!!"

"நான் எங்கயா யோசிச்சேன்..? நீதான் யோசிச்ச..!! எனக்கு மேட்டர் என்னன்னு கூட தெரியாதே..?"

"சொல்றதை கேளுப்பா.. இந்த ஜானி நாளைக்கு எங்கயோ வெளில போறான்ல..?"

"ஆமாம்.. அவன் ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கிறான்.. அந்த சென்டர்ல நாளைக்கு ஏதோ எக்சாம்னு சொல்லிட்டு இருந்தான்..!!"

"அவனை மட்டும் அங்க போக விடாம தடுத்து.. ரூம்லேயே உக்கார வச்சுட்டா.. நீ பேராப்புல இருந்து தப்பிச்சுடலாம்..!!"

"அவனை எப்படி ஸ்டாப் பண்றது..? அவன்தான் என் பேச்சையே கேக்க மாட்டானே..!!"

"அந்த சென்டர்ல இருந்து கால் பண்ற மாதிரி பண்ணி.. ‘எக்ஸாம் கேன்சல்.. நாளைக்கு சென்டர் லீவ்’னு சொல்லிடு..!!"

"ம்ம்ம்ம்.. அதை நீயே அவனுக்கு கால் பண்ணி சொல்லிடேன்.. அவன் என் வாய்ஸ் கண்டுபிடிச்சுடுவான்..!! அதுமில்லாம.. என் மொபைல்ல வேற பேலன்ஸ் இல்ல..!!"

"அடத்தூ.. சரியான பிசினாறிப்பயடா நீ..!! சரி.. அவன் நம்பர் சொல்லு.. நானே கால் பண்ணி சொல்லிடுறேன்..!!"

"சொல்றேன்.. நோட் பண்ணிக்கோ..!! அவனுக்கு கால் பண்றப்போ இந்த 'ASHOK CALLING' வராம பாத்துக்கோ.. பையன் கன்ஃப்யூஸ் ஆயிடப் போறான்..!!"

"அதுலாம் நான் டிசேபில் பண்ணிக்கிறேன்.. நீ நம்பரை சொல்லு..!!"

நான் நம்பரை சொல்ல, சீனியர் நோட் செய்து கொண்டார். அந்த கம்ப்யூட்டர் சென்டர் பேரும், என்ன கோர்ஸ் படிக்கிறான் என்ற டீட்டெயிலும் கேட்டு வாங்கிக் கொண்டார். தானே எல்லாம் பார்த்துக் கொள்ளுவதாக சொன்னார். என்னை எதைப்பற்றியும் கவலைப்படாமல், எங்கள் ப்ளான் படி நடந்து கொள்ள அனுமதி தந்துவிட்டு, காலை கட் செய்தார். நானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எனது அறைக்கு திரும்பினேன்.

அன்று இரவு தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு விழித்திருந்தேன். சரியாக பனிரெண்டு மணிக்கு லேகா எனக்கு கால் செய்தாள் (அப்புறம்..? என் மொபைல்லதான் பேலன்ஸ் இல்லைல..?). அவளே கால் செய்து, அவளுடைய பிறந்த நாளுக்கு, என்னுடைய அருட்பெரு ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டாள். அப்புறம் ரொம்ப நேரம் ரொமான்சாக கொஞ்சிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் என்ன செய்வது என்று பேசி வைத்துக் கொண்டோம்.

இரவு நெடுநேரம் கடலை வறுத்தத்தால், காலையில் கண்களை திறக்க கஷ்டமாக இருந்தது. எட்டு மணிக்குத்தான் எழுந்தேன். லேகாவுடன் ஊர் சுற்ற செல்லவேண்டும் என்ற ஞாபகம் வந்ததும் சுறுசுறுப்பானேன். குளித்துவிட்டு, அவள் அன்று எடுத்துக் கொடுத்த ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து கொண்டேன். கமகமவென பெர்ப்யூம் அடித்துக் கொண்டேன். ஹாலுக்கு வந்தேன்.

ஜானி சேரில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். ரொம்ப குஷியாக இருந்த மாதிரி காட்சியளித்தான். டிவியில் கிறிஸ்டினா ஆகுலேரா இடுப்பாட்டியதற்கு இவன் இங்கு கிறுக்குப்பயல் மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் இரண்டு ரிமோட்களை பிடித்திருந்தான். ஒன்று டிவி ரிமோட்..!! இன்னொன்று... ஹிஹிஹி...!! அது சென்சார்ட்..!! நான் சற்றே கேஷுவலான குரலில் கேட்டேன். 

"என்ன மச்சி.. இன்னைக்கு எக்ஸாம்னு சொன்ன..? ஜாலியா பூ.. ம்ம்ம்ம்.. காலாட்டிக்கிட்டு டிவி பாத்துக்கிட்டு இருக்குற..?"

"இல்ல மச்சி.. இன்னைக்கு எக்ஸாம் இல்ல..!! சென்டர் இன்னைக்கு லீவாம்.. காலைலதான் கால் வந்தது..!!" அவன் சந்தோஷமாக சொல்ல, சீனியர் தன் வேலையை செய்துவிட்டார் என்று நானும் சந்தோஷமானேன்.


"வேற எங்கயும் வெளில போற மாதிரி ப்ளான் இருக்கா மச்சி..??"

"ஹஹா.. லீவு நாள்ல நான் என்னைக்கு வெளில போயிருக்கேன்..? இன்னைக்கு பூரா ரூம்லதான் இருக்கப் போறேன்.. ஜாலியா டிவி பார்க்கப் போறேன்..!!"

நானும் அவனுடம் அமர்ந்து கிறிஸ்டினாவின் காட்டுக்கத்தலை கொஞ்ச நேரம் கேட்டேன். அப்புறம் லேகா என் அறைக்கே வந்து என்னை பிக்கப் செய்து கொண்டாள். இருவரும் அவளுடைய ஸ்கூட்டியில் கிளம்பினோம். 

முதலில் ஒரு கோயிலுக்கு சென்றோம். அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார்..!! அப்புறம் அவளுடைய வாட்ச் ஏதோ ஓடவில்லை என்று, ஒரு ஷாப் சென்று ரிப்பேருக்கு கொடுத்தோம். அந்த ஷாப் இருந்த ஷாப்பிங் மாலிலேயே கொஞ்ச நேரம் சுற்றி திரிந்தோம். மதியம் ஒருமணி வாக்கிலேயே ஒரு பிஸ்ஸா உணவகத்தில் புகுந்து கொண்டோம். பிஸ்ஸாவும், கார்லிக் ப்ரெடும், பாஸ்தாவும் என கலவையாக கலந்து கட்டி அடித்தோம். தொண்டையை நனைத்துக் கொள்ள கோக்..!! அப்புறம் அருகிலிருந்த ஐநாக்ஸில் ஒரு ஆங்கில ரொமாண்டிக் காமடி மூவி பார்த்து சிரித்தோம்.

என்னவென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எப்போதையும் விட, லேகா அன்று ரொம்பத்தான் என்னிடம் இழைந்தாள். கோவிலில்.. கட்டிக்கொண்டவளாட்டம் என் கைவிரல்கள் கோர்த்துக் கொண்டாள். உணவகத்தில்.. உரிமையுள்ளவளாட்டம் பிஸ்ஸா ஸ்லைஸ் ஊட்டி விட்டாள். ஷாப்பிங் மாலில் அவளுடைய தோளில் கை போட்டு, எல்லா இடத்துக்கும் என்னை அழைத்து செல்ல சொன்னாள். தியேட்டர் இருட்டில் தைரியமாக அவளே என் தோள் மீது கை போட்டுக் கொண்டாள். எனது கன்னம், காது, கழுத்து, உதடுகள் என.. சிக்கிய பாகங்களில் எல்லாம் தன் எச்சில் பூசினாள். அவ்வளவு சந்தோஷமாய் அவளை நான் பார்த்ததே இல்லை. அவளிடம் அந்த மாதிரி திகட்ட திகட்ட முத்தம் பெற்றதில், நானும் சற்றே கிறக்கத்தில் இருந்தேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இடையில் சீனியரிடம் இருந்து கால் வந்தது. 'முக்கியமான கால்..' என்று லேகாவிடம் சொல்லிவிட்டு நான் வெளியே வந்து பேசினேன். தன் திட்டப்படி எல்லாம் நடக்கிறதா என்று சீனியர் விசாரித்து தெரிந்து கொண்டார். 'ஜானி ரூமில் தான் இருக்கிறானா..?' என்று ஒருமுறை கால் செய்து செக் பண்ணிக்கொள்ள சொன்னார். நானும் அவனுடய நம்பருக்கு கால் செய்து, அங்குதான் இருக்கிறான் என்பதை கன்ஃபார்ம் செய்து கொண்டேன்.

படம் முடியும்போது நான்கு மணி ஆகியிருந்தது. சுற்றியது போதும், வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். என்னுடைய ரூமில் என்னை ட்ராப் செய்துவிடுமாறு லேகாவிடம் சொன்னேன். இருவரும் ஸ்கூட்டியில் என் அறையை நோக்கி பறந்தோம். என் அறையை நெருங்க நெருங்கவே, மேலே இருந்த நீல வானம் மெல்ல மெல்ல ப்ளாக் கலரில் மேக்கப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தது. திரள் திரளாய் கருநிற மேகங்கள், ஒன்று கூடி மீட்டிங் போட்டு, மழை கொட்டுவது பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தன.

என் ரூம் இருந்த சந்துக்குள் வண்டி நுழையும்போதே, 'பட்.!!' என் ஒரு மழைத்துளி லேகாவின் பட்டு தோளில், பட்டு சிதறியது. பின்பு எனது நெற்றியிலும் ஒரு துளி..!! வீட்டுக்கு முன் ஸ்கூட்டி வந்து நின்றபோது, பொலபொலவென தூற ஆரம்பித்தது..!! வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, இருவரும் கேட் திறந்து வீட்டுக்குள் நுழையும் முன்னரே, மழை பலமாக வலுத்திருந்தது. பக்கவாட்டில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென ஏறி, தபதபவென ஓடி, மாடிக்கு செல்லுவதற்குள், சடசடவென பெய்த மழையில் நானும் லேகாவும் தொப்பலாக நனைந்திருந்தோம்.

அவசரமாக ரூம் கதவை உள்ளே தள்ளியவன், அது திறக்காதது கண்டு சற்றே அதிர்ந்து போனேன். கதவு தாழிடப் பட்டிருப்பது அப்புறம்தான் உறைத்தது. அப்படியானால்..??? ஜானி ரூமில் இல்லையா..?? இந்த மழைநேரமும் அதுவுமாய் எங்கே போய் தொலைந்தான்..?? எங்கள் திட்டப்படி அவன் ரூமில் இருக்க வேண்டுமே..?? எதுவும் புரியவில்லை எனக்கு..!!

பாக்கெட்டில் இருந்த மாற்று சாவியை தேடி எடுத்து கதவை திறந்தேன். இருவரும் உள்ளே நுழைந்தோம். ஜில்லென்று எங்கள் மேலே ஊற்றிய மழை நீர், இருவரது உடல்களையும் வெடவெடவென நடுங்க செய்திருந்தது. லேகாவின் சிவந்த செர்ரிப்பழ உதடுகள், குளிரில் தடதடத்ததை பார்க்கும்போது, எனக்கு உள்ளுக்குள் என்னவோ செய்தது..!! அவளுடைய முகமெங்கும் முத்துமுத்தாய் மழைத்துளிகள்..!! அவளது கூந்தலிலிருந்து.. ஒரு கற்றை மட்டும் பிரிந்து.. ஈரத்தை சொட்டியபடி.. அந்த அழகு முகத்தின் குறுக்கே கிடந்து ஓடியது..!! ஈரமான இமைகளை அவள் அகலமாக திறந்து கொள்ள.. அவளது கரிய, பெரிய விழிகள் கிறக்கமாய் என் மீது பாய்ச்சிய பார்வை.. என் மூளையை ஊடுருவ.. என் ஹார்மோன்களை ஹார்மோனியம் வாசிக்க சொல்லி.. அந்த அறிவுகெட்ட மூளை கட்டளையிட்டது..!!

"தலையை தொவட்டிக்கோ லேகா.."

நான் ஒரு டவலை எடுத்து, அவளை நோக்கி தூக்கிப் போட்டேன். அவளும் கேட்ச் பிடித்து, தன் கூந்தல் ஈரத்தை அந்த பூந்துவாலையில் ஏற்றினாள். அவள் ஹாலில் இருந்து தலை துவட்டிக் கொண்டு இருக்க, நான் எனது அறைக்குள் புகுந்தேன். ஈரம் சொட்டிய டி-ஷர்ட்டையும், ஜீன்சையும் அவிழ்த்து போட்டுவிட்டு, பனியன், லுங்கிக்கு மாறினேன். இன்னொரு டவல் எடுத்து எனது தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தேன். 

லேகா துவட்டி முடித்தும், இன்னும் ஈரமாக நின்றிருந்தாள். நான் வெளிப்பட்டதும், என்னையே ஒருமாதிரி வெறித்த பார்வை பார்த்தாள். எனது கைகள் ரெண்டும் மேலே உயர்ந்திருக்க.. எனது புஜங்களின் தசைகள் திரண்டு துடித்துக் கொண்டிருக்க.. அங்கேதான் அவளது பார்வை நிலைத்திருந்தது...!! ஆசையாக, ஏக்கமாக பார்த்தாள்..!! நான் அவள் முன்னே கை நீட்டி அசைத்து அவளது கவனத்தை கலைத்தவாறே கேட்டேன்.

"ஹேய்.. லேகா.. என்னாச்சு..???"


"ஒ..ஒண்ணுல்ல அசோக்..!!

"அப்புறம் ஏன் அப்படி பாக்குற..?" 

"ம்ம்ம்ம்... சூச்சூ..!!" என்றாள்

"என்னது..???" எனக்கு புரியவில்லை.

"சூச்சூ போகணும்டா..!!" 

அவள் ஒருவித முக சுளிப்புடன், ஒருகையின் எல்லா விரல்களையும் மடக்கி, சுண்டு விரலை மட்டும் காட்ட, உடனே எனக்கு புரிந்து போனது. 

"ஓ..!!"

என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தவன், அவளை என் அறைக்கு அழைத்து சென்றேன். உள்ளே அறையோடு அட்டாச் ஆகியிருந்த டாய்லட்டை நோக்கி கைநீட்ட, அவள் அதை நோக்கி நகர ஆரம்பித்தாள். நான் கதவை சாத்தி வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினேன். இன்னும் ஈரமாக இருந்த தலையை பரபரவென துவட்டினேன். அப்போதுதான் என் செல்போன் ரிங் டோன் ஒலித்தது. யார் அது இந்த நேரத்தில்..?? எடுத்து பார்த்தேன்..!! சீனியர்..!!!!!!

செல்போனை எடுத்துக் கொண்டு, பால்கனிக்கு வந்தேன். பின்னால் லேகா வருகிறாளா என ஒருமுறை பார்த்துக் கொண்டே, பிக்கப் செய்து பேசினேன்.

"சொல்லு சீனி.. என்ன.. கிரெடிட் கார்ட் விக்கிறவன் மாதிரி.. இன்னைக்கு சும்மா சும்மா கால் பண்ணுற..?"

"எல்லாம் ப்ளான் படி நடக்கணுமேன்னு கவலை.. அதான்..!! ஆமாம் எங்க இருக்குறீங்க இப்போ..??"

"இப்போத்தான் ரூமுக்கு வந்தோம் சீனி.. இங்க ஒரே மழை.."

"ம்ம்ம்.. எனக்கும் நல்லா ஞாபகம் இருக்கு ஜூனி.. மறக்க கூடிய நாளா அது..?? ம்ம்ம்ம்... வேற ஒரு பிரச்னையும் இல்லையே..??"

"அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல சீனி.. எல்லாம் ஸ்மூத்தா போயிட்டு இருக்கு..!! இந்த ஜானிப்பயலைத்தான் ஆளைக் காணோம்.. எங்கே போனான்னு தெரியலை..!!"

நான் சொல்ல சொல்ல, சீனியரின் முகம் இப்போது குப்பென ஒரு பலத்த அதிர்ச்சிக்கு போனது..!! விழிகளை அகலமாய் விரித்து.. வாயை 'ஓ'வென திறந்து.. மிரண்டு போனவராய் காட்சியளித்தார்..!! பதறிப்போன குரலில் கேட்டார்..!!

"டேய்.. என்னடா சொல்ற..? ஜானி இல்லையா..??"

"ஆமாம் சீனி.. ஆளைக்காணோம்.."

"ஐயோ... அவன் ரூம்ல இருக்குறதுதானடா நம்ம ப்ளானே..?? அப்புறம் என்ன.. ப்ளான் மசுரு ஸ்மூத் மசுரா போகுதுன்னு சொல்ற நீ..??"

"ஏன் சீனி.. இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகுற..?? அவன் இங்க இருந்து என்ன பண்ணப் போறான்..?"

"ப்ச்.. புரியாதவனா இருக்குறியே..? ஜானி அங்க இருந்தாதான்.. லேகா தயங்குவா.. உன் மேல கை வைக்க மாட்டா..!! அவன் இல்லைன்னா.. அவளுக்கு துணிச்சல் ஜாஸ்தி ஆயிடும்..!! நீ தப்பிக்க முடியாது..!!" 

சீனியர் சொன்னதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எதற்கோ தேவையில்லாமல் பயப்படுவது போல எனக்கு பட்டது. எரிச்சலாக சொன்னேன்.

"ப்ச்.. அப்படி அவ என்னை என்ன பண்ணப் போறா..? கடிச்சு தின்னுடுவாளா..??"

"ஐயோ.. கடிச்சு தின்னாலும் பரவால்லையே.. கட்டில்ல தள்ளி.. உன் கற்பை சூறையாடப் போறா ஜூனி..!!!" சீனியர் சொல்ல, நான் பக்கென அதிர்ந்து போனேன்.

"என்னது..??? யோவ்.. என்னய்யா சொல்ற நீ..???"

"ஆமாம் ஜூனி.. ஆரம்பத்துல இருந்து நான் பேராப்பு பேராப்புன்னு சொன்னது இதைத்தான்..!! உன்கூட செக்ஸ் வச்சுக்குற ஐடியாவோடதான் அவ அங்க வந்திருக்கா..!! அவ வலைல விழுந்துடாத..!!"

எனக்கு எதுவும் புரியவில்லை..!! லேகா அந்த மாதிரி எண்ணத்துடன்தான் இப்போது இருக்கிறாளா..?? அதுதான் அடிக்கடி கருவிழிகளை சுழற்றி சுழற்றி, அவ்வளவு கிறக்கமாய் பார்க்கிறாளா..?? ஹையோ.. எப்படி ஒரு அழகுக்குவியல் என் லேகா..?? அவளுடைய அழகை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே..?? எவ்வளவு ஒரு பேரின்பமான விஷயம் அது..?? அதைப்போய் இந்த ஆள் பேராப்பு என்கிறானே..??

"யோவ்.. அது எவ்வளவு கிக்கான மேட்டரு..?? அதைப் போய் ஆப்பு கீப்புன்னு அசிங்கமா சொல்றியே..??"


"ஐயோ.. உனக்கு நான் எப்படி புரிய வைப்பேன்..? ஓகே.. எனக்கு நடந்ததை சொல்றேன்.. அன்னைக்கு நானும் லேகாவும் செக்ஸ் வச்சுக்கிட்டது.. ரொம்ப சீரியசான மேட்டரா போயிடுச்சு..!! அவ கன்சீவ் ஆயிட்டா..!! பர்த்டே முடிஞ்சு.. அவ குணம் எனக்கு தெரிஞ்சு.. அவளை நான் கழட்டி விடலாம்னு நெனைக்கிறப்போ.. அவ கன்சீவ் ஆன மேட்டர்னால என்னால தப்பிக்க முடியலை..!! அவ அப்பனும், அண்ணனும் உப்புமூட்டை தூக்கிட்டு போய்.. உருட்டுக்கட்டையாலேயே அடி அடின்னு அடிச்சு.. என்னை தாலி கட்ட வச்சானுக..!! அன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையா.. அவ கூட செக்ஸை அவாய்ட் பண்ணிருந்தா.. எப்படியாவது நான் எஸ்கேப் ஆயிருப்பேன்..!! இன்னைக்கு இவகிட்ட மாட்டிக்கிட்டு.. இப்படி லோல் படணும்னு அவசியமே வந்திருக்காது..!! இப்போ சொல்லு.. எனக்கு ஆப்பு மேல ஆப்பு வர்றதுக்கு காரணமா இருந்த.. அந்த அஜால் குஜால் மேட்டரை.. நான் பேராப்புன்னு சொன்னதுல என்ன தப்பு..??"

"ம்ம்ம்.. வெளக்கம்லாம் நல்லாத்தான் இருக்கு..!! ஆனா.. இதுலாம் ஏன்யா நீ என்கிட்டே முன்னாடியே சொல்லலை..??"

"சொல்லிருக்கலாம்.. ஆனா நீ ஒரு ஜொள்ளு லாரி..!! அவ முத்தம் கொடுக்கப் போறான்னு சொன்னாலே.. நாலு நாள் நாக்கை தொங்க போட்டுட்டு வெயிட் பண்ணுவ..!! இந்த மேட்டரை சொன்னா.. செக்ஸ் ஆசைல.. நீ எனக்கு கொவாப்ரெட் பண்ணலைனா..? அதான் சொல்லலை..!!"

"அப்போ.. இப்போ மட்டும் ஏன் சொல்ற..?"

"இப்போ எனக்கு வேற வழியே இல்ல.. லாஸ்ட் மொமன்ட்..!! இப்போ நீ உஷார் ஆகலைன்னா.. அவ்ளோதான்..!! ப்ளீஸ் அசோக்.. நான் சொல்றதை கேளு..!! எப்படியாவது அவகிட்ட இருந்து தப்பிச்சுக்கோ..!!" சீனியர் கத்த, அவருடைய பதற்றம் இப்போது என்னையும் தொற்றிக் கொண்டது.

"அடடடா.. என்னய்யா பண்ண சொல்ற இப்போ என்னை..?"

"அவ எங்க இருக்கா இப்போ..??"

"சூச்சூ போயிட்டு இருக்குறா..!!"

"சூச்சூவா..?? ஒ..!! சரி சரி.. அவ வர்றதுக்குள்ள.. நீ ரூமை விட்டு வெளில எங்கயாவது ஓடிப் போயிடு..!!"

"எங்கயா ஓட சொல்ற..? வெளில செம மழை..!!"

"எனக்கு அதுலாம் தெரியாது..!! எங்கயாவது ஓடிப் போயிடு ஜூனி.. அங்க இருக்காத.. !! அங்க இருந்தேன்னா.. உனக்கு ஆப்பு.. ஆப்பு.. ஆப்பு..!!!"

அவர் கோர்ட் டவாலி மாதிரி கத்திவிட்டு, காலை கட் செய்தார். எனக்கு கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே புரியவில்லை. கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை..!! செயலற்றவனாய் என் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் சுதாரித்துக் கொண்டு, சீனியர் சொன்ன மாதிரி வெளியே சென்று விடலாம் என்று திரும்பியவன், அங்கே நான் கண்ட காட்சியில்.. ஆணியறைந்தது மாதிரி.. அப்படியே அசையாமல் ஃப்ரீஸ் ஆனேன்..!!

லேகா எனக்கு வெகு அருகே நின்றிருந்தாள். இப்போது அவளுடைய ஈர உடைகளை களைந்துவிட்டு, என்னுடைய சட்டையையும் ஷார்ட்சையும் எடுத்து அணிந்திருந்தாள். சட்டையின் இடையில் இருந்த இரு பட்டன்களை மட்டுமே மாட்டியிருந்தாள். சட்டையின் கீழ்ப்புறத்தை இழுத்துக்கட்டி, ஒரு பெரிய முடிச்சு போட்டிருந்தாள். சட்டையின் மேல்ப்புறம் அகலமாய் திறந்திருக்க.. அவள் உள்ளே அணிந்திருந்த லைட் பிரவுன் நிற ப்ரா தெரிந்தது.. பளிச்ச்ச்ச்சென..!!! ப்ராவுக்குள அடங்காத அவளுடைய மார்புகளின் திரட்சி தெரிந்தது கவர்ச்ச்ச்ச்சியாக..!!

ஒரு கையை இடுப்பிலும், இன்னொரு கையை சுவற்றிலும் ஊன்றி, சாய்ந்தவாறு, ஒயிலாக நின்றிருந்தாள்.. ஈரமான கூந்தலை விரித்துப் போட்டவாறு.. ஈட்டியென பாயும் பார்வைக்கணைகளை எறிந்தவாறு..!!







No comments:

Post a Comment

tamil type box

தமிழில் டைப் செய்ய இந்த பெட்டியை உபயோகியுங்கள் (Ctrl+g அழுத்துவதன் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி டைப் செய்யலாம்)
Related Posts Plugin for WordPress, Blogger...